Skip to main content

பயிற்சி மருத்துவர் பிரசவம் பார்த்ததால் இளம்பெண் உயிரிழப்பு -உறவினர்கள் புகாரால் பரபரப்பு!

Published on 11/08/2020 | Edited on 11/08/2020
Kanyakumari Kottaram

 

கரோனா அச்சத்தால் தமிழகத்தில் பெரும்பாலான தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளை சீனியா் மருத்துவா்கள் கவனிப்பதற்கு பதில் மருத்துவப் படிப்பு முடிந்து ஹவுஸ் சா்ஜன் பயிற்சியில் இருக்கும் மருத்துவா்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கிறார்கள். இதை மருத்துவமனை நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை. இதனால் நோயாளிகளுக்கு உயிர் பலி ஆகக்கூடிய சூழ்நிலைக்கூட ஏற்பட்டுள்ளது. 

 

இப்படித் தான் பயிற்சி மருத்துவா் பிரசவம் பார்த்ததால் இளம் பெண் ஓருவா் உயிரிழந்த சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொட்டாரத்தைச் சோ்ந்த சுரேஷ்குமார் சிங்கப்பூரில் தனியார் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது காதல் மனைவி பவித்ரா (24). நிறைமாத கா்ப்பிணியான இவர் கொட்டாரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக நேற்று அனுமதிக்கபட்டார். 

 

அனுமதித்ததில் இருந்து பயிற்சி மருத்துவா் ஒருவரும் நா்ஸ்சும் தான் பரிசோதனை செய்து வந்தனா். இதற்கு அந்தப் பெண்ணின் உறவினா் சீனியா் மருத்துவா் எங்கே என்று கேட்டதற்கு அந்தப் பயிற்சி மருத்துவா் பதில் எதுவும் கூறாமல் உங்களுக்கு குழந்தை நல்லப்படியாக தானே பொறக்கணும் என அதட்டலாகப் பேசியுள்ளார். அந்தப் பயிற்சி மருத்துவா் சொன்னது போல் பெண்குழந்தையும் சுகப்பிரசவமாக தான் பிறந்துள்ளது.

 

குழந்தை பிறந்த சில நிமிடங்களில் அந்தப் பெண்ணுக்கு ரத்த போக்கு ஏற்பட்டுள்ளது அதைக் கட்டுப்படுத்த அந்தப் பயிற்சி மருத்துவரால் முடியவில்லை. இதனால் அவள் உயிருக்குப் போராடிய சூழ்நிலை ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து அந்தப் பெண்ணை இன்னொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். காலதாமதமாகி கொண்டு சென்றதால் அந்த மருத்துவமனையில் இருந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா் கொஞ்ச நேரத்திலே அந்தப் பெண் பரிதாபமாக இறந்தார்.

 

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினா்கள் பயிற்சி நா்ஸின் தவறான சிகிச்சையால் பெண் இறந்து விட்டதாகக் குற்றம் சாட்டி தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டனா். இதனால் போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'நல்லா சாப்பிடுங்க' -உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த வேட்பாளர்

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
  the candidate who gathered votes by feeding them food

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஏற்கனவே கோடைக்கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தேர்தல் பரப்புரைகள் இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. பல இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் நூதனமான முறையில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. டீக்கடையில் டீ ஆற்றுவது, பரோட்டா சுடுவது, துணித் துவைப்பது போன்ற நூதன முறைகளில் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற வேட்பாளர் ஒருவர் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த நிகழ்வு நடந்துள்ளது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியின் விளவங்கோடு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளரான ராணி, உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவு பரிமாறியதோடு உணவை ஊட்டி விட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளரின் இந்த நடவடிக்கை, அந்தப் பகுதி வாக்களர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.