Skip to main content

'மத்திய அரசு கொண்டுவந்துள்ள அவசர திருத்த சட்டம் விவசாயிகளை அடிமைப்படுத்தும்'-பி.ஆர்.பாண்டியன்

Published on 20/09/2020 | Edited on 21/09/2020
PR PANDIAN PRESSMEET

 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள அவசர திருத்த சட்டம் விவசாயிகளை கார்ப்ரேட்டுகளிடம் அடிமைபடுத்தும் என்றும் இதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்கக்கூடாது என்றும் விவசாய சங்கள் வலியுறுத்தி போராட்டங்கள் நடத்திவருகின்றனர்.

 

இதுகுறித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், "மத்திய அரசு விவசாயிகளுக்கு நலன்பயக்கும் என்கிற பேயரில் விவசாயிகளுக்கு எதிரான கருப்பு சட்டங்களை நிறைவேற்றியதன் மூலம் கார்ப்ரேட்டுகளுக்கு ஆதரவாக அடிமைப்படுத்தும் எனவே இச்சட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும். (ஆன்லைன் டிரேட்) யூகபேர வணிகம் அனுமதிக்கப்பட்டதால் குறைந்தபட்ச ஆதார விலையை (MSP)  நிர்ணயம் செய்து உறுதி படுத்துவது யார்?

 

இந்தியா முழுவதும் தடையற்ற வர்த்தகம், கிடங்குகளில் இருப்பு வைக்க கட்டுபாடுகள் நீக்கப்பட்ட நிலையில் உற்பத்தி பற்றாக்குறை ஏற்பட்டாலோ, பேரிடர் காலத்தில் மாநிலங்களில் உணவு பொருள் தேவை ஏற்படின் பதுக்கலை வெளிக்கொண்டு வர மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டா?

 

ஒப்பந்த சாகுபடி முறையில் கடந்த காலத்தில் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளால் மாநில அரசுகள் தான் விவசாயிகளுடனும், வியாபாரிகளிடமும் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினோம் இதனை தற்போதைய நிலையில் சாத்தியமா?

 

சந்தைப்படுத்துவதை மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்குமா? மத்திய அரசு தனக்கு தேவையான விவசாய விலை பொருட்களை உணவுக் கழகம் மூலம் கொள்முதல் செய்வதற்கான கொள்கை தொடருமா என இவைகள் குறித்து மத்திய  மாநில அரசுகள் தெளிவுப்படுத்த வேண்டும்.

 

தமிழகத்தில் மத்திய அரசின் (FCI) முகவராக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருவது இனி தொடருமா? என்பது கேள்வி குறியாகி உள்ளது. கொள்முதல் நடைமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்போது இச்சட்டம் குறித்து உடனடியாக மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தை கூட்டி மாற்று கருத்துக்களை அறிந்து விவசாயிகள் நலன் கருதி தீர்வு காண மத்திய அரசு முன்வர வேண்டும்.

 

மத்திய அரசு பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்தை கேட்டு தீர்வு காண முயற்சிக்காமல் கார்ப்ரேட்டுகளுக்கு ஆதரவாக வாக்கெடுப்பு நடத்தி மசோதாவை நிறைவேற்ற வேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடன் செயல்பட்டுள்ளது, இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

 

இதற்கு குடியரசு தலைவர் இச்சட்டத்திற்கு அனுமதி அளிப்பதற்கு முன் விவசாயிகளுக்கான பாதிப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு அறிவுரை வழங்க வேண்டும். மறுக்கும் பட்சத்தில் மசோதாக்களை திருப்பி அனுப்பி வைத்து மாநில அரசுகளின் கருத்தறிந்து உரிய மாற்றங்களுடன் மீண்டும் பாராளுமன்ற விவாதத்திற்கு உட்படுத்த முன்வர பிரதமருக்கு உத்தரவிட வேண்டும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.