Skip to main content

மின்துறை அலட்சியம்... அடுத்தடுத்து பறிபோகும் உயிர்கள்... கண்டுகொள்ளாத அரசு!

Published on 13/01/2021 | Edited on 13/01/2021

 

 Power sector negligence ... Successive loss of life ... Government does not see!

 

தமிழ்நாட்டில் மின்துறையின் அலட்சியத்தால் அடுத்தடுத்து பல உயிர்கள் பலியாகி உள்ளது. இதில் மின் வாரிய ஊழியர்களின் உயிர்களும் பறிபோகியுள்ளது. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் தாழ்வாக சென்ற மின்கம்பியில் தனியார் பேருந்து உரசியதால் 4 உயிர்கள் பறிபோனது நேற்று.

 

அந்தச் சோகம் மறைவதற்குள் இன்று அதே தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூர் அருகில் உள்ள கல்யாணஓடை கிராமத்தில் தண்ணீர் செல்லும் மறவக்காடு வாய்காலை கடக்க பழைய மின்கம்பமே பாலமாக உள்ளது. அதே ஊரைச் சேர்ந்தவர் விவசாய கூலித் தொழிலாளி மாரியப்பன் - முத்துலெட்சுமி தம்பதிகள். இவர்களது மகன்கள் தினேஷ் (12), கௌதம் (10) ஆகிய இருவரும் இந்த மின்கம்ப பாலத்தில் ஏறிக்கடக்க முயன்றபோது மின்கம்ப பாலத்திற்கு மேலே தண்ணீர் சென்றுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் இருந்து அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பி தண்ணீரில் கிடந்ததால் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இக்கரையில் இருந்து அக்கரைக்குச் செல்ல ஒருவர் பின் ஒருவராக செல்லும் பேது அடுத்தடுத்து மின்சாரம்தாக்கி தினேஷ் மற்றும் கௌதம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மின்கம்பி அறுந்து கிடப்பதை மின்வாரியத்திற்கு தகவல் சொன்ன பிறகும் மின்சாரத்தை துண்டிக்காததால் தான் இந்த இரு பிஞ்சுகளையும் இழந்து நிற்கிறது அந்தக் குடும்பம். குழந்தைகளின் சடலங்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்வாரிய அலுவலர்கள் மீது மதுக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

 Power sector negligence ... Successive loss of life ... Government does not see!

 

ஆனாலும் மின்வாரிய அலட்சியத்தால் இப்படி பல உயிர்கள் போகிறதே என்ற நமது கேள்விக்கு, ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி கூறும் போது, ''மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் உடனே பியூஸ் போகனும். ஆனால் அடிக்கடி பியூஸ் போகிறது என்று கனமாக பியூஸ் போட்டு வைத்துவிடுகிறார்கள். மேலும் மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் உடனே மின்சாரத்தை நிறுத்திவிட்டு சம்பவ இடத்திற்கு சென்று சீரமைப்பு பணி செய்ய வேண்டும். ஆனால் மின்வாரிய அலுவலகங்களில் ஊழியர் பற்றாக்குறை அதிகம். அதாவது பல கிராமங்களை ஒருவரே கவனிக்க வேண்டியுள்ளதால் சரியான நேரத்திற்கு  பாதிப்பு ஏற்படும் இடங்களுக்கு போக முடிவதில்லை. மொத்தத்தில் ஒப்பந்த ஊழியர்களை வைத்தே பணிகள் நடக்கிறது. அதிலும் மின் ஊழியர்களுக்கு அரசாங்கம் கொடுக்க வேண்டிய எந்த பாதுகாப்பு உபகரணங்களும் சரிவர கொடுப்பதில்லை. அதனால் மின் ஊழியர்களும் ஒப்பந்த ஊழியர்களுமே மின்சாரம் தாக்கி இறக்கிறார்கள்.

 

இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எழில் நகரில் 147 வீடுகளுக்கு மேலே உயரழுத்த மின்கம்பிகள் போகிறது. கடந்த சில வருடங்களில் 6 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பிறகும் கூட அந்த மின்பாதையை மாற்றி அமைக்க முன்வரவில்லை. அந்த நகர் வாசிகள் செலவு செய்யத் தயாராக இருந்தும் கூட மின்பாதையை மாற்றி அமைக்காமல் அலட்சியம் காட்டுகிறார்கள் மின்வாரிய அதிகாரிகள். அடுத்த உயிரை பறிக்கும் முன்பே மின்பாதையை மாற்றிக் கொடுங்கள் என்று மின்வாரியம் முதல் மாவட்ட நிர்வாகம் வரை பலமுறை மனு கொடுத்தும் பலனில்லை. இப்போது மழைக்காலம் வேறு. அதனால் பேரிடர் காலங்களில் மின்வாரியம் அலட்சியமாக இல்லாமல் அலார்ட்டாக இருக்க வேண்டும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சரின் கார் கதவை திறந்ததால் விபத்து; பா.ஜ.க தொண்டருக்கு நேர்ந்த சோகம்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
 Tragedy of BJP worker on Union minister's car door opened in accident

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது.  ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல், வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது.

மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது.

பெங்களூர் வடக்கு உள்பட 14 தொகுதிகளில் முதற்கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், பெங்களூர் வடக்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் மத்திய அமைச்சர் ஷோபா போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் ஷோபா, தனது தொகுதியில் தீவிர பிரச்சாரத்தின் போது, கார் கதவை ஓட்டுநர் திடீரென திறந்ததால், பா.ஜ.க தொண்டர் விபத்தில் சிக்கிய பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சர் ஷோபா, நேற்று (08-04-24) காலை வழக்கம்போல், தனது காரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு புறப்பட்டு சென்றார். அவரது கார், கே.ஆர்.புரம்  பகுதியில் உள்ள கோவில் அருகே சென்று போது, ஷோபாவின் கார் ஓட்டுநர் சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி, தன்பக்கம் இருந்த கார் கதவை திடீரென திறந்துள்ளார். அப்போது, மத்திய அமைச்சரின் காருக்கு பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர், மத்திய அமைச்சர் காரின் கதவி மீது மோதினார். இதில், இருசக்கர வாகனத்தில் இருந்த அவர் சாலையிம் நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.

அந்த சமயத்தில் பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து, கீழே விழுந்த அவர் மீது ஏறி இறங்கியது. இதில், பலத்த காயமடைந்து அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு, அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கே.ஆர்.புரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், விபத்தில் பலியானவர், அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (55), என்பதும், பா.ஜ.க கட்சியின் தீவிர தொண்டரான பிரகாஷ், தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது. மத்திய அமைச்சர் ஷோபாவின் கார் கதவை திடீரென திறந்ததால், பா.ஜ.க தொண்டர் ஒருவர் விபத்தில் சிக்கிய பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

150 அடி தேர் கவிழ்ந்து விபத்து; வெளியான பரபரப்பு காட்சி

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
150 feet chariot overturned accident; Exciting scene released

திருவிழாவில் பக்தர்களால் வடம் பிடித்து இழுத்துச் செல்லப்பட்ட 150 அடி உயரம் கொண்ட தேர் சாய்ந்து விழும் பரபரப்பு வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஹூஸ்கூர்  என்னும் கிராமத்தில் தேர் திருவிழா இன்று நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெறும் கோவில் திருவிழாவில் இரண்டாவது நாளான இன்று தேர் திருவிழா நடைபெற்றது. சுமார் 150 அடி உயரம் கொண்ட அலங்கரிக்கப்பட்ட தேரை பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக தேர் சாய்ந்து விழுந்தது. தேர் சாய்ந்து விழுவதை சுதாரித்துக்கொண்ட பக்தர்கள் உடனடியாக அங்கிருந்து ஓடியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால் இதில் ஏராளமான பக்தர்கள் காயத்துடன் மீட்கப்பட்டு அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், 150 அடி தேர் சாய்ந்து விழுந்த இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.