Skip to main content

கோழிப் பண்ணையில் மர்மமாக உயிரிழந்த தொழிலாளிக்கு நீதிகேட்டு பா.ம.க.வினர் சாலைமறியல்!

Published on 25/01/2022 | Edited on 25/01/2022

 

poultry farm employee incident pmk leaders and police

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த வேப்பூர் பகுதிக்குட்பட்ட பாசார் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவர், கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இவரது கோழிப்பண்ணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள வேலூர் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் மகனான கணேசன் (வயது 42) என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் ஜனவரி 23- ஆம் தேதி பண்ணை உரிமையாளர் நாகராஜ், கணேசன் இறந்துவிட்டதாக அவரது உறவினர்களுக்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார். இதனால் பதறிப்போன கணேசனின் மகன் மற்றும் அவரது உறவினர்கள், கணேசனின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 

இப்புகாரில் தனது தந்தை கணேசனுக்கும் அவர் பணி செய்த கோழிபண்ணை உரிமையாளருக்கும், சம்பள பிரச்சினை இருந்து வந்துள்ளதாகவும், இந்த மாதம் சம்பளம் வாங்கிக்கொண்டு வேலையை விட்டுவிட்டு  ஊருக்கு வருவதாகவும்  கூறியிருந்த நிலையில், தனது தந்தை கணேசன் இறந்திருப்பதல் அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக  புகார் அளித்தார். 

 

இப்புகார் குறித்து வேப்பூர் காவல் நிலைய அதிகாரிகள் குற்றவாளியை கைது செய்யவில்லை எனவும், இறந்தவர் உடலை முன்டியம்பாக்கம் அனுப்பி வைத்த காவல்துறையினர், அச்செய்தியை கணேசன் குடும்பத்தினருக்கு தெரிவிக்காததால், குற்றத்தை மறைக்க காவல்துறை முயற்சிப்பதாக புகார் கூறுகின்றனர்.

 

அதையடுத்து காவல்துறையை கண்டித்தும், நாகராஜ் மீது நடவடிக்கை எடுக்கவும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், பா.ம.க.வின் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் கார்த்திக்கேயன்  தலைமையில் 100-  க்கும் மேற்பட்டோர் வேப்பூர்- விருத்தாசலம் சாலையில் அரைமணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

இதுகுறித்து தகவலறிந்து வந்த திட்டக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் சிவா சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது  இறந்துபோன கணேசனின் உடலை உடற்கூறு ஆய்வு செய்யும் போது, வீடியோ பதிவு எடுக்க வேண்டும். உறவினர்கள் உடற்கூறு ஆய்வின் உடனிருக்க வேண்டும். இறந்துபோன கணேசனுக்கு மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். கோரிக்கைகளை நிறைவேற்ற தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் கூறியதையடுத்து சாலை மறியலை அவர்கள் கைவிட்டனர். 

 

இச்சம்பவத்தால் விருத்தாசலம்- வேப்பூர் சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.