Skip to main content

'ஏழைப் பிள்ளைகளின் மருத்துவக் கனவை நினைவாக்க வேண்டும்!' - முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்!

Published on 14/12/2020 | Edited on 14/12/2020

 

'Poor children's medical dream must be remembered' - Struggle to send a letters to chief minister

 

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கடந்த 5 நாட்களாக மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கும் அதே அளவிலான, கல்விக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

 

அவர்கள் ஒவ்வொரு நாளும் அறவழியில் 'டார்ச் லைட்' போராட்டம், கருப்புப் பட்டை அணிந்து போராட்டம் எனப் பல வடிவங்களில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், திங்கள் கிழமை 5 -ஆம் நாளில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பெற்றோர்களுடன் இணைந்து மருத்துவக் கல்லூரி முன், மதிய உணவு இடைவெளியின் போது, அனைவரும் ஒன்று கூடி பெற்றோர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

போராட்டத்தில் 'தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோஷங்களை எழுப்பினார்கள். இதனைத் தொடர்ந்து அனைத்து மருத்துவ மாணவ மாணவிகள் தமிழக முதல்வருக்குத் தனித்தனியாகக் கடிதம் எழுதி கையெழுத்திட்டு அனுப்பும் போராட்டத்தை நடத்தினார்கள். இதனால், கல்லூரி வாயிலில் 1 மணி நேரம் பரபரப்பாக இருந்தது. இதில் அனைத்து மாணவர்களும் சமூக இடைவெளியைப் பின்பற்றி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

'Poor children's medical dream must be remembered' - Struggle to send a letters to chief minister

 

இதனைத் தொடர்ந்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் பல்கலைக்கழக வாயிலில் உள்ள ராஜேந்திரன் சிலை அருகே மருத்துவ மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்  கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் தலைமை தாங்கினார். இதில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள்.

 

'Poor children's medical dream must be remembered' - Struggle to send a letters to chief minister

 

இதனைத் தொடர்ந்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ரவீந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கி அவர்களின் கல்விக் கட்டணத்தை அரசு ஏற்றதை வரவேற்கிறோம். அதேபோல் இந்தக் கல்லூரியில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களின் பிள்ளைகள் மருத்துவம் படிக்கிறார்கள். தற்போது ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தமிழக முதல்வர் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக சட்டசபையில் அறிவித்துள்ளார்.

 

இந்த நிலையில், தற்போது அரசு மருத்துவக் கல்லூரியாகச் செயல்படும் இந்தக் கல்லூரியில் ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணம் தனியார் கல்லூரியை விட அதிகமாக உள்ளது. எனவே, தமிழக முதல்வர் இதில் தலையிட்டு உடனடியாக உயர் கல்வித் துறையின் கீழ் உள்ள இந்தக் கல்லூரியை மருத்துவத் துறையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுத்து, ஏழைப் பிள்ளைகளின் மருத்துவக் கனவை நினைவாக்க வேண்டும் என்றார்.

 

மேலும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர், நீதிமன்ற உத்தரவுப்படிதான் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறியது ஏற்புடையது அல்ல. அவர் கூறுவது போல் நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடவில்லை என்பதுதான் உண்மை என்றார். சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து மாணவர்களின் போராட்டம் பல்கலைக்கழகத்தை தாண்டி, தமிழக அளவில் விரிவுபடுத்தப்படும் எனவும் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.