Skip to main content

சம்பள பாக்கி கேட்டு ஏழாவது நாளாக போராடிய ‘பாசிக், பாப்ஸ்கோ’ தொழிலாளர்கள் கைது!  

Published on 17/09/2020 | Edited on 17/09/2020

 

Pondycherry ‘BASIC, Popsco’ workers arrested.. for seventh day demanding salary issue

 

 

பாசிக் மற்றும் பாப்ஸ்கோ நிறுவனங்கள் கடந்த காலங்களில் நல்ல லாபம் ஈட்டி சிறப்பாக செயல்பட்டுவந்தது. இந்நிறுவனங்களில் 1,800க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்துவந்தார்கள். இந்நிறுவனங்களில் நடைபெற்ற ஊழல் முறைகேடு, நிர்வாக திறமையின்மை காரணமாக நாளடைவில் நலிவுற்று வந்தது. இதனை ஆட்சியாளர்கள் சரிசெய்யாமல் இந்நிறுவனத்தை முடக்கி, செயல்படாமல் நிறுத்தி வைத்து உள்ளார்கள். இதனால் இங்கு பணிபுரியக்கூடிய தொழிலாளர்களுக்கு சம்பளம்  வழங்கப்படாமல் உள்ளதால் இங்கு பணிபுரியக்கூடிய தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு பல தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்கள். இந்த பிரச்சனைகளை சரிசெய்ய வலியுறுத்தி இங்கு பணிபுரியக்கூடிய தொழிலாளர்கள் நீண்ட காலமாக போராடி வருகிறார்கள். ஆட்சியாளர்களும் இந்த பிரச்சனைகளை சரிசெய்து நிலுவை சம்பளத்தை வழங்கவும், நிறுவனத்தை நடத்துவதற்கும் எந்த முயற்சியும் இல்லாமல் அலட்சியப் போக்கில் இருந்து வருகிறார்கள்.

 

அரசின் இந்த போக்கை கண்டித்தும், இந்நிறுவனங்களை திறந்து நடத்த வலியுறுத்தியும், நிலுவை சம்பளத்தை வழங்க வலியுறுத்தியும் (10. 09.2020) முதல்  பிரச்சனைகளை தீர்க்கும் வரை சட்டமன்றம் முன்பு  தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். இரண்டாவது நாள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தையும், மூன்றாவது நாள் வயிற்றில் ஈரத்துணி கட்டி போராட்டத்தையும், நான்காவது நாள் தட்டேந்தி பிச்சையெடுக்கும் போராட்டத்தையும், ஐந்தாவது நாள் சங்கு ஊதி, மணி அடித்து காத்திருப்பு  போராட்டத்தையும், ஆறாவது நாளான நேற்றும்  காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில் ஏழாவது நாளான இன்று சட்டமன்றம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். 

 

இந்த போராட்டங்களில் முன்னாள் அமைச்சர் ஆர்.விசுவநாதன், விவசாய சங்க மாநில தலைவர் து.கீதநாதன், ஏ.ஐ.டி.யு.சி மாநில செயல் தலைவர் V. S.அபிஷேகம், மாநில தலைவர் I.தினேஷ் பொன்னையா,  மாநில பொதுச்செயலாளர் K.சேது செல்வம், மாநில துணைத்தலைவர் ப.முருகன், விவசாய சங்க செயலாளர் பெருமாள், விவசாய சங்க பொருளாளர் v.கலியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். 

 

Pondycherry ‘BASIC, Popsco’ workers arrested.. for seventh day demanding salary issue

 

 

இந்த தொடர் போராட்டங்கள் குறித்து ஏ.ஐ.டி.யு.சி மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் கூறுகையில், “பாசிக் மற்றும் பாப்ஸ்கோ நிறுவனங்கள் கடந்த காலங்களில் நல்ல லாபம் ஈட்டி சிறப்பாக செயல்பட்டுவந்தது. இந்நிறுவனங்களில் 1,800க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்துவந்தார்கள். இந்நிறுவனங்களில் நடைபெற்ற ஊழல் முறைகேடு, நிர்வாக திறமையின்மை காரணமாக நாளடைவில் நலிவுற்றுவந்தது. இதனை ஆட்சியாளர்கள் சரிசெய்யாமல் இந்நிறுவனத்தை முடக்கி, செயல்படாமல் நிறுத்தி வைத்துள்ளார்கள். இதனால் இங்கு பணிபுரியக்கூடிய தொழிலாளர்களுக்கு சம்பளம்  வழங்கப்படாமல் உள்ளதால் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு, பல தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்கள்.

 

இந்த பிரச்சனைகளை சரி செய்ய வலியுறுத்தி இங்கு பணிபுரியக்கூடிய தொழிலாளர்கள் நீண்ட காலமாக போராடி வருகிறார்கள். ஆட்சியாளர்களும் இந்த பிரச்சனைகளை சரிசெய்து நிலுவை சம்பளத்தை வழங்கவும்,  நிறுவனத்தை நடத்துவதற்கும் எந்த முயற்சியும் இல்லாமல் அலட்சியப் போக்கில் இருந்து வருகிறார்கள். அரசின் இந்த போக்கை கண்டித்தும், இந்நிறுவனங்களை திறந்து நடத்த வலியுறுத்தியும், நிலுவை சம்பளத்தை வழங்க வலியுறுத்தியும் 10.09.2020 முதல் பிரச்சனைகளை தீர்க்கும் வரை சட்டமன்றம் முன்பு  தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். சம்பளம் கேட்டு போராடிய பாசிக், பாப்ஸ்கோ தொழிலாளர்களை ஏழாவது நாளான இன்று (16-09-2020) காங்கிரஸ் அரசு காவல்துறையை வைத்து கைது செய்து கோரிமேடு காவலர் சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைத்துள்ள நிலையில் அங்கும் போராட்டம் தொடர்கிறது. கோரிக்கைகள் நிறைவேறும் வரையிலும் தொடரும்" என்றார்.

 

இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சண்டே மார்க்கெட் சங்கம், கட்டிடத் தொழிலாளர் சங்கம்,  சுமைதூக்குவோர் சங்கம்,  ஆட்டோ சங்கம், உழவர்கரை நகராட்சி சங்கம்,  கைத்தறி சங்கம், KVK சங்கம்,  பாண்டெக்ஸ் சங்கம்,  பேருந்து சங்கம்,  விற்பனைக்குழு சங்கம்,  பாண்லே முகவர் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து கண்டன உரையாற்றினர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாரத்தில் 4 நாட்கள் வேலை 3 நாட்கள் விடுமுறை - நாளை முதல் அமல்

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
Shorter working hours scheme came into force in Germany from tomorrow

உலக நாடுகள் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் பொருளாதார வளர்ச்சியில் இருந்து மீள ஜெர்மனி குறைவான வேலை நேரம் என்ற முறையை கடைப்பிடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஒரு வாரத்திற்கு 4 நாட்கள் வேலை என்ற குறைவான வேலை நேரம் என்ற முறையை உலகின் வளர்ந்த நாடுகள் கூட கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்த முறை மூலம் ஊழியர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியமாவதாகவும், அதன் மூலம் அவர்களது செயல்திறன் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 21 நாடுகளில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் வேலை நேரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜெர்மனியிலும் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற முறை நாளை(1.2.24) முதல் கடைப்பிடிக்கப்படவுள்ளது. மீதமுள்ள 3 நாட்கள் விடுமுறை. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஜெர்மனிய தொழிலாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்த நிலையில் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது. முதற்கட்டமாக சோதனை முறையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டம் அடுத்த 6 மாதத்திற்கு மேற்கொள்ளப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

Next Story

‘16 வருடமாகப் பார்த்து வந்த வேலை நாளையிலிருந்து இல்லை’ - பணியாளர்கள் கவலை

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Trichy 120 sanitation workers sacked from tomorrow

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 16 வருடங்களாகப் பணியாற்றி வரும் 120 தூய்மைப் பணியாளர்கள் நாளையுடன் வேலையை விட்டு நிறுத்தப்பட உள்ளனர். இதற்காகத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தங்களுடைய வாழ்வாதாரம் இந்த தொழிலை நம்பி உள்ளதால் எங்களை வேலையில் இருந்து அகற்றக்கூடாது என வலியுறுத்தி நேற்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இந்நிலையில் இன்று ஸ்ரீரங்கம் ரெங்கா கோபுரம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தீர்மானித்த தினக்கூலி ரூ.678 வழங்காததைக் கண்டுகொள்ளாத கோவில் நிர்வாகத்தைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் இளையராஜா தலைமை தாங்கினார். சங்க மாவட்டச் செயலாளர் மாறன் கண்டன உரையாற்றினார். சிபிஎம் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா, வாலிபர் சங்க செயலாளர் சந்துரு, சிஐடியூ நிர்வாகிகள் சுப்ரமணி, கோவிந்தன், ரகுபதி, அன்புசெழியன், வீரமுத்து, கிருஷ்ணமூர்த்தி, முத்து, கணேசன் உள்ளிட்ட தூய்மைப் பணியாளர்கள் மொத்தம் 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.