Skip to main content

ஈரோட்டில் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்த அணிவகுத்த அரசியல் கட்சிகள்!

Published on 15/09/2022 | Edited on 15/09/2022

 

Political parties marched to pay respect to Anna statue in Erode!

 

பேரறிஞர் அண்ணாவின் 114 வது  பிறந்தநாள் நிகழ்வையொட்டி தந்தை பெரியார் பிறந்த மண், அண்ணா பெரியாருடன் ஒன்றாக பணி புரிந்த ஊரான ஈரோட்டில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

 

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் திராவிட இயக்க தலைவர்களில் ஒருவர் பேரறிஞர் அண்ணாவுக்கு 114வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுக்க அரசியல் கட்சியினர், பல்வேறு இயக்க நிர்வாகிகள், தொண்டர்களால்  கொண்டாடப்பட்டது.

 

ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பில் மாவட்ட அவைத்தலைவர் குமார் முருகேஷ் தலைமையில், திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் கந்தசாமி முன்னிலையில் அண்ணா, பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவகுமார், நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், கொள்கை பரப்பு இணை செயலாளர் சந்திரகுமார், மாவட்ட துணை செயலாளர்கள் செந்தில்குமார், செல்லப்பொன்னி, மாவட்ட பொருளாளர் பழனிசாமி, மாநகராட்சி மேயர் நாகரத்தினம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் குமாரசாமி, மணி ராசு, பகுதி செயலாளர் அக்னி சந்துரு, ராமச்சந்திரன், மணிகண்டராசு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

ஈரோடு வீரப்பன்சத்திரம் மண்டல அலுவலகத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாநகர செயலாளர் சுப்பிரமணி, முன்னாள் கவுன்சிலர் நடராஜன் தலைமையில் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பெருந்துறை ஒன்றியத்தில் நடந்த நிகழ்ச்சியில், தெற்கு ஒன்றிய செயலாளர் கே.பி.சாமி தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், பெருந்துறை பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன், துணை தலைவர் சண்முகம், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூர் செயலாளர் திருமூர்த்தி, பேரூராட்சி தலைவர் செல்வன், துணை தலைவர் சக்திகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

இதேபோல், ம.தி.மு.க. உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அ.தி.மு.க.சார்பில், ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு மாநகர் மாவட்டச் செயலாளர் ராமலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ.க்கள் தென்னரசு, பாலகிருஷ்ணன், முன்னாள் எம்பி செல்வக்குமார சின்னையன், மாவட்ட அவைத் தலைவர் ராமசாமி, ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் வீரக்குமார், பெரியார் நகர் பகுதி செயலாளர் மனோகரன்,  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் சார்பில் அதன் ஈரோடு மாவட்டச் செயலாளர் சோழா ஆசைத்தம்பி தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், அ.தி.மு.க. மாணவரணி இணை செயலாளர் நந்தகோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.