Skip to main content

ஆடு திருடர்களைக் கொத்தோடு தூக்கிய போலீசார்...!

Published on 27/11/2021 | Edited on 27/11/2021

 

 The police who lifted the goat thieves ...!

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை ஏழை விவசாயிகள் வளர்க்கும் ஆடுகள் திருடு போனால் காவல் நிலையம் வந்து புகார் கொடுப்பார்கள். அதன் பிறகு புகாரைக் கொடுத்தவரும் வாங்கியவர்களுமே மறந்து போவார்கள். எப்போதாவது பொதுமக்களே ஆடு திருடர்களைப் பிடித்துக் கொடுத்தால் சிறைக்கு அனுப்புவார்கள். ஏற்கனவே புகார் கொடுத்தவர்கள் வந்து கேட்டுப் பார்த்து வழக்கமான ஏமாற்றத்துடனேயே வீடு திரும்புவார்கள்.

 

இப்படித் திருடு போன பல ஆடுகள் தான் அந்தந்த பல நூறு குடும்பங்களின் வாழ்வாதாரம் என்பது மறந்து போகிறது. இந்த சூழ்நிலையில்தான் கடந்த வாரம் திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் ஆடு திருடர்களை விரட்டி வந்து புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் காவல் சரகத்தில் வைத்துப் பிடித்த போது, தஞ்சை மாவட்டம் தோகூர் கிராமத்தைச் சேர்ந்த ஆடு திருடன் மணிகண்டன் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அவனது உறவுக்கார சிறுவர்கள் இருவர் என மூவராலும் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கல்லால் தாக்கி தடுமாற வைத்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்படுகிறார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

 

அதன் பிறகு தான் காவல் உயர் அதிகாரிகள் ஆடு திருடர்களைப் பிடிப்போம் என்று உறுதியாகக் கூறியதோடு ஆடு திருடர்களை பிடிக்கத் தனிப்படை அமைத்தனர். அந்த தனிப்படைகள் தான் தற்போது உள்ளூர் காவல் நிலையங்களால் புறக்கணிக்கப்பட்ட ஆடு திருடர்களைத் தூக்கும் பணியைச் செய்யத் தொடங்கியுள்ளனர்.

 

 The police who lifted the goat thieves ...!

 

திருமயம் காவல் எல்லையில் 9 ஆடுகளைத் திருடிய  கந்தர்வகோட்டை வேளாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனி மகன் சூரிய மூர்த்தியைக் கைது செய்து அவனிடம் இருந்த 9 ஆடுகளையும் பறிமுதல் செய்தனர்.

 

 The police who lifted the goat thieves ...!

 

அதே போல கறம்பக்குடி பகுதியில் வைத்து வேளாங்கண்ணி பகுதியைச் சேர்ந்த ராசு மகன் சதீஷ் (31) என்பவனைப் பிடித்து விசாரிக்க.. நாங்க பல டீம் இருக்கோம். நாங்க பைக்ல ஆடு திருட கிளம்பிட்டு கந்தர்வகோட்டை நெப்புகை அழகப்பன் அண்ணனுக்கு தகவல் சொல்லிட்டா கரெக்டா கார் எடுத்துக்கிட்டு வந்துடுவார். நாங்க பைக்ல தூக்கிட்டு வரும் குட்டியை கார்ல தூக்கி போட்டுக்கும் ஸ்பாட்லயே பணம் கொடுப்பார். அண்ணன்கிட்ட மட்டும் சுத்தமான கறி கிலோ ரூ.600 க்கு கிடைக்கும். சனி ஞாயிறுல 10 ஆடுகளை கறியாக்கி வித்துடுவார். இப்ப கூட அவர் தோட்டத்துல நிறைய ஆடுகள் நிற்குது என்று சொல்ல, தனிப்படை போலீசார் 52 வயது அழகப்பனையும் தூக்கிக் கொண்டு அவனது தோட்டத்தில் நின்ற 32 ஆடுகளையும் கைப்பற்றினர். இன்னும் மாவட்டம் முழுவதும் ஆடு திருடர்களைத் தூக்கிடுவோம் என்கின்றனர் தனிப்படை போலீசார்.

 

இப்படி ஒவ்வொரு புகாருக்கும் உடனே நடவடிக்கை எடுத்திருந்தால் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் உயிர் போய் இருக்காது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

முதல் கூட்டத்திலேயே முட்டிக் கொண்ட தி.மு.க. - காங்கிரஸ்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
DMK Congress which was knocked out in the first meeting

ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுயில் உள்ள அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியின் இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திமுக புதுக்கோட்டை மா.செ அமைச்சர் ரகுபதி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், மெய்யநாதன், ராமநாதபுரம் மா.செ. காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இந்தியா கூட்டணி ராமநாதபுரம் வேட்பாளர் கே.நாவஸ்கனி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். கூட்டத்தில் பேச வந்த அறந்தாங்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம் பேசும், “இப்போது நாங்கள் கூட்டணி கட்சிக்கு வாக்கு சேகரிப்போம் ஆனால், அறந்தாங்கி தொகுதியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அமைச்சர்கள் செய்து தர வேண்டும் இல்லை என்றால் தற்கொலை முயற்சியோடு அறிவாலயம் நோக்கி போவோம்” என்று பேசி கூட்டத்தில் சலசலப்பை உருவாக்கினார்.

அதனைத் தொடர்ந்து பேச வந்த காங்கிரஸ் கட்சியின் புதுக்கோட்டை தெற்கு மாவட்டத் தலைவர் ராம.சுப்புராம் பேசும் போது, “அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் அவசரப் பணியாக டெல்லி சென்றுள்ளதால் இங்கு வரமுடியவில்லை. ஆனால் இன்றைய போஸ்டரில் அவர் படம் இல்லை இனிமேல் அச்சடிக்கும் போஸ்டர்களில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. படத்தையும் போட வேண்டும்” என்றார். மேலும் அமைச்சர் ராஜ. கண்ணப்பன் பேசும்போது, “நேற்று வேட்பாளர் அறிவிப்பு இன்று விஜயபாஸ்கர் வீட்டில் ரைடு. திராவிடர் இயக்கத்தை ஒழிக்க நினைக்கிறார்கள் பா.ஜ.க.வினர். அது ஒருபோதும் நடக்காது. பாசிக பா.ஜ.க. தான் நம்ம எதிரி அவர்களை வீழ்த்துவோம். அமைச்சர் மெய்யநாதன், “கடந்த முறை பெற்றுத் தந்த வாக்குகளைவிட அதிக வாக்குகளை பெற்றுத் தருவோம்” என்றார்.

DMK Congress which was knocked out in the first meeting

தலைமையுரையாற்றிய அமைச்சர் ரகுபதி, “முதல் கூட்டத்திலேயே சொல்கிறோம் சந்தோசமாக செல்லுங்கள், அறந்தாங்கி தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத் தருவோம். ராமநாதபுரத்திற்கு குடிநீர் கொண்டு வருவதை நாங்கள் தடுக்கவில்லை. எங்களுக்கும் கொஞ்சம் வேண்டும் என்று தான் சொன்னோம்” என்றார். மேலும் உதயம் சண்முகத்திற்கு பதில் சொல்லும் விதமாக, “இந்த முறை ஏணிக்கு வாக்களியுங்கள் அடுத்த முறை (2026) தலைவர் விரும்பினால் உதயசூரியனுக்கு வாக்களிக்கலாம். அதே போல இனிமேல் அச்சடிக்கப்படும் ஒவ்வொரு போஸ்டரிலும் அறந்தாங்கி எம்.எல்.ஏ. படம் அச்சடிக்கப்படும்” என்று காங்கிரஸ் சுப்புராமுக்கும் பதில் கூறுவது போல பேசினார். இறுதியாக பேசிய வேட்பாளர் நவாஸ்கனி, “அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி அதிக ஓட்டுகள் பெற்றுத்தர வேண்டும்” என்றார்.

அறந்தாங்கி தொகுதி முதல் செயல்வீரர்கள் கூட்டத்தில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் படம் இல்லாமல் வடிவமைக்கப்பட்டதும், 2026 சட்மன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க முடியவில்லை என்றால் அறிவாலயத்தில் தற்கொலை முயற்சி செய்வோம் என்று பேசியதும் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.