Skip to main content

வெளியூர் சென்றதால் உயிர் தப்பிய காதல் ஜோடி... வெறிச்செயலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்த காவல்துறையினர்!

Published on 09/11/2021 | Edited on 09/11/2021

 

The police who arrested those involved in the hysteria

 

தென்காசி மாவட்டத்தின் சுரண்டை நகரம் அருகேயுள்ள சிவகுருநாதபுரத்தின் பாறையடித் தெருவைச் சேர்ந்தவர் விவேக்குமார் (27). இவருடைய தந்தையான ராதாகிருஷ்ணன் காலமானதால் அவர் நடத்திவந்த காய்கறிக் கடையை தொடர்ந்து நடத்திவருகிறார். எனினும், விவேக்குமாரின் குடும்பத்தினர் ஓரளவு வசதி வாய்ப்பு கொண்டவர்கள்.

 

விவேக்குமாரும் சுரண்டையைச் சார்ந்த பெரியமாரிதுரையின் மகள் அன்னலட்சுமி (26) இருவரும் பள்ளிப்படிப்பு முதல், ஒன்பது ஆண்டுகளாகவே தொடர்ந்து காதலித்து வந்திருக்கின்றனர். இருவருக்குள்ளேயும் ஆழமான காதல். இருவரும் வெவ்வேறு பிரிவைச் சார்ந்தவர்கள் என்றாலும், இவர்களது காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதையடுத்து காதலர்கள் நேற்று முன்தினம் சுரண்டை காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து பாதுகாப்பு கேட்டுள்ளனர். இரு வீட்டாரையும் காவல்நிலையம் வரவழைத்த போலீசார், அவர்கள் இருவரும் திருமண வயது வந்த மேஜரானவர்கள். அதனால் எந்தவிதமான பிரச்சினையும் கூடாது என அறிவுறுத்தி எழுதி வாங்கியுள்ளனராம்.

 

The police who arrested those involved in the hysteria

 

இதன்பின் நேற்றிரவு திருமணம் செய்து கொண்ட காதலர்கள் உடனடியாக பாதுகாப்பின் பொருட்டு வெளியூர் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. ஆனால் காதல் திருமண ஜோடி வீட்டில் இருப்பதாகக் கருதிய மர்ம நபர்கள் சிலர், நேற்று நள்ளிரவு விவேக்குமாரின் வீட்டில் அவர்களைத் தீர்த்துக் கட்டும் வகையில் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இதனால் வீட்டிலிருந்த மின் மோட்டார் பம்ப் செட் மற்றும் பிளாஸ்டிக் குடங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இதுகுறித்து விவேக்குமாரின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தியுள்ளனர்.

 

வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய சுரண்டை இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான டீம், கழுநீர்குளத்தின் மதன்குமார், அதே ஊரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், சென்னையைச் சேர்ந்த சோமசுந்தரம் மகன் கார்த்திக் மூவரையும் கைது செய்து மேல் விசாரணை நடத்திவருகின்றனர். காதல் திருமணத்திற்கு எதிரான ஆணவப் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் சுரண்டைப் பகுதியைப் பரபரப்பாக்கியிருக்கிறது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.