Skip to main content

காவல்நிலையம் முன்பு அரிவாளோடு டிக் டாக்; மீண்டும் சிறைக்கு சென்ற இளைஞர்கள்!

Published on 17/07/2019 | Edited on 17/07/2019

பெண் ஒருவரிடம் தகராறு செய்த வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் வந்த 3 பேர் கையெழுத்திட காவல் நிலையத்திற்கு வந்த போது அரிவாளுடன் டிக் டாக் வீடியோ வெளியிட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இளைஞர்கள் அந்தந்த காலத்தில் ஏதேனும் ஒன்றின்மீது அதீத ஈடுபாடு கொண்டு அதில் இருக்கும் விபரீதங்களை உணராமல் ஆபத்தில் சிக்கிக் கொள்வதை வாடிக்கையாவே கொண்டுள்ளனர். இந்த காலகட்டத்தில் டிக்டாக் இளசுகளுக்கு குதுகலத்தை கொடுத்துவருகிறது. அதில் ஈடுபட்டு பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கின்றனர். அந்தவகையில் தலையாமங்கலம் காவல்நிலையத்தின் முன்பு இருந்த கருவேலம் மரத்தை வெட்ட எடுத்துவந்த அரிவாளுடன் டிக்டாக் ஆடியர்கள் ஐந்து பிரிவுகளின் கீழ் கைதாகி இருக்கின்றனர்.

The police station was formerly tik tak; Young men who went back to prison


திருவாரூர் மாவட்டம் தலையாமங்கலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பைங்காட்டூரை சேர்ந்தவர் ராஜவேலு இவரின் தம்பி ஐயப்பன் உறவினர் பிரதீப் ஆகிய 3 பேரும் கூலி தொழிலாளிகள். இதில் ராஜவேலுவும், ஐயப்பனும் சேர்ந்து அதே கிராமத்தை சேர்ந்த தீபா என்கிற பெண்ணை கடந்த மாதம் 30 ஆம் தேதி தாக்கியதாக கூறி அவர்கள் வழக்குபதிவு செய்யப்பட்டு சிறையில் இருந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு இருவரும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தனர். தினமும் காலையில் தலையாமங்கலம் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுள்ளனர்.

இந்நிலையில் ராஜவேல், ஐயப்பன் ஆகிய இருவரும் தங்களது உறவினரான பிரதீப் என்பவரை அழைத்துக்கொண்டு நேற்று காலை தலையாமங்கலம் காவல்நிலையத்திற்கு கையெழுத்து போட வந்தனர். அங்கிருந்த போலீசார் ஒரு அரிவாளை எடுத்துக்கொடுத்து எதிரே இருந்த கருவேலம் புதர்களை வெட்டச்சொல்லி அனுப்பியிருக்கிறார். 

அரிவாளை வாங்கியவர்கள் காவல்நிலையத்தின் வாசலுக்கு தனித்தனியாக வெளியேவந்த மூன்றுபேரும் அந்த அரிவாளை மறைத்து வைத்திருந்து எடுத்து மிரட்டுவது போலவும், கைகளால் சுழட்டுவது போலவும் "எவனா இருந்தா எனக்கென்ன" என திரைப்பாடலுக்கு அரிவாளோடு வீடியோ எடுத்து அதனை டிக்டாக் செயலியில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இந்த வீடியோ தமிழகம் முழுவதும் கசியத் தகவல் அறிந்த மன்னார்குடி டிஎஸ்பி கார்த்திக் காவல்நிலையம் முன்பு அரிவாளுடன் வீடியோ எடுத்து வெளியிட்ட 3 பேரையும் உடனடியாக பிடிக்க தலையாமங்கலம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் ஐந்து பிரிவில் வழக்குபதிவு செய்து மீண்டும் கைது செய்து சிறைக்கு அனுப்பியுள்ளனர். காவல்நிலையம் ஒரு மனிதனை சீர்படுத்தும் என்கிற நிலைமாறி நீண்ட காலம் ஆகிவிட்டது. ஆனால் அதை உணராத இளைஞர் கூட்டம் விளையாட்டுத்தனமாக எதையாவது செய்து சீர் கெட்டுப் போகிறார்கள் என்பது வேதனையாக இருக்கிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.