Skip to main content

அதிரடி காட்டிய போலீஸ்; மாமூல் ரவுடி கலைக்கு மாவுக்கட்டு

Published on 06/02/2023 | Edited on 06/02/2023

 

The police showed action; Mamool Rowdy is the dough for art

 

வடசென்னை பகுதியில் கடைகளில் மாமூல் கேட்டு பிரச்சனை செய்து வந்த ரவுடிகளை போலீசார் கைது செய்த நிலையில், கலைச்செல்வன் என்ற ரவுடிக்கு காலில் மாவுக்கட்டு போட்டு வீடியோ எடுத்து போலீசார் வெளியிட்டுள்ளனர்.

 

கலை என்கின்ற கலைச்செல்வன் தலைமையிலான ரவுடி கும்பல் ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு வியாசர்பாடியில் உள்ள கடைகளில் மாமூல் கேட்டு மிரட்டி உள்ளனர். தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த அந்த கும்பல் அந்த பகுதியில் நின்றிருந்த டாட்டா ஏஸ் வாகனம், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். இந்த கும்பல் வியாசர்பாடி மட்டுமல்லாது அண்ணா நகர், செங்குன்றம், புழல் உள்ளிட்ட பல இடங்களில் மாமூல் கேட்டு வியாபாரிகளை அச்சுறுத்தி வந்தது தெரியவந்தது.

 

இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் வில்லிவாக்கம் வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறை சென்று வந்த இரண்டு பேர் இதுபோன்று மாமூல் கேட்டு மிரட்டல் விடுக்கும் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த கும்பலுக்கு தலைவனாக கலை என்கின்ற கலைச்செல்வன் இருந்து வந்ததாக போலீசாருக்கு தெரியவந்தது.

 

மற்ற இருவர் போலீசாரின் வலையில் சிக்கிவிட்ட நிலையில், கலைச்செல்வனை பிடிக்க போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வீட்டின் மொட்டை மாடி பகுதியில் பதுங்கியிருந்த ரவுடி கலையை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்பொழுது ரவுடி கலை தப்பிக்க முயன்று மாடியில் இருந்து குதித்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதன் பிறகு போலீசார் ரவுடி கலையை மருத்துவமனைக்கு அழைத்து சென்று கையிலும் காலிலும் மாவுக்கட்டு போட்டு விட்டனர். தான் செய்தது தவறு என மன்னிப்பு கேட்கும்படி வீடியோ எடுத்து வெளியிட்டுள்ள காவல்துறையினர், ரவுடி கலையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது