Skip to main content

அமமுக பிரமுகர் கொலை... குற்றவாளிகள் இடறி விழுந்ததால் மாவுக்கட்டு...

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

Police said The culprit tripped and fell down the stairs, causing a broken leg
                                                                வானவராயன்

 

திருப்பத்தூர் மாவட்ட அமமுக மாவட்ட மாணவரணிச் செயலாளராக இருந்தவர் திருப்பத்தூர் நகரம், கவுதம்பேட்டையைச் சேர்ந்த 30 வயதான வானவராயன். இவரது மனைவி கர்ப்பமாக உள்ளார். வானவராயன் பைனான்ஸ் வைத்து வட்டி தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கும் இடையே தொழில் முன்விரோத தகராறு இருந்துள்ளது. இதனால் இரண்டு குடும்பத்தினரும் அடிக்கடி வாய் சண்டை போட்டுக்கொண்டு இருந்துள்ளனர்.

 

இந்நிலையில் பிப்ரவரி 15ஆம் தேதி இரவு, பைனான்ஸியர் வானவராயன், வட்டி வசூலித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார். இரவு 8 மணியளவில் பூங்காவனத்தம்மன் கோயில் முன்பு வானவராயன் வாகனத்தை 6 பேர் கொண்ட கும்பல் மறித்துள்ளது. பின்னர் வண்டியைக் கீழே போட்டுவிட்டு வானவராயன் தப்பி ஓடியுள்ளார். ஆனால் அந்தக் கும்பல் வானவராயனை விரட்டி விரட்டி வெட்டி படுகொலை செய்துள்ளது. வானவராயன் குடும்பத்தினர் சங்கர் வீட்டை சூறையாடியுள்ளனர்.

 

காவல்துறை அதனைத் தடுத்து நிறுத்தி, கூலிப்படையைச் சேர்ந்த 4 பேர் உட்பட 12 பேரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து, பின்னர் கைது செய்ய உத்தரவிட்டார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார். கொலை செய்த குற்றத்தில் பெண்கள் உட்பட 10 பேரை கைது செய்தனர். அவர்களிடம் திருப்பத்தூர் டி.எஸ்.பி தங்கவேல் தலைமையிலான தனிப்படை விசாரணை நடத்தி வந்தது.

 

இந்நிலையில் கூலிப்படையைச் சேர்ந்த தாமஸ், அம்பிரேஸ் ஆகிய இருவரும் போலீசாரின் பிடியில் இருந்து தப்பி ஓடப் பார்த்ததாகவும், அப்போது படிக்கட்டில் கால் இடறி கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டுவிட்டது என்றும் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அடிப்பட்ட அவர்களுக்கு மருத்துவமனையில் மாவுக்கட்டு போட்டு பாதுகாப்பாக சிகிச்சை அளித்து வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.