Skip to main content

பாதுகாப்பு பணிகளை பார்வையிட்ட காவல்துறை உயரதிகாரிகள்! (படங்கள்)

Published on 14/08/2021 | Edited on 14/08/2021

 

நாளை (15.08.2021) சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் முக்கிய பகுதிகளில் காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பும், பேருந்து நிலையங்கள் உள்பட மக்கள் அதிகமாக கூடும் பல இடங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

அந்த வகையில், சுதந்திர தினத்தையொட்டி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதுகாப்பு பணிகளை உறுதி செய்யும் வகையில் ரயில்வே இருப்பு பாதை SP கண்காணிப்பாளர்  தீபா சத்யன், ரயில்வே பாதுகாப்பு படை கோட்ட ஆணையர் செந்தில் குமரேசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்