Skip to main content

மது விற்ற பெண்ணிடம் வரம்பு மீறிய ஊர்க்காவல் படையினர்... போலீசார் விசாரணை!

Published on 19/01/2022 | Edited on 20/01/2022

 

Police officers who the limit of the woman who sold alcohol ... Police investigation!

 

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள மஞ்சாலுமூடு என்ற பகுதியைச் சேர்ந்தவர் கில்டா மெரி. அவர் அந்த பகுதியில் மதுக்கடைகள் இல்லாததால் சட்டவிரோதமாக வீட்டில் மதுவைப் பதுக்கி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை இரண்டு பேர் கில்டா மேரியின் வீட்டிற்குச் சென்று 'நாங்கள் அடுமனை காவல் நிலையத்திலிருந்து வந்திருக்கும் காவல் ஆய்வாளர்கள், நீ சட்டவிரோதமாக மது விற்பது எங்களுக்கு தெரிய வந்துள்ளது. உன்னை கைது செய்ய வேண்டாம் என்றால் எங்களுக்கு லஞ்சமாக ஒரு தொகையை கொடுக்க வேண்டும்' எனக்கூறி மிரட்டியுள்ளனர். பின்னர் கில்டா மேரிக்கு மகள் இருப்பதை அறிந்துகொண்ட இருவரும் அவரை போனில் தொடர்பு கொண்டு  'சட்டவிரோத மது விற்பனையை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும் என்றால் உனது மகளை எங்களோடு அனுப்பி வைக்க வேண்டும்' எனக் கூறி மிரட்டி உள்ளனர்.



இதனைக்கேட்டு அதிர்ந்த கில்டா மெரி, ஊர் மக்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். தொலைப்பேசியில் பேசிய இருவரும் மீண்டும் அவரது வீட்டிற்குச் சென்றபோது அங்கு மறைந்திருந்த ஊர்மக்கள் இரண்டு பேரையும் சுற்றிவளைத்துப் பிடித்து காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். அப்பொழுது இருவரில் ஒருவன் தப்பி ஓடியுள்ளார். பிடிபட்ட மற்றொருவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இருவரும் செறுவள்ளூர் பகுதியைச் சேர்ந்த சசிதரன் நாயர், ரீகன் என்பது தெரியவந்தது. இருவரும் ஊர்க்காவல்படையைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. இருவரும் காவல்துறையுடன் சேர்ந்து பணியாற்றும்போது சில இடங்களை நோட்டமிட்டு அங்குசென்று பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தது தெரியவந்தது. தற்பொழுது ஒருவரை கைதுசெய்த போலீசார் தப்பி ஓடிய ரீகன் என்பவரைத் தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.