Skip to main content

காவலரை தாக்கிவிட்டு தப்பியோடிய கைதி திருப்பத்தூரில் சிக்கினார்!

Published on 27/01/2021 | Edited on 27/01/2021

 

police incident in thirupathur

 

ஆத்தூரில், பாதுகாப்புக்குச் சென்ற தலைமைக் காவலரைத் தாக்கிவிட்டு தப்பியோடிய கைதியை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள காட்டுபாளையத்தைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சக்கரவர்த்தி (25). நாமக்கல் மாவட்டக் காவல்துறையினர் இவரை வேறு ஒரு திருட்டு வழக்கில் கைது செய்திருந்தனர். அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள இந்திலியில் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஒரு மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கிலும் தனக்கு தொடர்பு இருப்பதாக வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.

 

இதையடுத்து சின்னசேலம் காவல் ஆய்வாளர் ராஜா உத்தரவின்பேரில், எஸ்ஐ சுப்ரமணியன் மற்றும் தலைமைக் காவலர்கள் முஸ்தபா, சிவராமன் ஆகியோர் ஜன. 23ம் தேதி நாமக்கல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த சக்கரவர்த்தியைக் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக அழைத்து வந்தனர்.

 

police incident in thirupathur

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் வந்தபோது, சக்கரவர்த்தி தனக்கு அவசரமாக சிறுநீர் வருவதாக கூறினார். அதை நம்பிய காவல்துறையினர் அவரை பேருந்து நிலைய பின்புற பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது எஸ்ஐ சுப்ரமணியன், மற்றொரு கைதிக்குப் பாதுகாவலாக பேருந்து நிலையத்திலேயே இருந்தார்.

 

இதையடுத்து, பாதுகாப்புக்கு வந்த காவலர்களுள் ஒருவரான முஸ்தபாவை தாக்கிவிட்டு, சக்கரவர்த்தி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை துரத்திப்பிடிக்க ஓடியபோது தலைமைக் காவலர் முஸ்தபா கால் இடறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். 

 

இந்தச் சம்பவத்தை அடுத்து மற்றொரு கைதியை, எஸ்ஐ சுப்ரமணியன் உடனடியாக சின்னசேலம் காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றார். தப்பிச்சென்ற சக்கரவர்த்தியை பிடிக்க ஆத்தூர், சின்ன சேலம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். 

 

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் உறவினர் வீட்டில் அவர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. காவல்துறையினர் ஜன. 26ம் தேதி அதிகாலையில் அங்கு சென்று சக்கரவர்த்தியை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.