Skip to main content

புகார் கொடுக்க சென்ற இளம்பெண்ணுக்கு வன்கொடுமை... இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு!

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

police incident in kaniyakumari

 

சமீபகாலமாக வேலியே பயிரை மேயும் கதையாக மாணவிகளுக்கு ஆசிரியர்கள் சிலர் கொடுக்கும் பாலியல் தொந்தரவுகள். அதேபோல் புகார் கொடுக்கும் பெண்களிடம் போலீசாரே எல்லை மீறும் சம்பவங்கள் என பத்திரிகை செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில்தான் குமரி மாவட்டம் பளுகல் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்து கருக்கலைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட களியக்காவிளை மேக்கோடு பகுதியை சேர்ந்த திருவனந்தபுரத்தில் நர்சாக பணிபுரியும்  32 வயதுடைய இளம் பெண் கூறும் போது, ''தன்னை திருமணம் செய்வதாக கூறி பணம் மற்றும் உடமைகளை பறித்துசென்ற அந்த பகுதியை சேர்ந்த அஜீஸ் என்பவர் மீது புகார் கொடுக்க பளுகல் காவல் நிலையத்திற்கு சென்றபோது எனது புகாரை உதவி ஆய்வாளர் சுந்தரலிங்கம் (அவர் தற்போது வீரபாண்டி காவல் நிலையத்தில் ஆய்வாளராக உள்ளார்) விசாரித்தார்.

 

மேலும் எனது பிரச்சனையை தீர்த்து வைப்பதாகவும் கூறி தினமும் செல்ஃபோனில் என்னிடம் தொடர்பில் இருந்தார். இந்த நிலையில் நான் ஏற்கனவே வாடகைக்கு இருந்த வீட்டில் இருந்து அதன் உரிமையாளர் மாற சொன்னதால் உதவி ஆய்வாளர் சுந்தரலிங்கம் அவர் நண்பர் மூலம் இளம்சிறை பகுதியில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தந்தார். பின்னர் எனது புகார் மனு சம்பந்தமாக விசாரணை என்ற பெயரில் அடிக்கடி வீட்டுக்கு வந்த சுந்தரலிங்கம் ஆசை வார்த்தை கூறி என்னை பலாத்காரம் செய்தார். இதில் நான் கர்ப்பம் அடைந்ததையடுத்து அவரிடம் கூறினேன்.

 

police incident in kaniyakumari

 

உடனே அதற்கு அவர் என்னை மிரட்டி கருவைக் கலைக்க வலியுறுத்தினார். மேலும் அவருடைய நண்பர்களும் என்னை மிரட்டி வலுக்கட்டாயமாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று கருவைக் கலைத்து என்னுடைய எதிர்காலத்தைக் கேள்வி குறியாக்கினார்கள். மேலும் என்னுடைய உடல் நிலையும் மோசமான நிலைக்குச் சென்றது.

 

இதையடுத்து நான் மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையம், தக்கலை சரக துணை சூப்பிரண்ட், மாவட்ட எஸ்.பி ஆகியோருக்கு ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து குழித்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது என்றார்.

 

இந்நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து ஆய்வாளர் சுந்தரலிங்கம் மற்றும் உடந்தையாக இருந்த ஏட்டு கணேஷ்குமார் உட்பட 8 பேர் மீது மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.