Skip to main content

வேட்பாளரின் பணமா? வியாபாரி கடத்தலின் பின்னணியை மறைத்த போலீஸ்...!

Published on 02/05/2019 | Edited on 02/05/2019

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த மேலாரணி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். அதே ஊரில் மரசெக்கு வைத்து எண்ணெய் உற்பத்தி செய்து தரும் வேலை செய்து வருகிறார். கலசப்பாக்கம், போளுர், புதுப்பாளையம் பகுதிகளில் உள்ள நிலங்களில் உள்ளுர், வெளியூரை சேர்ந்தவர்கள் பல தரப்பினரும் வந்து சீட்டு ஆடுவது வழக்கம். லட்சங்களில் பணம் வைத்து சீட்டுக்கட்டு விளையாடுகிறார்கள்.

 

saravanan


சரவணன் சீட்டு விளையாடுவார், கலசப்பாக்கம் பகுதிகளில் சீட்டு விளையாட செல்லும்போது, அங்கு சீட்டு விளையாட வரும் திருவண்ணாமலை புதுத்தெருவை சேர்ந்த அப்துல்அலி என்பவரின் 30 வயதான அன்சர்அலி பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் சில ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக வலம் வந்துள்ளனர்.



இந்நிலையில் ஏப்ரல் 28ந் தேதி மதியம் திருவண்ணாமலை சென்று வருவதாக குணவதியிடம் கூறிவிட்டு சென்ற சரவணன் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் எண் சுச்-ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது. இது தொடர்பாக கலசப்பாக்கம் காவல்நிலையத்தில் ஏப்ரல் 29ந் தேதி புகார் தந்துள்ளார் குணவதி.



30ந் தேதி மதியம் குணவதியின் செல்போன் எண்ணுக்கு தொடர்புக்கு கொண்ட ஒருவர், உன் கணவனை கடத்திவைத்துள்ளோம், அவனை விடவேண்டும் என்றால் ரூ. 50 லட்சம் பணம் தரவேண்டும் எனச்சொல்லி செங்கம் அருகே உள்ள புதூர் மாரியம்மன் கோயில் அருகே வரச்சொல்லியுள்ளார்கள். இந்த பெண்மணியும் 15 லட்ச ரூபாய் பணத்தோடு சென்று காத்திருந்துள்ளார்.



டி.என்.25 பி8181 என்கிற இன்னோவா காரில் வந்த இருவர் பணத்தை வாங்கிக்கொண்டு, இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர் வீட்டுக்கு வருவார் எனச்சொல்லிவிட்டு சென்றுள்ளனர். அவர்கள் சென்ற ஒரு மணி நேரத்தில் மீண்டும் போன் செய்து ரூ 25 லட்சம் வேண்டும் என டிமாண்ட் செய்துள்ளார் ஒருவர். இதில் அதிருப்தியான குணவதி, தான் பணம் தந்தது, அவர்கள் பேசிய செல்போன் எண், பணம் வந்து வாங்கி சென்றவர்களின் கார் பதிவு எண் போன்றவற்றை காவல்துறையிடம் கூறியுள்ளார்.

 

saravanan


திருவண்ணாமலை எஸ்.பி., சி.பி.சக்கரவர்த்தி, டி.எஸ்.பி-கள் அண்ணாதுரை, குற்றாலலிங்கம் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனித்தனி டீம்கள் அமைக்கப்பட்டன. செல்போன் எண்கள், வண்டி எண்ணை வைத்து முகவரி, அந்த வாகனங்கள் சென்ற வழி, சிசிடிவி கேமரா என சோதனை செய்து வந்தனர். அதோடு, அவர்கள் கேட்ட தொகை செங்கம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் கொண்டு வந்து தரும்படி குணவதியிடம் கூறியுள்ளனர். அவரும் மே 1ந் தேதி பணத்தோடு அங்கு நின்றுள்ளார். அவரை சுற்றி மப்டியில் போலீஸார் இருந்துள்ளனர். டி.என் 25 பி.எல் 0023 என்கிற எண்ணுடைய காரில் ஒருவர் வந்து குணவதியிடம் பேசி பணம் வாங்கும்போது, மப்டியில் இருந்த போலீஸார் அவரை பிடித்து விசாரித்துள்ளனர். அவர் அன்சர் அலி என தன்னைப்பற்றி கூறியுள்ளார்.
 


அவர் தந்த தகவலின்பேரில் வேட்டவலம் அருகே சரவணனை அடைத்துவைத்திருந்ததை கண்டறிந்து காப்பாற்றினர் போலீசார். கடத்தி வைத்து இருந்த முஸ்தபா, தஸ்தகீர், இந்தியாஸ், துரைப்பாண்டியன் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு கார்கள், 6 செல்போன்கள், கத்தி போன்றவற்றையும், 15 லட்ச ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளதாக செய்தியாளர்களிடம் எஸ்.பி., சி.பி. சக்கரவர்த்தி தெரிவித்தார்.
 


இதில் போலீஸார் மறைத்த தகவல்கள் இது என அரசியல் வட்டாரத்தில் கூறுவது. அந்த பணம் திருவண்ணாமலை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட முக்கிய வேட்பாளருடையது. அவர் சரவணனிடம் தேர்தலின்போது, ஓட்டுக்காக தந்துவைத்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த பணம் பற்றி தனது நண்பர் அன்சர்அலியிடம் கூறியுள்ளார். தேர்தல் செலவுக்கு தந்தது போக மீதி பணம் என்னிடம் தான் உள்ளது எனக்கூறியுள்ளார். அதனை தெரிந்துக்கொண்டே சரவணனை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டுள்ளனர் என்கின்றனர். இதனை வெளியே சொல்லாமல் போலீஸ் மறைத்துள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
 


கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான கடத்தல் கும்பலில் இருந்த முஸ்தபா என்பவர், திருவண்ணாமலையில் பிரபலமான ஒரு மசூதியின் நிர்வாக குழு உறுப்பினராக இருந்துள்ளார். அவரின் குற்றச்செயல்களை அறிந்த ஜமாத்தினர், இது தொடர்பாக கேள்வி எழுப்ப சமீபத்தில் தான் அவரை பொறுப்புகளில் இருந்து நீக்கியுள்ளனர்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.