Skip to main content

என்கிட்டே பேசணுமா காசு அனுப்புங்க... 1000 ஆண்களை பெண் குரலில் ஏமாற்றிய இளைஞர்... அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 25/02/2020 | Edited on 25/02/2020

1000 ஆண்களிடம் பெண் குரலில் பேசி பணம் பறித்த நெல்லை வாலிபர் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம். சென்னை மதுரவாயலைச் சேர்ந்தவர் உதயராஜ். உதயராஜ் வேலைக்காக லோக்நெக்டோ என்ற செயலி மூலம்  விண்ணப்பித்துள்ளார். அப்போது ஆபாசமாக உரையாடலாம் எனக் கூறி விளம்பரம் ஒன்று செயலியில் வந்துள்ளது. இவருக்கு அந்த செயலி மூலம் ப்ரியா என்ற பெண் அறிமுகமாகியிருக்கிறார். பின்பு ப்ரியா உதயராஜிடம் ஆபாசமாக உரையாட 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் வீடியோ காலில் பேச 1000 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது. இதற்கு உதயராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து  வீடியோ காலில் பார்க்க வேண்டும் என்றால் 1000 ரூபாய் செலுத்துமாறு பிரியா கேட்டுள்ளார். இதனால் 1000 ரூபாய் பணப்பரிவர்த்தனை செயலியில் செலுத்திவிட்டு அழைக்கும் போது வர மறுத்துள்ளார். 

 

young boy



அதன்பின் உதயராஜ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி ஒன்று அவருக்கு வந்துள்ளது. அதில் உதயராஜ் நம்பரை பயன்படுத்தி காவல்துறையில் ஆன்லைன் புகார் சென்றதால், போலிசார் உதயராஜை விசாரணைக்கு அழைக்கும் போது தான் மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து உதயராஜ்க்கு வந்த செல்போன் அழைப்பை வைத்து போலீசார் ஆய்வு செய்ததில் திருநெல்வேலி பணங்குடி இருப்பிடத்தை செல் சிக்னல்கள் வைத்து கண்டுபிடுத்துள்ளனர். அதன்பின்பு போலீசார் நடத்திய விசாரணையில், உதயராஜிடம் தொலைபேசியில் பெண் குரலில் பேசியவர் நெல்லை மாவட்டம் பணகுடியைச் ராஜ்குமார் ரீகன் என்பது தெரியவந்தது. 

 

young boy



பொறியியல் பட்டதாரியான இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 1000-க்கும் மேற்பட்ட ஆண்களிடம் பெண்குரலில் பேசி பணம் பறித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் ராஜ்குமார் ரீகனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில், சேத்துப்பட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது, சபிதா மற்றும் ரூபா என்ற பெண்கள் மூலம் இது போன்று லோகாண்டா செயலியில் பெண்கள் பெயரில் கணக்கு துவங்கி, பெண் போல் பேசி சம்பாதிப்பதை ரீகன் கற்றுக் கொண்டுள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.


மேலும் பல பெண்களின் நிர்வாண போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி, மோசடி வலையில் சிக்கும் ஆண்களிம்  ஆபாச உரையாடல்கள், போட்டோக்கள், வீடியோக்கள் பயன்படுத்தி போலிசில் மாட்டிவிடுவேன் என கூறியும், ஆன்லைன் புகார் கடிதத்தை அனுப்பியும் மிரட்டி பணம் பறித்து உள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழகத்தில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பல ஆண்களை ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது. மேலும் துபாய், மலேசியா, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் உள்ள ஆண்கள் இவருடைய பெண் குரலால் ஏமாறியதும் விசாரணையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதனையடுத்து அவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.