Skip to main content

புகார்தாரர் வீடுகளுக்கு சென்று தீர்வுகாணும் காவல்துறை...!

Published on 22/10/2020 | Edited on 22/10/2020

 

Police to go to the complainant's house and settle the matter ...!


பொதுமக்கள் தங்களது குடும்ப பிரச்சனை, பல்வேறு தனி நபர், சமூக பிரச்சனைக்கு போலீஸ் நிலையத்திற்கும், போலீஸ் உயரதிகாரி அலுவலகங்களிலும் நேரில் சென்று புகார் மனு கொடுத்து அதற்கான நடவடிக்கைக்காக காத்திருப்பது வழக்கமானதாக இருந்தது. இந்த நடைமுறையை மாற்றி புகார்தாரர் புகார் கொடுத்த அடுத்த நாளே அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று விசாரிக்க வேண்டும். 


இதன் மூலம் புகார் மனுக்களின் தன்மையை அதை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகள் நேரில் உணர்ந்து பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காணலாம் என சமீபத்தில் கூடுதல் டி.ஜி.பி. உத்தரவிட்டிருந்தார். அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் சென்ற 6ஆம் தேதி முதல் வீடு தேடி புகார் மனுக்கள் விசாரிக்கும் திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அதைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 5 சப்டிவிஷன் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் நிலையம், எஸ்.பி, அலுவலகத்துக்கு வந்துள்ள புகார் மனுக்கள் மீது புகார்தாரர் இருப்பிடத்திற்கே சென்று போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அதில், சென்ற  16 நாட்களில் மாவட்டம் முழுவதும் 300 புகார் மனுக்கள் பெறப்பட்டு, அதில் 280 மனுக்களின் மீது உடனடி தீர்வு கண்டுள்ளார்கள் ஈரோடு போலீசார்.

 

இது பற்றி ஈரோடு எஸ்.பி. தங்கதுரை கூறும்போது, “வீடு தேடி புகார் மனுக்கள் விசாரிக்கும் திட்டத்தின் மூலம் தற்போது வரை 300 மனுக்கள் பெறப்பட்டு அதில், 150 மனுக்களின் மீது இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் நேரடியாக சென்று புகார்தாரர் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அதற்கு தீர்வு கண்டார்கள். 40க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு எஸ்.பி. என்ற முறையில் நானும், ஏ.டி.எஸ்.பி.யும் விசாரணை நடத்தி தீர்வு வழங்கினோம். இவ்வாறாக 300 மனுக்களில் 280 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள புகார்கள்  சிவில் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளாக இருப்பதால் உடனடி தீர்வு வழங்க முடியவில்லை. அதற்கு சட்ட ரீதியாக நீதிமன்றத்தின் மூலம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து அவர்களுக்கு ஆலோசணை வழங்கினோம். தொடர்ந்து இந்த திட்டத்தின் மூலம் போலீசார் புகார்தாரரின் இருப்பிடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இது பொது மக்களுக்கு பயனுள்ள திட்டம்" என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.