Skip to main content

திருடுபோன நகையைக் கண்டுபிடிக்காத காவல்துறை... பொதுமக்களுடன் தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினர்! 

Published on 27/09/2022 | Edited on 27/09/2022

 

The police did not find the stolen jewelry... the family was involved in a dharna with the public!

 

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டைக் கிராமத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவரது கணவர் சின்னதுரை அரசு அதிகாரியாகப் பணிபுரிந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

 

இந்நிலையில், தனலட்சுமி தனது மூன்று மகள் மற்றும் மகனுடன் புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இரண்டு மகள்களுக்கு திருமணம் செய்துவிட்ட நிலையில், மூன்றாவது மகள் ஜெயலட்சுமியின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த 110 பவுன் சவரன் தங்க நகை மற்றும் ரூபாய் 2 லட்சம் ரொக்க பணத்தை கடந்த மார்ச் மாதம் 10- ஆம் தேதி பட்டப் பகலில் வீடு புகுந்த மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

 

இதுகுறித்து விருத்தாசலம் காவல்துறையிடம் புகார் அளித்தும் கடந்த ஆறு மாத காலமாக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக அக்கிராம மக்கள் புதுக்கூரைப்பேட்டை கிராமத்தின் நுழைவாயில் முன்பு அமர்ந்து காவல்துறையைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

இதுகுறித்து அனைத்து உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், கிராமப்புற பகுதிகளில் இருக்கக்கூடிய வீடுகளில் 110 பவுன் சவரன் தங்க நகை இருக்காது என காவல்துறை அதிகாரிகள் ஏளனமாக நினைப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். காவல்துறை தனிப்படை அமைத்து மர்ம நபர்கள் திருடி சென்ற நகைகளை மீட்டு தராவிட்டால், குடும்பத்துடன் விருத்தாச்சலம் காவல் நிலையம் முன்பு தீக்குளிப்போம் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்திற்குச் சென்று திரும்பிய நகைக்கடை அதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
The jewelry store owner who returned from the wedding was shocked

காஞ்சிபுரம் மாநகர எல்லைக்கு உட்பட்ட விளக்கடி கோயில் தெருவில் நகைக்கடை அதிபர் மகாவீர் சந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டின் கீழ்த் தளத்தில் நகைக்கடையும், மேல் தளத்தில் வீடும் உள்ளது. இவர் 150 சவரன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைத் தனது வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டு உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகக் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் சென்னை சென்றுள்ளார்.

இதனைத் தெரிந்துகொண்ட அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டிலிருந்த 150 சவரன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் மகாவீர் சந்த் இன்று சென்னையிலிருந்து காஞ்சிபுரத்தில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பிச் சென்றுள்ளார். அப்போது தனது வீட்டிலிருந்த நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

மேலும் இது குறித்து உடனடியாக விஷ்ணு காஞ்சி காவல்நிலையத்தில் மகாவீர் சந்த் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். வீட்டைப் பூட்டிவிட்டுத் திருமண விழாவுக்கு சென்றிருந்த நிலையில், மர்ம நபர்கள் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மணிப்பூரில் மீண்டும் வன்முறை; 2 பேர் உயிரிழப்பு

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
manipur Churachandpur District sp office incident

மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்குப் பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் 3ம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது.

இந்த வன்முறையைத் தொடர்ந்து பல நூறு பேர் கொல்லப்பட்டு, பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வீடுகள் சூறையாடப்பட்டு, பல மக்கள் வீடுகளற்ற அகதிகளாக மாறினர். ஓரளவுக்கு அங்கு நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று கூறப்பட்டாலும், இன்னும் சில இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் தொடர்ந்தபடியே தான் இருக்கின்றன.

இந்நிலையில் மணிப்பூரில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் சியாம் லால் என்பவர் கடந்த 14 ஆம் தேதி ஆயுதம் தாங்கிய குழுவினருடன் இருப்பது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதனைத் தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சியாம் லால் பணியிடை நீக்கம் செய்ததை எதிர்த்து குக்கி சமூகத்தினர் சுராசந்த்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி காவல் நிலையத்தை சூறையாடினர்.

அப்போது கூட்டத்தை கலைக்க முயன்றபோது இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதனால் மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. சுராசந்த்பூர் மாவட்டம் முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.