Skip to main content

உள்நாட்டு பாதுகாப்பு தொடர்புடைய வழக்கில் காவல்துறையினர் மெத்தனம்! -உயர் நீதிமன்றம் அதிரடி!

Published on 05/11/2019 | Edited on 05/11/2019

இலங்கையின் தலைநகர் கொழும்புவைச் சேர்ந்தவர்கள் சங்க சிரந்த, முகமது சப்ராஸ். இவ்விருவரும் சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறி குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள். இவர்கள் மீது இலங்கையிலும் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு விவகாரத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட  காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை. மேலும்,   இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர் நீதிபதிகள்.

 

Police  Complacency in Homeland Security case -High Court Action!

 

சங்க சிரந்தாவும் முகமது சப்ராஸும் போலி ஆதார் அட்டை தயாரித்ததாக ராமநாதபுரம் கேணிக்கரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, தங்களை இலங்கைக்கு அனுப்பக்கோரி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இருவரும் ஆட்கொணர்வு மனுக்களைத் தாக்கல் செய்தனர். இந்நிலையில், ராமநாதபுரம் நீதிமன்றத்தில் இருவரும் தாக்கல் செய்திருந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் பிறப்பித்த  உத்தரவின்படி, அவர்கள் புழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

இடைப்பட்ட நேரத்தில் அந்த ஆட்கொணர்வு மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு நிலுவையில் இருக்கும்போது எவ்வாறு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்? இது உள்நாட்டு பாதுகாப்பு தொடர்புடைய வழக்கு அல்லவா? என்று கேள்வி எழுப்பி, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.  

இன்று அந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி ‘இந்தியாவிலிருந்து தப்பி ஓடிய இருவரும் இலங்கை நீதிமன்றத்தில் சரணடைந்து சிறைக்காவலில் உள்ளனர்.’ என்று தெரிவித்தார். இதனைப் பதிவு செய்த நீதிபதிகள் ’வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.’ என்று தெரிவித்தனர்.  மேலும், இந்த வழக்கில் மெத்தனமாகச் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்து, அரசு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.