Skip to main content

சேலத்தில் போலீசார் 'கோம்பிங் ஆபரேஷன்'... ஒரே இரவில் 100 ரவுடிகள் கைது!

Published on 25/09/2021 | Edited on 25/09/2021

 

Police 'combing operation' in Salem; 100 rowdies arrested overnight!

 

சேலத்தில் விடிய விடிய நடத்தப்பட்ட ‘கோம்பிங் ஆபரேஷன்’ நடவடிக்கையில் ஒரே இரவில் 100 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். 

 

ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்கவும், குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தவும் காவல்துறையில் அவ்வப்போது ‘கோம்பிங் ஆபரேஷன்’ எனப்படும் அனைத்துப்பிரிவு காவல்துறையினரும் ஒருங்கிணைந்து அதிரடி சோதனையில் ஈடுபடுவது நடைமுறையில் இருந்துவருகிறது.

 

தமிழ்நாடு முழுவதும் ஒட்டுமொத்த காவல்துறையினரும் வியாழக்கிழமை (23.09.2021) கோம்பிங் ஆபரேஷனில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் மற்றும் மாநகரில் விடிய விடிய கோம்பிங் ஆபரேஷன் நடந்தது. சேலம் மாநகரில் காவல்துறை ஆணையர் நஜ்மல்ஹோடா மேற்பார்வையிலும், மாவட்டத்தில் எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் மேற்பார்வையிலும் இந்த ஆபரேஷன் நடந்தது. விடிய விடிய நடந்த வேட்டையில், சேலம் மாநகர பகுதியில் மட்டும் ஒரே இரவில் 73 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். 

 

இவர்களில் பலர், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. மேலும், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 5 ரவுடிகளும் இந்த வேட்டையில் சிக்கியுள்ளனர். கிச்சிப்பாளையம் காவல் எல்லையில் மட்டும் அதிகபட்சமாக 11 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

மாவட்டப் பகுதியில் நடந்த கோம்பிங் ஆபரேஷனில், 32 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிடிபட்ட அனைத்து ரவுடிகளும் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.