Skip to main content

போலீசாரின் அத்துமீறல்! ஆட்டோ டிரைவர் பலி! போஸ்ட்மார்ட்டம் அறிக்கையின் படி நடவடிக்கை! –எஸ்.பி.பேட்டி

Published on 29/06/2020 | Edited on 29/06/2020

 

incident-hospital

 

சாத்தான்குளத்தில் தந்தை மகன் மீது பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் எஸ்.ஐ.க்கள், மற்றும் போலீசார் நடத்திய கூட்டு வெறித் தாக்குதலால் மரண வேதனையில் கொடிய சித்ரவதையை அனுபவித்தவர்கள் சில நாட்களில் அடுத்தடுத்து பலியானார்கள். இந்தச் சம்பவத்தின் வடுக்கள் ஆறாத நிலையில் அடுத்து தென்காசி மாவட்டத்தின் வி.கே. புதூர் எஸ்.ஐ. நடத்திய மூர்க்கத்தனமானத் தாக்குதலால் பலியான ஆட்டோ டிரைவர் குமரேசன் பற்றியது வெளிவந்தது ஏற்கனவே கொதிப்பிலிருந்த தமிழகத்தை மேலும் கொந்தளிப்பாக்கியது.

 

எஸ்.ஐ. சந்திரசேகரும் காவலர் குமாரும் சேர்ந்து கொடூரமாகத் தாக்கியதால் குமரேசனின் உடலில் பலமான உள்காயம் ஏற்பட்ட நிலையில் துடித்த குமரேசன் தனியார் மருத்துவமனையிலும், பின் பாளை அரசு மருத்துவமனையில் மே.13இல் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்தது வரையிலான நடந்த செய்தியை ஏற்கனவே 'நக்கீரன்' இணையத்தளம் வெளியிட்டிருந்தது.

 

போலீஸ் தாக்குதல் காரணமாக மரணமடைந்த குமரேசன் சாவுக்குக் காரணமானவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை உடலை வாங்கமாட்டோம் என்று பொதுமக்களும் குமரேசனின் தந்தை நவநீத கிருஷ்ணன் உறவினர்கள் போராட்டம் நடத்திவந்தனர். பாதிக்கப்பட்டவர்களிடம் டி.எஸ்.பி. மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையின் படி, சம்பந்தப்பட்ட போலிசார் மீது விசாரணை மற்றும் உரிய நடவடிக்கை உண்டு என்று உறுதியளித்தனர். அவர்கள் மீது நம்பிக்கை வைத்த உறவினர்கள் உடலைப் பெற்றனர். வி.கே.புதூரில் பாதுகாப்புடன் ஆட்டோ டிரைவர் குமரேசனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

 

இதனிடையே செந்தில் என்பவர் குமரேசன் மீதுகொடுத்த புகாரின் அடிப்படையில் வி.கே.புதூர் காவல் நிலையத்தில் 270ஆவது பிரிவின் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. தற்போது குமரேசனின் மரணத்திற்குக் காரணம். போலீசாரின் தாக்குதல் என்ற புகார் கிளம்பியதையடுத்து 174ஆவது பிரிவின் படி சந்தேக மரணம், சம்பவிக்கக் காரணமானவர்கள் எஸ்.ஐ.சந்திரசேகர், மற்றும் காவலர் குமார் என இருவர் மீதும் எப்.ஐ.ஆர் பதிவாகியுள்ளது.

 

உடலடக்கம் முடிந்து ஒருவிதமான அமைதி தென்பட்டாலும், வீ.கே.புதூரில் பதற்றம் தணியாத நிலை.

 

http://onelink.to/nknapp

 

நாம் இது குறித்து மாவட்ட எஸ்.பி.யான சுகுணாசிங்கிடம் பேசியதில் சந்தேக மரணம் என்று தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணை நடக்கும். தவிர போஸ்ட் மார்ட்டம் அறிக்கை வந்த பிறகு அதில் சொல்லப்பட்டுள்ள காயத்தின் தன்மை. மற்றும் அறிவிக்கைபடி உயர்மட்ட விசாரணை நடத்தப்படும். நிச்சயம், கண்டிப்பாக நடவடிக்கை உண்டு என்றார்.

 

சாத்தான்குளம், வி.கே.புதூர் கொடூரச்சம்பவங்களின் நகர்வுகள் தமிழகத்தால் உற்றுக் கவனிக்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.