Skip to main content

கர்ப்பிணியை இரும்பு ராடால் தாக்கியவர் கைது!

Published on 15/04/2021 | Edited on 15/04/2021

 

Police arrested the youth who snatched the chain from the  police's wife

 

விழுப்புரம் அருகே உள்ள மரகதபுரத்தைச் சேர்ந்தவர் காவலர் முத்துக்குமரன். இவர், இவரது மனைவி கவியரசி மற்றும் தங்கள் குழந்தையுடன் கடந்த 8ம் தேதி காலை 11 மணியளவில் தங்கள் ஊரில் இருந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தடுப்பூசிக்கான அட்டையை (மருத்துவச் சீட்டு) வீட்டிலே மறந்து வைத்துவிட்டுக் கிளம்பியுள்ளனர்.

 

அதனால், அவர் தனது மனைவி மற்றும் குழந்தையை சாலையோரம் நிறுத்திவிட்டு தனது ஊருக்குத் தடுப்பூசி அட்டையை எடுக்கச் சென்றுள்ளார். வீட்டுக்குச் சென்று திரும்புவதற்குள் சாலையோரம் நின்றுகொண்டிருந்த அவரது கர்ப்பிணி மனைவியான கவியரசியை டூவீலரில் வந்த மர்ம நபர் ஒருவர், தலையில் இரும்பு ராடால் தாக்கிவிட்டு, அவர் அணிந்திருந்த 11 சவரன் நகையைப் பறித்துச் சென்றார். இதுகுறித்து, விழுப்புரம் தாலுகா காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

 

அந்த மர்ம நபரை பிடிப்பதற்காக டிஎஸ்பி நல்லசிவம் தலைமையில் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், சப்-இன்ஸ்பெக்டர் மருது பாலசிங்கம், பாஸ்கர், பிரகாஷ், சுந்தரராஜன், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டியன், கண்ணன், ஏட்டு சீனிவாசன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்திவந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் விழுப்புரம் ஏனாதிமங்கலம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு மர்ம நபர் பைக்கில் வந்துள்ளார். அவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடியுள்ளார்.

 

அப்போது நிலை தடுமாறி விழுந்ததில் அவரது வலது கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதைக் கண்ட போலீசார் அவரை அழைத்துச் சென்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை செய்ததில் அந்த நபர் நெல்லிக்குப்பம் அடுத்த முள்ளிகிராம்பட்டு பகுதியைச் சேர்ந்த சுந்தரம் என்பவரது மகன் 39 வயதான அறிவழகன் என்பது தெரியவந்தது. இவர் தான் கவியரசியை தாக்கிவிட்டு 11 சவரன் நகையைப் பறித்துச் சென்றதை ஒப்புக் கொண்டுள்ளார்.

 

இதையடுத்து, அறிவழகன் போலீசாரால் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்த 4 லட்சம் மதிப்புள்ள 11 சவரன் நகையை மீட்டனர். பின்னர் அவரை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேடம்பட்டு மத்திய சிறையில் விசாரணை குற்றவாளியாக அடைத்துள்ளனர். குற்றவாளியைக் கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட எஸ்பி ராதாகிருஷ்ணன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இவர் மீது ஏற்கனவே கடலூர், நெல்லிக்குப்பம், திருவெண்ணைநல்லூர் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும் தெரியவந்தது. ஏற்கனவே, இவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்று ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.