Skip to main content

எடப்பாடிக்கு கொலை மிரட்டல் விட்ட நபர் கைது! அப்பாவை மிரட்ட மகன் போட்ட நாடகம் அம்பலம்

Published on 28/04/2019 | Edited on 29/04/2019

சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று ஒரு மர்ம போன் வந்தது. அதில் கொடைக்கானலுக்கு வரும் முதல்வர் எடப்பாடியை கொலை செய்வேன் என்று பேசிவிட்டு போனை கட் செய்துவிட்டார்.

 

இப்படி முதல்வருக்கு கொலை மிரட்டல் விட்ட நபர் யார் என போலீசார் ஆய்வு செய்தபோது தான் திமிரட்டல் விட்டது திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலக்குண்டு ஒன்றியத்தில் இருக்கும் விராலிப்பட்டி சேர்ந்த குருசங்கர் என தெரியவந்தது,. அதைத்தொடர்ந்து போலீசார் வத்தலகுண்டு காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின் பேரில் குருசங்கரை போலீஸார் கைது செய்தனர். 

 

 The police arrest the person who threatened to  Chief Minister Edappadi Palanisamy

 

இது சம்பந்தமாக நாம் போலீஸ் தரப்பில் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன   

முதல்வர் எடப்பாடிக்கு மிரட்டல் விட்ட விராலிப்பட்டியை சேர்ந்த குருசங்கரின் தந்தையான ராமமூர்த்தி விராலிப்பட்டியின் முன்னாள் அதிமுக ஊராட்சி செயலாளராக இருந்து வந்தவர் தற்பொழுது நடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது அதிமுகவில் இருந்து விலகி  திமுகவில் ராமமூர்த்தி தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டார். அதைத்தொடர்ந்து திமுகவுக்கும் தேர்தல் பணியாற்றினார்.

 

இந்த நிலையில்தான் ராமமூர்த்தியின் மகனான குருசங்கர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த 80ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டு கொடைக்கானல் சென்று உல்லாசமாக இருந்து வந்திருக்கிறான். இந்த விஷயம் தந்தை ராமமூர்த்திக்கு  தெரியவே உடனே உறவினர்களுடன் கொடைக்கானலுக்கு சென்று தனது மகன் குருசங்கரிடம் இருந்த பணத்தை பிடுங்கிக் கொண்டு அவனை சத்தம் போட்டுவிட்டு வந்து விட்டனர்.

 

அப்பொழுது சிறிது நேரத்திலையே உறவினர்களுடன் ராமமூர்த்தி காரில் வந்து கொண்டிருக்கும்போது போதை  இருந்த குரு சங்கரோ அந்த உறவினர் ஒருவருக்கு போன் போட்டு என்னை அடித்து பணத்தை பிடிங்கி கிட்டு போய்விட்டீர்கள் இதற்கு காரணமான இருந்த எங்க அப்பனை எப்படி பதறவைக்கபோகிறேன் என்று பாருங்க என்று கூறிஇருக்கிறான்.

 

 The police arrest the person who threatened to  Chief Minister Edappadi Palanisamy

 

அதை தொடர்ந்து தான் குருசங்கர் போதையில் சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் போட்டு எடப்பாடியை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியிருக்கிறான். அதைத்தொடர்ந்து போலீசார் ராமமூர்த்தியை பிடித்து வந்து  காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் தான் கொடைக்கானலில் இறங்கி  வத்தலக்குண்டு வந்த குருசங்கர் அங்கிருந்து திருப்பூருக்கு செல்ல பஸ்சில் சென்று கொண்டிருந்த விஷயம் போலீசாருக்கு தெரியவே கள்ளிமந்தயம் அருகே பஸ்சை மடக்கி  குருசங்கரை  கைது செய்தனர்.

     

 

இப்படி போதையில் குரு சங்கர் அப்பாவை மிரட்டுவதற்காக முதல்வர் எடப்பாடியை கொலை செய்வேன் என்று மிரட்டியதின்  மூலம் தற்போது குருசங்கர் கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறான்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.