Skip to main content

பிறந்த குழந்தையை மருத்துவமனையில் விட்டுச் சென்ற பெண்ணைத் தேடும் காவல்துறை! 

Published on 29/09/2022 | Edited on 29/09/2022

 

Police are looking for the woman who left her newborn baby in the hospital!

 

புதுக்கோட்டை ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த குழந்தையை சில மணி நேரத்திலேயே விட்டுச் சென்ற பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

கடந்த 15 நாட்களுக்கு முன்பு ராணியார் மகப்பேறு மருத்துவமனைக்கு கர்ப்பிணியாக வந்த பெண்ணுக்கு செப்.17- ஆம் தேதி அழகான குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் குழந்தையை அங்கேயே விட்டு தப்பிச் சென்றுவிட்டார் அந்தப் பெண்.

 

அந்தப் பெண் தப்பிச் செல்லும் முன்பு கூறிய தகவல் அனைத்தும் பொய்யாக உள்ளதாக கூறுகின்றனர் காவல்துறையினர். தன் பெயர் ராணி, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ரெத்தினக்கோட்டை கிராமத்தில் பிறந்து மணப்பாறை அருகே உள்ள கருப்புகோயில் கிராமத்தில் சங்கர் என்பவரை திருமணம் செய்து வசித்து வந்த போது ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில் கணவர் துபாய் சென்று விட்டார். 

 

குழந்தைகளை திருநெல்வேலியில் உள்ள எனது தங்கை மல்லிகாவிடம் வளர்கிறார்கள். வயிற்றில் இருக்கும் குழந்தை என்ன குழந்தை என்பதை பார்க்க இச்சடி சாமியாரிடம் வந்த இடத்தில் குறி பார்க்க வந்த போது வலி ஏற்பட்டு ராணியார் மருத்துவமனைக்கு வந்ததாகக் கூறியுள்ளார்.

 

ஆனால் பிறந்த குழந்தையை போட்டுவிட்டு சென்ற பிறகு ராணி சொன்ன முகவரியில் தேடிய போது, அந்த பெண் சொன்ன அனைத்து தகவல்களும் பொய் என்பது தெரிய வந்தது. அதனால் குழந்தையை குழந்தைகள் காப்பகத்திற்கு தூக்கிச் சென்ற அதிகாரிகள், புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். பிறந்த குழந்தையை மருத்துவமனையிலேயே போட்டுவிட்டு தப்பிச் சென்ற பெண் யார் என்பது குறித்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு; மதுரையில் பரபரப்பு!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiffin box range Sensation in Madurai

மதுரை அருகே டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு என்ற பகுதியில் காரின் அருகே நின்று கொண்டிருந்தவர் மீது நேற்று இரவு (20.04.2024)  டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் அங்கிருந்த நவீன்குமார் என்பவர் காயமடைந்தார்.

மேலும் டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்டதில் நவீன்குமாருக்கு அருகில் இருந்த ஆட்டோக்காரர் கண்ணன் என்பவர் காயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த கீழவளவு காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த இருவரையும் போலீசார் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.