Skip to main content

போக்சோ வழக்கு: சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் தற்கொலை!

Published on 22/01/2022 | Edited on 22/01/2022

 

Pocso case: Man released on bail  who made wrong decision

 

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகிலுள்ளது நெல்லித்தோப்பு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பால குரு என்பவரது மகன் வசந்தகுமார்(21). இவர் உறவினர் சக்திவேல் என்பவருடன் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகிலுள்ள கொடிக்களம் பகுதியில் உள்ள ஒரு செங்கல் சேம்பரில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து அச்சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றுள்ளார். இதுகுறித்து அந்த சிறுமியின் தாயார் ஆவினங்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

அந்த புகாரின் பேரில் சிறுமியை கடத்திச் சென்றதாக வசந்தகுமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ள அவர் தினசரி ஆவினங்குடி காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி தினசரி ஆவினன்குடி காவல் நிலையம் சென்று கையெழுத்திட்டு வந்த வசந்தகுமார் நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு விட்டு நேரடியாக அவர் ஏற்கனவே வேலை செய்து வந்த செங்கல் சூளை சேம்பருக்கு சென்றுள்ளார்.

 

பிறகு மாலை தனது சொந்த ஊரான நெல்லித்தோப்பு செல்வதாக தனது உறவினர் சக்திவேல் இடம் கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆனால் அவரது சொந்த ஊருக்குச் செல்ல தயங்கிய வசந்தகுமார் அதிகாலை 3 மணி அளவில் அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கி உள்ளார். இது குறித்த தகவல் ஆவினங்குடி காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வசந்தகுமாரை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வசந்தகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

 

இதுகுறித்து வசந்தகுமாரின் தாயார் சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வசந்தகுமார் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? அவரது இறப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திட்டக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சிறை சென்றும் திருந்தவில்லை'- மீண்டும் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த நபர் கைது

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
nilgiri incident- the man who was arrested again

புதுச்சேரியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி, கஞ்சா போதை இளைஞர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு சாக்கடையில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சோக சம்பவத்தின் வடுக்கள் மறையும் முன்னரே நீலகிரியில் ஏற்கனவே பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்த இளைஞர் மீண்டும் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து சிறை தண்டனை பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் உதகை அருகே அஜித் குமார் என்ற 22 வயது இளைஞர் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அந்த நபர் மனநலம் சரியில்லை என விடுதலை பெற்று வெளியாகி இருந்தார். இந்நிலையில், மீண்டும் அதே பகுதியில் உள்ள ஏழு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்த நிலையில் அஜித்குமார் மீண்டும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

முதல்  வழக்கை விசாரித்த உதகமண்டலம்-நீலகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் 32 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பாக 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவியும் வழங்க உத்தரவிட்டுள்ளது. சிறையில் இருந்து வந்த நபர் மீண்டும் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

கொள்ளிடம் ஆற்றில் மாயமான மாணவர்கள்; சடலமாக மீட்பு!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
3 students missing who bathed in Kollidam river

கொள்ளிடம் ஆற்றில் குளித்த 3 மாணவர்கள் மாயமாகியுள்ளனர்.

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த 8 மாணவர்கள் உள்ளிட்ட 9 பேர் சென்னையில் இருந்து தஞ்சாவூர் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுள்ளனர். பின்னர் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மீண்டும் சென்னை திரும்பியுள்ளனர். அப்போது வழியில் அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மாணவர்கள் குளித்துள்ளனர். அச்சமயம் மாணவர்கள் பச்சையப்பன் என்பவர் ஆற்றில் சிக்கிக்கொண்டார்.

இதனையடுத்து மற்ற மாணவர்கள் பச்சையப்பனை காப்பற்ற முயன்று ஆற்றில் இறங்கியுள்ளனர். இதனால் பச்சையப்பனுடன் 8 மாணவர்களும் ஆற்றில் சிக்கிக் கொண்டனர். இதனைக் கவனித்த பொது மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீதமுள்ள 3 பேரை காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் தண்ணீர் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் காணாமல் போன 3 மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.  இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.