Skip to main content

ஜாமீனில் வெளிவந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபர்!

Published on 27/02/2021 | Edited on 27/02/2021

 

The person who was released on bail and was involved in a series of robberies ..!

 

பெரம்பலூர் மாவட்டத்தில் சமீபநாட்களாக தொடர் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. வேப்பந்தட்டை பகுதியில் உள்ள வங்கி, துணிக்கடை, சூப்பர் மார்க்கெட் என பல இடங்களில் அடுத்தடுத்து கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. அதேபோல், மங்கலமேடு பகுதியில் இரு சக்கர வாகன ஷோரூமில் கொள்ளை, அன்னமங்கலம் கிராமத்தில் ஐந்து வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை, ரஞ்சன்குடி என்ற ஊரில் இரு வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை, அரும்பாவூர் பகுதியில் கொள்ளை எனத் தொடர் கொள்ளையினால் மாவட்டத்தில் உள்ள மக்கள் அச்சத்திலிருந்தனர். அதேநேரம் கொள்ளையர்களைப் பிடிக்க முடியாமல் போலீசாரும் திணறி வந்தனர். இந்த நிலையில், மாவட்ட எஸ்.பி. நிஷா பார்த்திபன் உத்தரவின்பேரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர்களைப் பிடிப்பதற்காக மாவட்டம் முழுக்க கடும் சோதனை செய்யப்பட்டது.


மாவட்ட எஸ்.பி. நிஷா பார்த்திபன், டி.எஸ்.பி. சரவணன், அரும்பாவூர் சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ், காவலர்கள் லட்சுமணன், ஆறுமுகம் ஆகியோர் அரும்பாவூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞரை மடக்கிப் பிடித்தனர். அவர் தப்பி ஓட, அவரை போலீஸார் துரத்திச் சென்று பிடித்தனர். மேலும் பிடிபட்ட அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர், வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த 22 வயது விஜய் என்பதும் இவர் மேற்படி பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. 
 

அவரை கைது செய்த போலீசார், மேலும் விசாரணை செய்ததில் இவர் சேலம், ஆத்தூர் பகுதிகளில் தன் கைவரிசையைக் காட்டி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர், பல மாவட்டங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வருபவர். இவர், கொள்ளை வழக்கில் சிறை சென்று தற்போது சிறையிலிருந்து தற்போது ஜாமீனில் வெளியே வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. 

 

இந்த நிலையில், பெரம்பலூர் டவுனில் உள்ள ஒரு எலக்ட்ரிக் கடையில் கொள்ளை நடந்துள்ளது. அங்குள்ள கண்காணிப்புக் கேமராவை கொண்டு போலீசார் விசாரணை செய்ததில், கணபதி என்ற திருடனை கைது செய்துள்ளனர். இப்படி தொடர் திருட்டில் ஈடுபட்ட அவர்களில் இருவரை போலீசார் கைது செய்துள்ளது பெரம்பலூர் மாவட்ட மக்களைச் சற்று நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ எங்களுக்கு உத்தரவிடுங்கள்...” - அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Minister KN Nehru in support of Arun Nehru at perambalur for lok sabha election

தமிழக அரசு மூலம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட  நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒன்றிய அரசிடமிருந்து  திட்டங்களைப் பெற்றுநிறைவேற்றிட உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, அருன் நேருவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

பெரம்பலூர் பாராளுமன்றத் தி.மு.க வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து லால்குடியில் இருசக்கர வாகன பிரச்சாரப் பேரணி ரவுண்டானாவில் தொடங்கியது. முன்னதாக மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, லால்குடி சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரப் பேரணியைத் தொடங்கி வைத்து பேசுகையில், “லால்குடி சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நமது பகுதியில் எண்ணற்ற திட்டங்கள் நடைபெற்றிருப்பதை நன்கு அறிவீர்கள். மாநில அரசு செயல்படுத்தக்கூடிய திட்டங்களைக் காட்டிலும் ஒன்றிய அரசிடமிருந்து திட்டங்களைப் பெற்று நமது பகுதியில் நிறைவேற்றிட வேண்டும். இது நமது சொந்தத் தொகுதி என்பதால் அதிகமாகத் திட்டங்களைக் கொண்டு வந்து பணிகளைச் செய்திட உங்கள் ஆதரவு கேட்டு வந்துள்ளோம்.

Minister KN Nehru in support of Arun Nehru at perambalur for lok sabha election

எங்களுக்கு உத்தரவிடுங்கள், நாங்கள் பணியாற்றத் தயாராக உள்ளோம். லால்குடி நகராட்சி பகுதியில் புதிய பேருந்து நிலையம், தாலுகா அலுவலகம், அலுவலகத்திற்கு புதிய கட்டிடம், பொதுமக்கள் வசதிக்கேற்ப புதிய மார்க்கெட் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பணிகள் எல்லாம் அடுத்த மாதம்  தொடங்கப்பட உள்ளது. எனவே இப்படிப்பட்ட எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றிட உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து அருண் நேருவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்றத் தி.மு.க வேட்பாளர் அருண் நேரு வாக்காளரிடம் வாக்கு சேகரித்தார்.

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார்.