Skip to main content

“உங்கள ஃபோட்டோ எடுக்கணும்” - அரசு அதிகாரி போல் வந்த நபர்; மோசடி செய்யப்பட்ட பெண்கள்

Published on 04/06/2023 | Edited on 04/06/2023

 

A person who comes as a government official to “take your photo”; Cheated women

 

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே உள்ள வடக்கு ராஜபுரத்தில் வசிப்பவர் ஜெயச்செல்வி(55). கடந்த 24 ஆம் தேதி இவரது வீட்டிற்கு வந்த ஒரு மர்ம நபர் தான் தாலுக்கா அலுவலகத்தில் இருந்து வருவதாகக் கூறி, அரசிடமிருந்து உதவித் தொகை கிடைக்க உங்களை புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். புகைப்படம் எடுக்கும் போது, கழுத்தில் நகை போட்டுக் கொண்டு புகைப்படத்தில் இருந்தால் உதவித் தொகை கிடைக்காது எனவே கழற்றி வைக்குமாறு கூறியுள்ளார். 

 

அதை நம்பிய ஜெயச்செல்வி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை கழற்றி பக்கத்தில் வைத்துவிட்டு ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். செல்போன் மூலம் அவரை போட்டோ எடுத்த அந்த மர்ம நபர் அவரது கவனத்தை திசை திருப்பி நகையைத் திருடிக்கொண்டு சென்றுள்ளார். அவர் சென்ற பின் நகையைத் தேடிய பொழுது அது கிடைக்காமல் போகவே அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஜெயச்செல்வி இது குறித்து ஓலக்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

 

இந்த நிலையில் அதே சேத்தியாதோப்பு பகுதி காட்டுக்கரை பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் மனைவி அகிலாண்டேஸ்வரி என்பவரது  வீட்டிற்கு கடந்த 12 ஆம் தேதி சென்ற அதே மர்ம நபர் அவரிடமும் வட்டாட்சியர் அலுவலகம் மூலம் உதவித் தொகை பெறுவதற்கு புகைப்படம் எடுக்க இருப்பதாக கூறியுள்ளார். அவரது காதில் அணிந்து இருந்த 4 கிராம் தோட்டை கழட்டி வைத்துவிட்டு ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்கச் சொல்லியுள்ளார். இதன் பின் தோட்டை கழற்றி வைத்த அகிலாண்டேஸ்வரி கவனத்தை திசை திருப்பி அந்த தோடுகளை அபகரித்துச் சென்றுள்ளார். 

 

இந்த இரு புகார்களையும் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதில் சிதம்பரம் அருகில் உள்ள மதுராந்தக நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஆசை குமார் என்பவரது மகன் ரங்கநாதன் என்பவர் இச்செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதுபோன்று வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் முதியோர் உதவித் தொகை பெற்றுத் தர வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வருவதாக கூறி அவர்களை நம்ப வைத்து கழுத்தில் காதில் உள்ள நகைகளை அபகரித்துச் சென்றுள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. நகைகளை அபகரித்த ரங்கநாதனை தனிப்படை எஸ்ஐ ராஜா ஏட்டுகள் விஜயகுமார், சங்கர், ரஜினி, புகழ் மற்றும் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

 

அப்போது முதியோர்களிடம் நகை பறித்ததை ரங்கநாதன் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். வீடுகளில் தனியாக இருக்கும் இருக்கும் வயது முதிர்ந்த முதியோர்கள் இதுபோன்ற மர்ம மனிதர்களிடம் ஏமாறக்கூடாது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.