Skip to main content

கிருஷ்ணகிரியில் விபச்சார தரகர் கொலை; மதுரை லாரி ஓட்டுநர் கைது!

Published on 21/01/2021 | Edited on 21/01/2021

 

Person passes away in krishnagiri madurai lorry driver arrest

 

கிருஷ்ணகிரி அருகே, விபச்சாரத் தரகர் கொல்லப்பட்ட வழக்கில், மதுரையைச் சேர்ந்த லாரி ஓட்டுநரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம், கே.பூசாரிப்பட்டியைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளி அருகே நின்றுகொண்டு லாரி ஓட்டுநர்களை மடக்கி விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அந்தப் பெண்ணுக்கு, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பெரியாம்பட்டியைச் சேர்ந்த வெங்கடேசன் (45) என்பவர் வாடிக்கையாளர்களைப் பிடித்துக் கொடுக்கும் தரகராக செயல்பட்டு வந்துள்ளார்.

 

கடந்த 17ம் தேதி அவர்கள் போலுப்பள்ளி அருகே நின்றிருந்தபோது, அந்த வழியாக வந்த லாரி ஓட்டுநர் ஒருவரை நிறுத்தி விபச்சாரத்திற்கு அழைத்தனர். அப்போது ஏற்பட்ட பிரச்சனையில் லாரி ஓட்டுநர் இரும்பு கம்பியால் வெங்கடேசனையும், அந்தப் பெண்ணையும் சரமாரியாக தாக்கிவிட்டுச் சென்றார். இதில், வெங்கடேசன் உயிரிழந்தார். அந்தப் பெண் படுகாயம் அடைந்தார். 

 

இந்தக் கொலை குறித்து குருபரப்பள்ளி காவல் ஆய்வாளர் ரஜினி விசாரணை நடத்தினார். சம்பவம் நடந்தபோது குறிப்பிட்ட நேரத்தில் அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் குறித்து தீரிர விசாரணை நடத்தினர். அதில், மதுரை மாவட்டம் விராட்டிப்பத்து - தேனி சாலையைச் சேர்ந்த சுரேஷ்குமார் (32) என்ற லாரி ஓட்டுநர் இந்தக் கொலையில் ஈடுபட்டது தெரிய வந்தது. காவல்துறையினர் துரத்துவதை அறிந்த அவர், தலைமறைவானார். பொள்ளாச்சியில் பதுங்கி இருந்த அவரை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (ஜன. 19) கைது செய்தனர். அவர், காவல்துறையில் அளித்துள்ள வாக்குமூலத்தின் விவரம்:
 


‘கடந்த 17ம் தேதி இரவு கிருஷ்ணகிரி - ஓசூர் சாலையில் லாரியை ஓட்டிச்சென்றபோது போலுப்பள்ளி அருகே சாலையோரமாக நின்றுகொண்டு ஒரு பெண்ணும், ஆணும் டார்ச் லைட் அடித்தபடி லாரியை நிறுத்தினர். அப்போது அந்தப் பெண், உல்லாசமாக இருக்க என்னை அழைத்தார். அவருடன் இருந்த நபர் 200 ரூபாய் கொடுத்தால் அந்தப் பெண்ணுடன் உல்லாசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறினார். நானும் அந்தப் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க முடிவு செய்து, அந்தப் பெண்ணிடம் 200 ரூபாய் கொடுத்துவிட்டு அவரை அங்குள்ள மறைவிடத்திற்கு அழைத்துச் சென்றேன். 

 

உல்லாசமாக இருந்த நேரத்தில், அந்தப் பெண் திடீரென்று என்னைப் பிடித்து தள்ளினாள். என்னிடம் பணம் வாங்கிக் கொண்டு உல்லாசமாக இருக்க மறுத்தாள். அதனால், அவளிடம் கொடுத்த என்னுடைய பணத்தைப் பறிக்க முயன்றேன். 

 

அப்போது அந்தப் பெண் கூச்சல் போட்டதால், அங்கு புரோக்கர் வெங்கடேசன் ஓடி வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான், லாரியில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து வந்து அந்தப் பெண்ணையும், வெங்கடேசனையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன். 


ஏற்கனவே இதேபோல விபச்சார அழகி ஒருவர், கூச்சல் போட்டதால் அவருடன் வந்தவர்கள் என்னை அடித்து பணத்தைப் பறித்துச் சென்றனர். அதேபோல ஒரு சம்பவம் மீண்டும் நடந்து விடக்கூடாது என்பதால் நான் அவர்களை இரும்பு கம்பியால் அடித்தேன். அதில் வெங்கடேசன் இறந்துவிட்டார்.’ இவ்வாறு சுரேஷ்குமார் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். 

 

இதையடுத்து, ஜன. 19ம் தேதி இரவு கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுரேஷ்குமார், நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு; போலீசார் விசாரணை

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
In broad daylight, someone poured petrol and set it on fire; Police investigation

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டப்பகலில் சித்தப்பா மீது மகனே பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்து உள்ள சவரக்கோட்டை பிரிவு பகுதியில் வசித்து வருபவர் வடமலை. அவருடைய மகன்கள் சின்னவன் மற்றும் மணி. மணியின் மகன் செந்தில். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக செந்தில் அவருடைய விவசாய நிலத்தில் அறுவடை பணிக்காக டிராக்டரில் சென்றுள்ளார். அப்பொழுது சித்தப்பா சின்னவன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இது தொடர் பிரச்சனையாக இருந்து வந்த நிலையில் இருதரப்பினரும் காவேரிப்பட்டினம் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சித்தப்பா சின்னவன் தீவனக்கடை ஒன்றில் இருந்த பொழுது கடைக்குச் சென்ற செந்தில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி பற்ற வைத்தார்.

இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த சின்னவனை அங்கிருந்தவர்கள் நேற்று தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பட்டப்பகலில் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story

காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரம்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Rage for daughter refusing to give up love and incident happened in krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பட்வாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு காமாட்சி (33) என்ற மனைவியும், ஸ்பூர்த்தி எனும் 16 வயதில் மகளும் இருந்தார்கள். ஸ்பூர்த்தி, பாகலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி வீட்டை வெளியே சென்று ஸ்பூர்த்தி, இரவு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதில், பதற்றமடைந்த ஸ்பூர்த்தியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனால், அவர்கள் எங்கு தேடியும் ஸ்பூர்த்தி கிடைக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று முன் தினம் (16-03-24) இரவு பட்வாரப்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் ஒரு இளம்பெண் பிணமாக கிடந்தார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையில், ஏரியில் பிணமாக கிடந்தது ஸ்பூர்த்தி என்பதும், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. மேலும், அவர்கள் நடத்திய விசாரணையில், ஸ்பூர்த்தியும், பாகலூர் அருகே முத்தாலி பகுதியைச் சேர்ந்த சிவா (25) என்ற இளைஞரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரத்தை அறிந்த ஸ்பூர்த்தியின் பெற்றோர், அவரது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், ஸ்பூர்த்தி தனது காதலை கைவிடவில்லை என்று கூறப்படுகிறது. 

இதில் ஆத்திரமடைந்த ஸ்பூர்த்தியின் தந்தை பிரகாஷ், தாய் காமாட்சி ஆகியோர், மாணவியை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். மேலும், மாணவியின் உடலை சாக்கு மூட்டையில் அடைத்து மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று அந்த பகுதியில் ஏரியில் வீசியுள்ளதாக தெரியவந்தது. இதனையடுத்து, பிரகாஷ், காமாட்சி மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஸ்பூர்த்தியின் பெரியம்மா மீனாட்சி (36) ஆகிய 3 பேரையில் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதலை கைவிடாததால், பெற்றோரே மகளை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.