Skip to main content

காவிரி ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள விரைவில் அனுமதி பெற்றுத் தரப்படும்..! - அமைச்சர் விஜயபாஸ்கர்

Published on 08/12/2020 | Edited on 08/12/2020

 

Permission will be given soon to put sand in the cow cart in the Cauvery river ..! - Minister Vijayabaskar

 

கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சியை அடுத்த அய்யம்பாளையத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் செயல்படுகிறது. இந்தக் காகித ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கெமிக்கல் கழிவு நீரால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கெமிக்கல் கழிவைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து வைத்து வருகிறார்கள். 

 

ஆனால், இதுவரை எந்த  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் 7ஆம் தேதி மாலை அங்கு வந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆலை நிர்வாக அலுவலர்கள், விவசாயிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விவசாயிகள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஆலை நிர்வாகத்தின் மீது கூறினார்கள்.

 

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "தமிழ்நாடு காகித ஆலை எனப்படும் டி.என்.பி.எல் நிறுவனம் அதன் கழிவு நீரை விவசாய பாசனத்திற்காகச் செல்லும் வாய்க்காலில் கலந்துள்ளார்கள். ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு நீர் ஓடை வழியாக புகழுர் வாய்க்காலிலும் கலப்பதாக விவசாயிகள் புகார் கூறியுள்ளார்கள்.

 

விவசாயத்திற்கு கேடு விளைவிக்கும் டி.என்.பி.எல் நிர்வாகத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் விவசாயிகள் வழக்கு தொடர்ந்து, நீதிமன்றம் விவசாயிகளுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளால் பயிர்கள் நாசமடைந்துள்ளன. இது தொடர்பாக அரசுக்கு விவசாயிகள் மனு கொடுத்ததின் பேரில் ஆய்வு செய்யப்பட்டது. 

 

ஆலை நிர்வாகம் தொடர்ந்து கழிவு நீரை வெளியேற்றுவதால் அது புகழூர், நெரூர், வாங்கல் வாய்க்கால்களில் கலந்து செல்கிறது. இந்தக் கழிவு நீர், காவிரி ஆற்றில் கலக்கும் வரை அப்பகுதி நிலங்கள் கெட்டுப்போய் உள்ளன. நீதிமன்றத்தின் உத்தரவை டி.என்.பி.எல் நிறுவனம் முறையாகக் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

 

கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் பழைய பஸ் பாஸே செல்லும். கரோனோ காலகட்டம் என்பதால் புதிதாக பஸ் பாஸ் தயார் செய்யப்படவில்லை. மாணவர்கள் பேருந்தில் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்குமாறு நடத்துநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் இப்போது அமராவதி ஆற்றில்  17,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கரூர் டவுனில் 2,000 கன அடி தண்ணீர் தற்போது கடந்து சென்று கொண்டிருக்கிறது. 

 

உபநதிகளான குதிரையாறு, பாலாறு, பெருந்தலாறு, வரதமாநதி உள்ளிட்ட ஆறுகள் மற்றும் மழை நீருடன் சேர்ந்து 17,000 கன அடி நீர் 8ஆம் தேதியிலிருந்து வரும் என்பதால் கரையோரத்தில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். கரூர் மாவட்டத்தில் உள்ள மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளூர் தேவைக்கு மணல் அள்ள அரசிடம் அனுமதி கேட்டுள்ளார்கள். அதை பரிசீலனை செய்து மணல் அள்ள ஐந்து  இடங்களைக் கண்டறிந்து அரசுக்கும், முதல்வருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்து ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிமன்றம்,  வழக்கு தொடர்ந்தவரை எச்சரித்ததுடன் அந்த மனுவினை நிராகரித்துள்ளது. மாட்டு வண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்காக மிக விரைவில் மணல் அள்ள அனுமதி பெற்றுத் தரப்படும்.” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.