Skip to main content

சசிகலாவை வரவேற்க பேனர் வைக்க அனுமதி வேண்டும் – அமமுக மனு?

Published on 13/01/2021 | Edited on 13/01/2021

 

 Permission is required to place a banner to welcome Sasikala - Ammk petition

 

சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடகா மாநிலம் பெங்களுரூ பார்ப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும், அதிமுக பொதுச்செயலாளருமான சசிகலா, 4 ஆண்டுகாலம் தண்டனை முடிந்து வரும் ஜனவரி 27- ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சிறையில் இருந்து வெளியேவரும் சசிகலாவை வரவேற்க அதிமுகவில் இருந்து பிரிந்து அமமுக என்கிற தனிக்கட்சி தொடங்கியுள்ள டி.டி.வி.தினகரன் சில ஏற்பாடுகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. பெங்களுரூவில் இருந்து சென்னை வரை பிரமாண்டமான வரவேற்பு வழங்க ஏற்பாடுகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகரில் அமமுகவின் மா.செவும், முன்னாள் எம்.எல்.ஏவுமான பாலசுப்ரமணி தரப்பில் இருந்து, ஆம்பூர் காவல்நிலையத்தில் அமமுக சார்பில் இன்று ஒரு மனு தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த மனுவில் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வரும் சசிகலாவை வரவேற்க பேனர்கள் வைக்க அனுமதி வேண்டும் எனக்கேட்டு மனு தந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த மனுவை வாங்கிய போலீஸார் இதுக்குறித்து எஸ்.பி விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் காவல்துறை தலைமைக்கு தகவல் தெரிவித்துள்ளார். உளவுத்துறை மூலமாக இது முதல்வர் எடப்பாடி கவனத்துக்கும் சென்றுள்ளது. சசிகலாவால் முதல்வரான எடப்பாடி அனுமதி தருவாரா? தரமாட்டாரா என கேள்வி எழும்பியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.க.வுடன் அ.ம.மு.க. கூட்டணி” - டி.டி.வி. தினகரன் உறுதி

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
tTV Dinakaran confirmed for AMmK alliance with BJP

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன.

இதற்கிடையே பா.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. இணைய இருப்பதாகவும், அதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், திருச்சியில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கூட்டணி தொடர்பாக பா.ஜ.க.விடம் கடந்த 6 மாதங்களாக பேசிக் கொண்டிருக்கிறோம். எனவே பா.ஜ.க.வுடன் - அ.ம.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது.

பா.ஜ.க. கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை அ.ம.மு.க. அளிக்கும். எந்த உறுத்தலும் இல்லாமல் பா.ஜ.க.வுடன் அ.ம.மு.க. கூட்டணி அமைக்கிறது. எங்களது கோரிக்கைகளை ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக கொடுத்துவிட்டோம். பா.ஜ.க.வின் வெற்றிக்கு அணில் போல உதவியாக இருப்போம். தாமரை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று பா.ஜ.க., அ.ம.மு.க.வை நிர்ப்பந்திக்கவில்லை. எத்தனை தொகுதி, எந்தெந்த தொகுதி என்பது குறித்து எல்லாம் பிரச்சனை கிடையாது. எங்களின் தேவை என்ன என்பது பா.ஜ.க.வுக்கு தெரியும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

நிர்பந்திக்கும் பாஜக; தயக்கத்தில் ஓபிஎஸ்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
 Forced BJP; Homeland OPS

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

தி.மு.க கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டில் தீவிரம் காட்டிவரும் நிலையில் அ.தி.மு.க. அதன் கூட்டணிக்காக பாமக, தேமுதிக, புரட்சி பாரதம், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.

மறுபுறம் பாஜக கூட்டணியில் உள்ள தமாக, தமமுக, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதேநேரம் டி.டி.வி.தினகரனின் அமமுக, மற்றும் ஓபிஎஸ் அணியுடன் கூட்டணி வைக்கவும் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. ஆனால், பாஜக கூட்டணியை உறுதிசெய்யும் முன்னரே ஓபிஎஸ், தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிப்பதாகவும், மூன்றாவது முறையாக மோடியே பிரதமராக வர வேண்டும் என அவருடைய விருப்பத்தை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளிப்படுத்தி வந்தார்.

அதிமுகவில் ஏற்பட்ட பிளவில் தனித்து இருக்கும் ஓபிஎஸ் ஒருவேளை, பாஜக கூட்டணியில் நின்று போட்டியிட்டால் எந்த சின்னத்தில் நிற்பது என்பது தொடர்பான கேள்விகள் எழுந்தது. அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்சுக்கு தடைவிதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இரட்டை இலையில் நிற்பது சாத்தியமில்லாதது என்ற நிலை உருவாகியுள்ளது. அதேநேரம் பாஜக ஓபிஎஸ்ஸை தாமரை சின்னத்தில் நிற்க நிர்பந்திப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் ஓபிஎஸ் தரப்போ தாமரையில் நிற்க மறுப்பு தெரிவித்ததால் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் இணைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.