Skip to main content

“காவிரிக்கு நிரந்தர தீர்வு..” - பிரேமலதா விஜயகாந்த் 

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

“Permanent solution to Cauvery..” - Premalatha Vijayakanth

 

தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று ஆளுநரைச் சந்தித்து பல கோரிக்கைகளை வலியுறுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “காவிரியில் தமிழ்நாட்டிற்கு வேண்டிய உரிமையை பெற்றுத் தருவதற்கு மத்திய அரசு உடனடியாக செவி சாய்த்து, நமது விவசாயிகளுக்கு வேண்டிய உரிமைகளை தரவேண்டும் என்று ஆளுநரிடம் கேட்டுள்ளேன். ஒவ்வொரு ஆண்டும் நாம் கர்நாடகாவை எதிர்நோக்கி இருக்க வேண்டிய நிலைமை இருக்கிறது. தேசிய நதிகளை இணைப்பதே இதற்கு நிரந்தரமான தீர்வாக அமையும். இதற்கு மத்திய மாநில அரசுகள் உடனடியாக செவி சாய்க்க வேண்டும். 

 

கர்நாடகா உபரி நீரை வைத்துக்கொண்டே நமக்கு தண்ணீர் கொடுக்க மறுக்கிறது. கர்நாடகாவில் தமிழகம், தமிழக மக்கள், தமிழக மக்களுக்கு எதிராக அவர்கள் செய்யக்கூடிய விஷயங்கள் கண்டனத்திற்கு உரியது. நமது நீர்வளத்துறை அமைச்சர் டெல்லி சென்று வருகிறார். ஆனால், இங்கு எதுவுமே முடிவுக்கு வரவில்லை. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவோம் என்று அவர் சொல்கிறார். இதுவே முதலில் கண்டனத்திற்குரியது. அதேபோல், நம் தமிழர்களை கர்நாடகாவில் அடிக்கிறார்கள் இதற்கெல்லாம் எப்போது நிரந்தர தீர்வு ஏற்படும் என கேள்வி எழுப்பினால், ‘அதற்கு நான் என்னப்பா பண்றது’ என நகைச்சுவையாக பேசுகிறார். இது நகைச்சுவையாக பேசக்கூடிய விஷயம் கிடையாது. மிகவும் உணர்வுப்பூர்வமான விஷயம். காவிரியில் தண்ணீரை பெற்று தமிழ்நாட்டு விவசாயிகளை காப்பது அரசின் கடமை.  

 

என்.எல்.சி.க்கு நமது தொழிலாளர் நிலத்தை கொடுத்துவிட்டு, ஊதியம் இல்லாமல், நிரந்த பணி இல்லாமல் எத்தனையோ ஆண்டுகளாக போராடிவருகின்றனர். எனவே என்.எல்.சி.யில் அவர்களுக்கு உரிய உரிமை பெற்றுத் தரவேண்டும். நமது மீனவர்களின் உயிருக்கோ, உடமைக்கோ உரிய பாதுகாப்பு இல்லை. எனவே அவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு வேண்டும். இதற்கு நிரந்தர தீர்வு கச்சத் தீவை மீட்டெடுப்பதே. இதனை ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளேன்” என்றார். 

 

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” - விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து பிரேமலதா விஜயகாந்த்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

Premalatha Vijayakanth on Vijayakanth's health No one should believe rumours” -

 

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில் நுரையீரல் பாதிப்புக்காக கடந்த வாரம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். 

 

விஜயகாந்த் உடல்நிலை குறித்து கடந்த 29 ஆம் தேதி மருத்துவ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், அவரது உடல் சீராக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் தமிழக அரசியல் களமும் பரபரப்படைந்தது. அவரது ரசிகர்களும் தேமுதிக கட்சித் தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர் பூரண குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதனிடையே வீடியோ வெளியிட்ட பிரேமலதா, விஜயகாந்த்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் நலமுடன் வீடு திரும்புவார் எனவும் பேசியிருந்தார்.

 

இந்த நிலையில், விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார் அதனால் யாரும் வதந்திகளை நம்பவேண்டாம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, “தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆரோக்கியமாக இருக்கிறார். வெகு விரைவில் விஜயகாந்த் நல்ல உடல்நலத்துடன் வீடு திரும்புவார். நம் அனைவரையும் சந்திப்பார். யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், அதனை நம்பவும் வேண்டாம்” என்று கூறியுள்ளார். 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

நீட் தேர்வை ஒழிக்க முடியாது - பிரேமலதா விஜயகாந்த்

Published on 28/10/2023 | Edited on 28/10/2023

 

Premalatha Vijayakanth says NEET cannot be abolished

 

சேலம் மாவட்டத்தில், தே.மு.தி.க கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று (27-10-23) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். 

 

அப்போது அவர், “உதயநிதி ஸ்டாலின் 50 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி நீட்டை ஒழிக்கப் போகிறேன் என்று சொல்கிறார். 50 கோடி கையெழுத்து வாங்கினாலும் நீட்டை ஒழிக்க முடியாது. நீட்டை ஒழிக்க முடியாது என்று உச்சநீதிமன்றமே கூறிவிட்டது. அதனால், தயவுசெய்து மாணவர்களை குழப்பாதீர்கள். அவர்களின் அரசியல் ஆதாயத்திற்காக மாணவர்களை குழப்பி, அவர்களை திசை திருப்பும் வேலையை பார்த்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், மாணவர்கள் யாரும் இவர்கள் சொல்வதை கேட்க தயாராக இல்லை என்பது உண்மை. தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க முடியாது என்பதை தெரிந்துகொண்டு மாணவர்கள் அனைவரும் படிக்க ஆரம்பித்து விட்டார்கள். 

 

ஏனென்றால், இந்தியாவிலேயே அதிகளவு படிப்பறிவு இல்லாத மாநிலம் பீகார். அந்த மாநிலத்தில் உள்ள மாணவர்களே நீட் தேர்வுக்கு தயாராகி படிக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்தியாவிலேயே அதிகளவு படிப்பறிவு உள்ள தமிழ்நாட்டு மாணவர்களை ஏன் இவர்கள் குழப்பி கொண்டிருக்கிறார்கள். நீட்டை ஒழிப்போம் என்று கூறிய ஒரே காரணத்திற்காக உதயநிதி ஸ்டாலின் அதையே கையில் கொண்டு பேசிக்கொண்டிருக்கிறார். 

 

ஒரு அரசாங்கம், மாணவர்களை சரியான பாதையில் வழிநடத்த வேண்டும். இனிமேல் நீட்டை ஒழிக்க முடியாது, அனைவரும் படிக்க தயாராகுங்கள் என்று அவர்களிடம் தெளிவாக சொல்ல வேண்டும். இன்றைக்கு அனைத்து மாணவர்கள் தேர்வு எழுத தயாராகிவிட்டார்கள். அதனால், இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இந்தியாவிலேயே அதிகமான மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்ற மாணவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக தான் இருப்பார்கள்” என்று கூறினார்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்