Skip to main content

பரோலில் இன்று வீட்டுக்கு செல்கிறார் பேரறிவாளன்... -போலிஸ் பாதுகாப்பு

Published on 09/10/2020 | Edited on 09/10/2020

 

33

 

முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை குற்றவாளிகளாக முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபார்ட்பயாஸ், ஜெயக்குமார், ரவிசந்திரன் என 7 பேர் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ளனர். சுமார் 29 ஆண்டுகளாக சிறையில் உள்ள இவர்களை விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது தமிழக அரசியல் கட்சிகள், பெரும்பான்மை மக்களின் விருப்பமாக உள்ளது. இது தொடர்பான கோப்பு கவர்னர் கையெழுத்துக்காக உள்ளது. 2 ஆண்டுகளாகியும் அந்த கோப்பு மீது எந்த முடிவும் எடுக்காமல் வைத்துள்ளார் கவர்னர்.


இந்நிலையில் சிறையில் உள்ளவர்களை பரோல் வழங்கி குடும்பத்துடன் இருக்க அரசு முன்வரவேண்டும் என்கிறது. அதனையும் செயல்படுத்த அரசு விரும்புவதில்லை.


இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், சிறையில் கரோனா பரவுகிறது, ஏற்கனவே தன் மகன் பல்வேறு உடல் நோய்களால் அவதிப்படுவதால் அவருக்கு பரோல் வழங்கி வீட்டிலேயே வைத்திருக்க அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தேன், என் மனுவை அவர்கள் பரிசீலிக்கவில்லை, அதனை பரிசீலனை செய்ய வேண்டும் எனக்கேட்டு மனு செய்தார். இதன் மீதான நீண்ட விசாரணைக்கு பின் உயர்நீதிமன்றம் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கி ஆணை பிறப்பித்தது.


இதனை தொடர்ந்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், அக்டோபர் 9ந்தேதி காலை 8 மணிக்கு புழல் சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு பலத்த போலிஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டார். வேலூர் மத்திய சிறையில் சிறை நடைமுறைகள் முடித்துக்கொண்டு அக்டோபர் 9ந்தேதி மதியம் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து வரப்படுகிறார்.


இதனால் பேரறிவாளன் வீடு உள்ள பகுதி பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பேரறிவாளன் வீட்டில் தங்கியுள்ள நாட்களில் திருப்பத்தூர் மாவட்ட போலிஸ் பாதுகாப்பு வழங்கவுள்ளது. ஒரு டி.எஸ்.பி தலைமையில் 15 பேர் கொண்ட ஆயுதம் ஏந்திய போலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 3 ஷிப்ட்களாக போலிஸ் பிரிக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

வேட்பாளரை வசைபாடும் நிர்வாகிகள்; அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோவால் பரபரப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument to party officials with Vellore candidate AC Shanmugam

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின் சில இடங்களில் உட்கட்சி மோதல் உச்சத்துக்குச் சென்றுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏசி சண்முகம் போட்டியிட்டார். தமிழ்நாட்டில் பணமழை பொழிந்த சிலதொகுதிகளில் மிக முக்கியமானது வேலூர் நாடாளுமன்ற தொகுதி. வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய், ஒரு பூத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் என சுமார் 100 கோடிக்கு மேல் தேர்தல் களத்தில் செலவு செய்துள்ளாராம் ஏசி சண்முகம்.

பாஜக நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள் மாவட்டம் ஒன்றியம் நகர கிளை வரை லட்சங்களில் தேர்தல் பணிக்காக ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்கி உள்ளனர். இப்படி பணம் வாங்கியவர்கள் வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் பங்கு பிரிப்பதில் அடித்துக்கொண்டு இருக்கின்றனர். தேர்தலுக்கு முன்பே ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்குவதில் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து சில ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் இப்பொழுது ஏ.சி. சண்முகத்தை கடுமையான முறையில் விமர்சிக்கும் ஆடியோக்கள் வெளியாகி உள்ளன. அதன் தொடர்ச்சியாக தினமும் சண்டையும் அடித்துக் கொண்டும் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் பணம் பங்கு பிரிப்பதில் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பாஜக வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயம் அடைந்த கோகுலை காவல்துறையினர் மீட்டு அழைத்து வந்த போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கினர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மற்றும் ஸ்ரீ வர்ஷன் ஆகிய மூன்று பேரை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு ஒன்றியத்தில் பாஜக நிர்வாகிகள் பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் புதிய நீதிக் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஏ.சி. சண்முகத்தை ஆபாசமான வார்த்தைகளில் கொச்சையாகத் திட்டி பேசி உள்ளனர். இந்த ஆடியோ தற்போது வெளியாகி, பாஜக தரப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இதனால் வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன்,  பேரணாம்பட்டு ஒன்றியத்தை மொத்தமாக களைத்து விட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்படி தேர்தல் முடிந்த பின்னரும் தினம் தினம் வேலூர் மாவட்ட பாஜகவில் அடிதடியும் சண்டையும் நடந்து வருகின்றது.

புதிய நீதிக் கட்சியின் குடியாத்தம் பகுதி நிர்வாகிகளும், வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சிலரும் கட்சியிலிருந்து நீக்குவதற்கான பணியில் ஏ.சி. சண்முகம் ஈடுபட்டுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்