Skip to main content

முறையற்ற தொடர்பு... தற்கொலையில் முடிந்த சோகம்!

Published on 20/01/2021 | Edited on 21/01/2021

 

PERAMBALUR INCIDENT LODGE

 

பெரம்பலூர் நகரில் உள்ளது வெங்கடேசபுரம் நகர். அங்குள்ள ஒரு தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்த முறையற்ற தொடர்பில் இருந்த இருவர் இன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

காலை நீண்ட நேரம் வரை கதவை திறக்கவில்லை அதையடுத்து அந்த லாட்ஜ் ஊழியர்கள் பலமாக கதவைத்தட்டி திறக்குமாறு அழைத்துள்ளனர். நீண்டநேரம் இருவரும் கதவு திறக்காததால் பெரம்பலூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்று காவல்துறையினர் உதவியுடன் அந்த அறையின் கதவு உடைக்கப்பட்டு திறக்கப்பட்டது. உள்ளே ஒரு ஆண் ஒரு பெண் இருவரும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அந்தப் பெண் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

 

இதையடுத்து உயிருடன் உள்ள ஆணுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் யார் பெரம்பலூரில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கிய இதற்கு காரணம் என்ன இப்படி பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்தனர். அவர்களின் விசாரணையில், அந்த ஆண் சென்னை கே.கே நகர் பகுதியை சேர்ந்த 45 வயது மகேந்திரன் என்பதும், இறந்துபோன பெண்  துறையூர் அருகே உள்ள எரக்குடி என்ற ஊரைச் சேர்ந்த பூங்கொடி என்பதும், இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தற்போது சென்னை கே.கே நகரில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்  என்பதும்  தெரிந்தது. அந்த ஓட்டலுக்கு அடிக்கடி சாப்பிட செல்லும் மகேந்திரன் பூங்கொடியுடன் அறிமுகமாகி  இருவரும் முறையற்ற தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.

 

பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார் பூங்கொடி. சில நாட்கள் கூட பிரிந்திருக்க முடியாத மகேந்திரன் அவரை பின்தொடர்ந்து வந்தவர், பூங்கொடியை அவரது ஊரில் இருந்து பெரம்பலூருக்கு வரவழைத்து கடந்த 17-ஆம் தேதி அந்த தனியார் விடுதியில் அறை எடுத்து இருவரும் தங்கியுள்ளனர்.

 

அங்கிருந்தபடியே திருச்சி, சமயபுரம், கல்லணை, முக்கொம்பு ஆகிய பகுதிகளுக்கு ஜாலியாக சென்று சுற்றிப்பார்த்து விட்டு இரவு நேரத்தில் பெரம்பலூர் விடுதிக்குவந்து தங்கி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த தகவல் அவரவர்கள் வீடுகளுக்கும் தெரிய வரவே அவர்கள் கண்டித்துள்ளனர். இரு குடும்பத்தினரின் நெருக்கடி காரணமாக இருவரும் விஷம் அருந்தி இறப்பது என்று முடிவு செய்து அதன்படி நேற்று இரவு விடுதி அறையில் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளனர். இதில் பூங்கொடி இறந்து போனார். மகேந்திரன் தீவிர சிகிச்சையில் உள்ளார். மகேந்திரனுக்கு மனைவி பிள்ளைகள்  என  குடும்பத்தினருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் மகேந்திரன் திசைமாறி சென்றதன் விளைவு இப்போது இருகுடும்பத்தினரையும் அவமானத்திலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.