Skip to main content

இன்ஸ்டாகிராமில் ஆபாச புகைப்படம்; இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Published on 28/01/2023 | Edited on 28/01/2023

 

 People Who Depicted woman Photos Instagram

 

டிஜிட்டல் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு ஆக்கப்பூர்வமாக பயன்படுகிறதோ அதே அளவுக்கு சமூகத்திற்குத் தீங்கான அம்சமாகவும் உள்ளது.  கிட்டத்தட்ட இரண்டுபுறம் கூரிய கத்தி போலதான் இத்தைகய தொழில்நுட்பங்கள் உள்ளன.     பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், வாட்ஸ்ஆப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் படங்கள், தனிப்பட்ட  விவரங்களை வைத்துக்கொண்டு மிரட்டும் கும்பலும் அவ்வப்போது காவல்துறை வசம் சிக்கிக் கொள்ளும் சம்பவங்களும் நடக்கின்றன.     குறிப்பாக பெண்கள், சமூக ஊடகங்களில் தங்களின் தனிப்பட்ட விவரங்கள், படங்களை பகிர வேண்டாம் என சைபர் கிரைம் காவல்துறையினர்  எச்சரித்துள்ளனர்.     இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் பெண் ஒருவர் பதிவிட்ட குடும்பப் புகைப்படம் ஒன்றை, மர்ம நபர்கள் ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றம் செய்துள்ள சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது. 

 

அதன் விவரம்..

 

சேலம் அழகாபுரம் பெரியபுதூரைச் சேர்ந்த 34 வயது பெண் ஒருவர், அம்மாபேட்டை மகளிர் காவல்நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.     அந்த மனுவில், ''நான் என் குடும்ப உறுப்பினர்களுடன் இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தேன். அதை மர்ம  நபர்கள் திருடி, ஆபாச வர்ணனைகளுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். அந்தப் படங்களை என் உறவினர்களுக்கும் அனுப்பி உள்ளனர்.  இதனால் என் குடும்பத்தினரும் நானும் மன உளைச்சல் அடைந்துள்ளோம். இந்த செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும்,'' என்று கூறியிருந்தார்.     காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.