Skip to main content

முதல்வருக்கும், நடிகர் சூர்யாவுக்கும் கொட்டடித்து நன்றி கூறிய பழங்குடியின மக்கள்! (படங்கள்)

Published on 07/12/2021 | Edited on 07/12/2021

 

இந்து ஆதியன் இனமக்களுக்கு சலுகைகளை அறிவித்த தமிழ்நாடு முதல்வருக்கும், ‘ஜெய் பீம்’ திரைப்பட நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவினருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக கொட்டடித்து நன்றி தெரிவித்தனர் நாகை மாவட்ட பழங்குடியின மக்கள். இருளர் இனம் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களின் அடிப்படை உரிமை சார்ந்த பிரச்சனையை ஆழமாகப் பேசி, உலக அளவில் விவாதிக்கச் செய்யும்படி வெளியானது ‘ஜெய் பீம்’ திரைப்படம். பலதரபட்ட மக்களையும் பேசவைத்து பெரும் வரவேற்பைப் பெற்றது.

 

‘ஜெய் பீம்’ திரைப்படத்தைப் பார்த்து கலங்கிய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், வருகின்ற 31ஆம் தேதிக்குள் தமிழ்நாடு முழுவதும் உள்ள பழங்குடியின மக்களுக்குத் தேவையான அடிப்படை வசிகள் அனைத்தும் கிடைக்கவும், அவர்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் சாதிச் சான்றிதழை வழங்கிடவும் உத்தரவிட்டிருந்தார். இந்தச் சூழலில், பழங்குடியின மக்களின் வலிகளை உணர்ந்து, அடிப்படை தேவைகள் கிடைக்க அதிரடியாக உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தை  நாகை அவுரி திடலில் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

 

வழக்கமாக அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சங்கங்களின் போராட்டம், ஆர்ப்பாட்டம், பாராட்டு விழாக்களைக் கண்ட அவுரித்திடல் பழங்குடி மக்களை சுமந்திருந்தது. முதல்வருக்கு நடந்த பாராட்டு விழா கூட்டத்தில், செல்லூர், பொறக்குடி, நீலப்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் தவறாமல் வந்திருந்தனர். விழாவில் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கொட்டடித்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அங்கிருந்தவர்கள் எல்லோரும் அம்பேத்கர், தமிழ்நாடு முதல்வர், நடிகர் சூர்யா ஆகியோரின் பதாகைகளை ஆர்வத்தோடு தூக்கிப்பிடித்து பழங்குடியின மக்களின் உரிமைகளை வெளி உலகத்திற்கு கொண்டுவந்த நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து மகிழ்ந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கார்த்திக் சுப்புராஜுடன் கூட்டணி வைத்த சூர்யா - வெளியான சர்ப்ரைஸ் அறிவிப்பு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
karthick subburaj directing suriyas 44th film

சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  3டி முறையில் சரித்திரப் படமாக 38 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. சமீபத்தில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற ஏப்ரலில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. 

இப்படத்தை தொடர்ந்து தனது 43வது படத்திற்காக சுதா கொங்கராவுடன் கூட்டணி வைத்துள்ளார். துல்கர் சல்மான், நஸ்ரியா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மா உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். கடந்த அக்டோபர் மாதம் வெளியான அறிவிப்பு வீடியோவில், படத்தின் தலைப்பு மறைக்கப்பட்டு  'புறநானூறு' என்ற டேக் லைன் மட்டும் இடம் பெற்றிருந்தது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ள நிலையில் அவருக்கு 100வது படமாக அமைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் மதுரையில் உள்ள கல்லூரியில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் சூர்யா நடிக்கும் அடுத்த பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. சூர்யாவின் 44ஆவது படமாக உருவாகும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். சூர்யாவின் 2டி நிறுவனமும் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. யாரும் எதிர்பாராத சர்ப்ரைஸாக இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளார்கள். ஏற்கெனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தை சூர்யா கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் சுப்புராஜ், கடைசியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து விஜய்யை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது . ஆனால் தற்போது சூர்யாவுடன் திடேரென்று கைகோர்த்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Next Story

ரீ ரிலீஸுக்கு தயாராகும் சூர்யா படம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
anjaan re release update

வெற்றி பெற்ற பழைய படங்களை மீண்டும் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ரீ ரிலீஸ் செய்யப்படுவது நீண்ட காலமாக இருந்து வருகிறது. சமீப காலமாக ரீ ரிலீஸ் செய்யும் படங்கள் அதிகரித்து வருகின்றன. எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி தற்போது இருக்கும் முன்னணி நடிகர்கள் படங்கள் வரை தொடர்ந்து ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றது. 

அந்த வகையில் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான பையா படம் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அப்போது படம் முடிந்ததும் இயக்குநர் லிங்குசாமி திரையரங்கிற்கு வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். 

anjaan re release update

அப்போது அவர், அஞ்சான் படத்தை ரீ எடிட் செய்துள்ளதாகவும் அதை மீண்டும் திரையரங்கில் ரீ ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் அஞ்சான். லிங்குசாமியே தயாரித்திருந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகரக்ள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி பின்பு கலைவையான விமர்சனத்தையே பெற்றது குறிப்பிடத்தக்கது.