Skip to main content

மறியலில் ஈடுபட்ட மக்கள்! ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை!

Published on 27/06/2022 | Edited on 27/06/2022

 

People struggle to get road

 

சிதம்பரம் அருகே கொள்ளிடம் பாலத்தில் வல்லம்படுகை முதல் புளியங்குடி வரை உள்ள தீத்துக்குடி,கருப்பூர், நளன்புத்தூர், முள்ளங்குடி, கீழபருத்திகுடி, மேலபருத்திககுடி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்லும் பாதையான கொள்ளிடம் இடது கரை சாலை சிதிலமடைந்து போக்குவரத்திற்கு லாய்கற்று உள்ளது. இதனால் பொதுமக்கள் சாலையில் விழுந்து படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதுகுறித்து கடந்த பல ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் தலைமையில் கொள்ளிடம் பாலம் அருகே சிதம்பரம் - திருச்சி  தேசிய நெடுஞ்சாலையில் தரையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தரமான தார் சாலை அமைத்துத் தரவேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள்.

 

People struggle to get road

 

இதனால் தேசிய நெடுஞ்சாலையில் 40 நிமிடத்திற்கு மேலாகப் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, டி.எஸ்.பி ரமேஷ் ராஜ், பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்திக் கலைந்து போகச் செய்தனர். இதனையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் இந்தச் சாலை அமைக்க ரூ. 19 கோடி தேவைப்படுவதால் இதற்கான திட்ட மதிப்பீடு மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் கனிமவள திட்ட நிதியைக் கொண்டு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினார்கள். 


இந்த மறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உதயகுமார், ராமச்சந்திரன், குமராட்சி ஒன்றிய செயலாளர் மனோகரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மாசிலாமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

சிதம்பரத்தில் இ.பி.எஸ். பிரச்சாரம்; பொதுக்கூட்ட பணிகள் தீவிரம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Edappadi Palaniswami is campaigning in Chidambaram on 31st

சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறார். அதேபோல் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயர் கார்த்தியாயினி போட்டியிடுகிறார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் வேட்பாளர் சந்திரகாசன் போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு கேட்டு வரும் 31 ஆம் தேதி சிதம்பரம் புறவழிச் சாலை பகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதனையொட்டி பொதுக்கூட்டம் மேடை அமைப்பதற்காகப் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிதம்பரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழி தேவன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.