Skip to main content

மரணக் குழிகள்... மக்கள் போராட்டம்...

Published on 24/09/2019 | Edited on 24/09/2019

வீட்டு வரியை விர்ருனு ஏத்தீட்டீங்க... சொத்து வரிய பலமடங்கு உயர்த்திட்டீங்க, பாதாள சாக்கடை இணைப்பு கட்டணத்தை கடகடனு அதிகமாகிட்டீங்க உழைச்சு சம்பாதித்து அதை கொண்டு வந்து உங்களுக்கே மொய் வைக்கனுமா? என ஈரோடு மாநகர மக்கள் ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் மீது கொதிநிலையில் உள்ளார்கள். ஒவ்வொரு நாளும் போராட்டம் தான்.

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வரி செலுத்துவோர் சங்கம் சார்பில் அதன் தலைவர் சண்முக சுந்தரம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்தனர்.

 

People struggle in erode corporation office


அவர்கள் ஈரோடு மாநகரில் கடுமையாக  உயர்த்தப்பட்ட சொத்துவரி ,வீட்டுவரியை பாதியாக குறைக்க வேண்டும் என்றும், ஈரோடு மாநகராட்சியில் பாதாள சாக்கடை இணைப்புக்கு பிளம்பர்கள் விதிகளுக்கு புறம்பாக அதிகளவு கட்டணம் வசூல் செய்கிறார்கள் எனவும்  இதனை தடுத்து நிறுத்த வேண்டும். அதோடு பாதாள சாக்கடை மூடிகள் சாலையின் நடுவில் அமைக்கப்படுகிறது. அது தரமற்றதாகவும், மேடு பள்ளமாக இருப்பதை  சீமைக்க வேண்டும்.

ஈரோடு மாநகர் பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக மேடு பள்ளமாக மொத்தத்தில் மக்களை காவு வாங்கும் மரண குழிகளாக இருக்கிறது. அதை போர்க்கால அடிப்படையில் சீர் செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி கமிஷனர் அலுவலக அறை முன்பு நின்று கோஷம் எழுப்பினர். அதனால் அங்கு  சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. போலீஸார் இங்கு கோஷம் எழுப்ப அனுமதி இல்லை என்று கூறியவுடன் அவர்கள் கோஷம் போடுவதை  நிறுத்தி விட்டு தங்களது கோரிக்கைகளை கமிஷனர் அலுவலகத்தில்  மனுவாக கொடுத்தனர். 

ஈரோடு மாநகராட்சி சாலைகள் அனைத்தையும் பாதாள சாக்கடை, மண்ணுக்குள் மின் கேபிள், ஊராட்சி கோட்டை குடிநீர் திட்ட பைப் லைன் என எல்லா சாலைகளையும் வெட்டி கூறுபோட்டு விட்டார்கள் சந்து, பொந்து எல்லா இடங்களிலும் மரண குழிகள் அதில் பயணிக்கும் மக்கள் உடல் காயமில்லாமல் திரும்பி வருவது வீரதீர செயல்தான்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே கட்சி நிர்வாகி வீட்டின் கழிவறையில் ரூ.1லட்சம் பறிமுதல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
IJK party executive house toilet Rs 1 lakh seized

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் ஊராட்சியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகி வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் ரூபாய் ஒரு லட்சம் பணம் மற்றும் துண்டறிக்கைகளை  தேர்தல் பறக்கும் படையினர் நேற்று (17.4.2024) இரவு பறிமுதல் செய்தனர்.

பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி வேட்பாளராக இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றார்.இந்நிலையில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் மாதா கோயில் தெருவைச் சேர்ந்த சூசையப்பர் மகன் வினோத் சந்திரன்  ஐஜேகே கட்சியின் கிளைச் செயலாளராக உள்ளார். இவர் அந்தப் பகுதி வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக லால்குடி வருவாய் வட்டாட்சியர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து லால்குடி வட்டாட்சியர் உத்தரவின் பெயரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் செழியன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அதில், வினோத் சந்திரன் வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம், பணம் விநியோகிக்கக்கூடிய பெயர் பட்டியல் மற்றும் டாக்டர் பாரிவேந்தரின் பாராளுமன்றத் தொகுதி பணிகள் என்ற தலைப்பில் அச்சிடப்பட்ட 500 புத்தகங்கள் 100 துண்டு பிரசுரங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்தும் வினோத் சந்திரனிடம் நடத்திய விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தன்னுடையது இல்லை என கூறியதை அடுத்து பறிமுதல் செய்த பணத்தினை பறக்கும் படை அலுவலர் செழியன் லால்குடி வருவாய் வட்டாட்சியர் முருகனிடம் ஒப்படைத்தார். அவர் பணத்தை லால்குடி கருவூலத்தில் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தார்.

Next Story

திருமணமான பெண்ணுக்கு கத்தி குத்து; முன்னாள் காதலன் வெறிச்செயல்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 married woman has been stabbed by her ex-boyfriend

திருப்பத்தூர் எல்ஐசி பில்டிங் பின்புறம் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த குமார் மகள் இந்துமதி. அதே பகுதியைச் சேர்ந்த அனுமுத்து மகன் ஆட்டோ ஓட்டுநரான அஜித்குமார்.

இந்துமதி - அஜித்குமார் இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. எனவே இந்த காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வர ‌ இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் இந்துமதியை திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிக்கு தற்போது ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்துமதிக்கும் கணவர் கார்த்திக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாணியம்பாடியை விட்டு திருப்பத்தூர்  ராஜீவ்காந்தி நகர் பகுதியில் உள்ள அம்மா வீட்டிற்கு வந்துள்ளார் இந்துமதி. இந்த நிலையில் மீண்டும் இந்துமதி மற்றும் அஜித்குமார் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின்னர் இருவரும் நன்றாக பேசி வந்த நிலையில் திடீரென இந்துமதி  அஜித் குமாரிடம் பேச மறுத்து விலகியதாக தெரிகிறது.

 married woman has been stabbed by her ex-boyfriend

அதனைத் தொடர்ந்து விரக்தியில் இருந்த அஜித்குமார்  திருப்பத்தூர்   பழைய பேருந்து நிலையம் அருகே அஜித்குமார் ஆட்டோ ஓட்டிச் சென்றபோது இந்துமதி அவ்வழியாக  சென்றுள்ளார். அப்போது அஜித்குமார் இந்துமதியை பார்த்து பேசி உள்ளார். அங்கே இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அஜித்குமார் ஆத்திரமடைந்து திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இந்துமதியின் முகம் மற்றும்  உடம்பின் பல்வேறு பகுதிகளில் குத்தியும்,வெட்டியும் விட்டு  தப்பியுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் இந்துமதியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். இந்துமதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அஜித்குமார் திருப்பத்தூர் நகரகாவல் நிலையத்தில் தானாக  சரணடைந்தார்.