Skip to main content

கோவில் கும்பாபிஷேகத்திற்குத் தடை... சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!!

Published on 21/01/2022 | Edited on 21/01/2022

 

People involved in road blockade against goverment order

 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சிதம்பரம் சாலையில் உள்ளது கடாரம் கொண்டான் என்ற கிராமம். வரலாற்று சிறப்புமிக்க இந்த ஊரில் பல்வேறு தரப்பு மக்கள் வாழ்கிறார்கள். ஊர் மக்கள் மற்றும் இங்குள்ள ஆண்டவர் சாமியை குலதெய்வமாக எல்லை தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். கடந்த 3 ஆண்டுகளாக சிறுக சிறுக பக்தர்களின் உதவியுடன் பணம் சேர்த்து அந்த கோயில் சாமி சிலைகளையும், கோயிலையும் புனரமைப்பு செய்தனர். இறுதியில் நேற்று அந்த கோயிலில் முறைப்படி கும்பாபிஷேக நடத்துவதற்கு முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த நிலையில் கரோனா பரவலை காரணம் காட்டி காவல்துறை  கும்பாபிஷேகம் நடத்தக் கூடாது என்று தடை விதித்தது.

 

ஆண்டவர் கோயிலை வழிபடும் மக்கள் தங்கள் கஷ்டப்பட்டு புனரமைப்பு செய்து கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் நேரத்தில் தடை உத்தரவு போடப்பட்டது கண்டு ஆத்திரம் அடைந்தனர். இதையடுத்து அந்த கிராம மக்கள் மற்றும் ஆண்டவர் சாமியின் குல தெய்வமாக வழிபடும் பக்தர்கள் திரளாக கூடி திருச்சி -சிதம்பரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோயில் கும்பாபிஷேக நடத்துவதற்கு அனுமதி தரவேண்டும் இல்லையேல் சாலை மறியலை கைவிட மாட்டோம் என்று பிடிவாதமாக இருந்தனர். இந்த நிலையில் இந்தத் தகவல் ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கலை கதிரவன், இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

குறிப்பிட்ட தேதியில் ஏற்கனவே முடிவு செய்தபடி ஆண்டவர் சாமிக்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்கு அனுமதி அளித்தால் தான் சாலை மறியலை கைவிடுவோம் என்று அதிகாரிகளிடம் பிடிவாதமாக கூறினர். அதன் பிறகு போலீசார் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் ஆனந்தன் மற்றும் அதிகாரிகள் பக்தர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையின் இறுதியில் இதுகுறித்து உடையார்பாளையம் கோட்டாட்சியரிடம் மனு அளித்து அவரது ஆலோசனையின்படி நடப்பதாக அதிகாரிகள் பொதுமக்கள் தரப்பில் பேசி முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

 

கோட்டாட்சியர் அனுமதியுடன் ஆண்டவர் சாமிக்கு எப்படியும் கும்பாபிஷேகம் நடத்தி முடிப்பது என்பதில் கிராம மக்கள் உறுதியுடன் உள்ளனர். மத்திய அரசு உத்தரப் பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. அதேபோல் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் மக்கள் கும்பல் கூடுவது குறையவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் கோவில் கும்பாபிஷேகங்கள், திருவிழாக்கள், பள்ளிகல்விக்கூடங்களை மட்டும் திட்டமிட்டு மூடுவது ஏன்? தமிழக மக்களின் கலாச்சாரம் பண்பாடு போன்ற அடிப்படை விஷயங்களில் தடைபோட்டு தடுக்கப்படுவதால் அவை அழியும் நிலையை அரசுகளே ஏற்படுத்தலாமா?என்று வேதனை தெரிவிக்கிறார்கள் பொதுமக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

எங்களுக்கு மாநகராட்சி வேண்டாம்! 100 நாள் வேலை தான் வேண்டும்! - போராட்டத்தில் மக்கள்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Pudukottai people are protesting that we don't want a corporation

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள 11 ஊராட்சிகளை இணைத்து புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பு வருவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே ‘வேண்டாம் மாநகராட்சி’ என்ற பெயரில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களை இணைத்து போராட்டக்குழு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பையடுத்து போராட்டம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம் கிராம மக்கள் ஒன்று கூடி திங்கள் கிழமை, வேண்டாம் மாநகராட்சி என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சியில் இருக்கும் எங்களுக்கு 100 நாள்  வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை கிடைக்கிறது. இதுமட்டுமின்றி பல்வேறு சலுகைகளும் கிடைக்கிறது. மேலும் சொத்துவரி, குடிநீர் வரி உள்பட பல்வேறு வரிகள் உயர்த்திக் கட்ட வேண்டும். குப்பை வரி வாங்குவாங்க ஆனா குப்பை அள்ளமாட்டாங்க. வேலையே இல்லாம இந்த வரியெல்லாம் எப்படி கட்ட முடியும். அதனால் வேண்டாம் மாநகராட்சி என்று கோரிக்கை முழக்கமிட்டனர்.

அதே நேரத்தில் மாநகராட்சியில் 100 நாள் வேலை கிடைக்காது. ஆனால் எங்களை சம்மதிக்க வைக்க வேலை தருவதாக சொல்வாங்க. அப்புறம் தரமாட்டாங்க என்கின்றனர் போராட்டத்தில் இருந்த பெண்கள். இது முதற்கட்ட போராட்டம் தான். தேர்தலுக்கு முன்பே இன்னும் பலகட்ட போராட்டங்களை 11 ஊராட்சி மக்களும் ஒன்று சேர்ந்து எடுப்பார்கள். இல்லை என்றால் தேர்தலை புறக்கணித்து ஆளும் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர் என்கின்றனர்.