Skip to main content

சூறைக்காற்று வீசியதில் துண்டிக்கப்பட்ட மின் கம்பம்; மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள்

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
people are suffering without electricity

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அருகே அரண்மனை புதூர் கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். 

இந்த நிலையில் கடந்த வாரம் சூறைக்காற்றுடன் சாரல் மழை பெய்து வந்த நிலையில் அரண்மனை புதூர் கிராமத்தில் மின்சாரம் வழங்கி வரும் மின்கம்பங்கள் பாதியிலேயே முறிந்து விழுந்து விட்டதால் ஒரு வாரத்திற்கு மேலாக மின்சாரம் இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். எனவே மின் கம்பத்தை சரி செய்து உடனடியாக மின்சாரம் வழங்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்