Skip to main content

பெண்ணாடம் பகுதி இயற்கை விவசாயிகளுடன் ஜெர்மன் நாட்டு விவசாய நிபுணர் சந்திப்பு!

Published on 11/03/2019 | Edited on 11/03/2019

 

 கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகிலுள்ள  முருகன்குடி, தாழநல்லூர் மற்றும்  விருத்தாசலம் அருகேயுள்ள  கோட்டேரி ஆகிய கிராமங்களில் சில விவசாயிகள் நெல்,  நிலக்கடலை,  உளுந்து போன்ற பயிர்களை இயற்கையான முறையில் ரசாயன உரங்கள் பயன்படுத்தாமல் சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்த   கிராம பகுதிகளில்  இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளின்  நிலங்களை ஜெர்மன் நாட்டில்    விவசாயத்துறையில் டாக்டர் பட்டம் பெற்ற  ஜுடித் போப் (Judith Bopp) என்ற பெண்மணி பார்வையிட்டு, இயற்கை வேளாண் சாகுபடி முறைகளை கேட்டறிந்தார். 

 

p


மேலும்  முருகன்குடியில் புதிதாக தொடங்கப்பட்ட  பனை மரபு அங்காடியினையும் பார்வையிட்டார். அவர்களுக்கு இயற்கை வேளாண் அறிஞர் கோ. நம்மாழ்வார் அவர்களின் படம் அன்பளிப்பாக  செந்தமிழ் மரபுவழி வேளாண் நடுவத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கண்ணதாசன் வழங்கினார். இவர்களுடன் இயற்கை விவசாயிகள் க.முருகன், அரா. கனகசபை, இராமச்சந்திரன், கவியரசன், பரத், மு.திவ்யா, ம.கனிமொழி, தமிழ்மொழி ஆகியோர் ஆகியோர் பங்கேற்றனர்.

 

a

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் வரை சென்ற வீடியோ; தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநரின் லைசென்ஸ் ரத்து

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

foul language to passengers; Cancellation of license of private bus driver operator

 

கடலூரில் பயணிகளிடம் தகாதமுறையில் பேசிய தனியார் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. இதில் தனியார் பேருந்துகளும் அடக்கம். இந்நிலையில், நேற்று மாலை பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஒன்று விருத்தாசலம் செல்ல ஆயத்தமாக நின்று கொண்டிருக்கிறது. அப்பொழுது பயணி ஒருவர் விருத்தாசலம் செல்லும் வழியில் உள்ள குறிஞ்சிப்பாடி நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளவா என கேட்டுள்ளார். ஆனால் விருத்தாசலம் செல்பவர்கள் மட்டுமே ஏற வேண்டும் நடுவில் நிற்காது என தெரிவித்துள்ளார் அந்த பேருந்தின் நடத்துநர். அது மட்டுமல்லாது விருத்தாசலம் இல்லாவிட்டால் பேருந்தில் ஏறக்கூடாது என தகாத முறையில் பேசினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரது கண்டனத்தை பெற்றிருந்தது.

 

அங்கிருந்த பொதுமக்களும் நடத்துநரிடமும் ஓட்டுநரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கவனத்திற்கு சென்ற நிலையில், அந்த தனியார் பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் லைசென்ஸை ரத்து செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

 

 

Next Story

சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் விருதாச்சலத்தில் கைது

Published on 08/10/2023 | Edited on 08/10/2023

 

 Famous Chennai-based rowdy arrested at gunpoint in Virudachalam

 

சென்னை முகப்பேர், நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி டேனியல் ராஜா. சமீபத்தில் காஞ்சிபுரத்தில் என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி விஷ்வாவின் நெருங்கிய நண்பராக டேனியல் ராஜா இருந்துள்ளார். விஷ்வாவுடன் சேர்ந்து பல்வேறு கொலை வழக்குகள் மற்றும் கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரான டேனியல் ராஜா போலீசாரால் தேடப்பட்டு வந்தார்.

 

தொடர்ந்து குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனைத்தொடர்ந்து நீதிமன்றம் பிடிவாரண்ட் அளித்து உத்தரவிட்டது.  தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் டேனியல் ராஜாவை தேடி வந்தனர். திருமங்கலம் சரக உதவியாளர் வரதராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையால் தேடப்பட்டு வந்த நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் பதுங்கி இருந்த டேனியல் ராஜாவை துப்பாக்கி முனையில் வைத்து கைது செய்திருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் நொளம்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.