Skip to main content

சட்டவிரோத வனவிலங்கு வேட்டை; கையும் களவுமாக பிடித்த அதிகாரி

Published on 18/11/2022 | Edited on 18/11/2022

 

Penalty for illegal wildlife poaching

 

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகில் உள்ள பாக்கம் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான காடுகள் ஏராளம் உள்ளன. இந்தக் காட்டுப் பகுதிகளை வன இலாகா அதிகாரிகள், ஊழியர்கள் அவ்வப்போது வனத்தை பாதுகாக்கும் பொருட்டு ஆய்வு செய்ய வருவது வழக்கம். அதன்படி விழுப்புரம் சரக வன அலுவலர் பாபு வழிகாட்டுதல் படி, கண்டாச்சிபுரம் வனவர் விவேகரன் இவருடன் பாக்கம் வனக்காப்பாளர் கார்த்திகேயன், வன அலுவலர் ஆறுமுகம், அடுக்கம் வன காவலர் அருண்குமார் ஆகியோர் இணைந்து வனப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

அப்போது மழவந்தாங்கல் வனப் பகுதியில் சட்டவிரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாக ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் இவர்கள் அனைவரும் வனப் பகுதியில் வேட்டையாடிகளை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது மழவந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் மகன் ஐயப்பன்(36) என்பவர் காட்டுப்பன்றி ஒன்றினை வேட்டையாடி அதன் இறைச்சியை கூறு போட்டு விற்பனை செய்து வந்ததை கையும் களவுமாக பிடித்தனர்.

 

இதைத் தொடர்ந்து அவரிடம் வன அலுவலகம் நடத்திய விசாரணையின் போது, காப்புக்காடு பகுதிக்கு வந்து சட்டவிரோதமாக காட்டுப்பன்றிகளை அவ்வப்போது வேட்டையாடி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த காட்டுப்பன்றி இறைச்சிகளை பறிமுதல் செய்ததோடு, அவருக்கு ரூபாய் 25,000 அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து அனுப்பி உள்ளனர். விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைப் பகுதியில் பறந்து விரிந்த காடுகள் உள்ளன. இந்தக் காடுகளில் அவ்வப்போது இரவு நேரங்களில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் நாட்டுத் துப்பாக்கியுடன் வந்து வனவிலங்குகளை வேட்டையாடி செல்கின்றனர். சிலர் வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு வழக்கு, சிறை, அபராதம் என விதிக்கப்பட்டுள்ளனர். இருந்தும் வனவிலங்குகளை வேட்டையாடுவது தொடர்ந்து கொண்டு தான் உள்ளது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.