Skip to main content

பட்டா பெயர் மாற்ற நூதன முறையில் லஞ்சம்; தப்பி ஓடிய விஏஓ!

Published on 27/03/2023 | Edited on 27/03/2023

 

patta name transfer incident at kallakurichi karadi chittur vao involved 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கரடி சித்தூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40). இவருக்குச் சொந்தமான நிலம் அவரது முன்னோர்கள் பெயரில் கூட்டுப்பட்டாவாக இருந்து வந்துள்ளது. அதை தனது பெயருக்கு தனிப்பட்டவாக மாற்றம் செய்து தரக்கூறி வட்டாட்சியர் அலுவலகம் மூலம் விண்ணப்பம் செய்தார். அவரது மனு சம்பந்தப்பட்ட கரடி சித்தூர் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் பெரியய்யாவுக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் பெரியய்யா பட்டா மாற்றம் செய்து தராமல் காலதாமதம் செய்து வந்துள்ளார்.

 

இது குறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் வெங்கடேசன் நேரில் சென்று பட்டா மாற்றம் செய்வதற்கு பரிந்துரை செய்யுமாறு கேட்டுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் பெரியய்யா, வெங்கடேஷனிடம் பட்டா மாற்றம் செய்து தர பத்தாயிரம் ரூபாய் லஞ்சமாக பணம் கொடுத்தால் தான் பட்டா மாற்றம் செய்து தர முடியும் என்று பேரம் பேசியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன் பட்டா மாற்றம் செய்ய ஏன் லஞ்சம் கொடுக்க வேண்டும் இதற்கு ஒரு முடிவு கட்ட எண்ணிய வெங்கடேசன் உடனடியாக கள்ளக்குறிச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் கடந்த 24ஆம் தேதி புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை  போலீசாரின் அறிவுரையின்படி ரசாயனம் தடவிய பத்தாயிரம் ரூபாய் லஞ்ச பணத்தை கொடுத்து கிராம நிர்வாக அலுவலர் பெரியய்யாவிடம் கொடுக்குமாறு ஆலோசனை கூறியுள்ளனர்.

 

அதன்படி வெங்கடேசன் லஞ்சப் பணத்துடன் கரடி சித்தூர் சென்றுள்ளார் அங்கு கிராம நிர்வாக அலுவலர் இல்லை அவரை வெங்கடேசன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் வெங்கடேசனை கச்சராபாளையம் வருமாறு அழைத்துள்ளார். அங்கு சென்ற வெங்கடேசன் கிராம நிர்வாக அலுவலர் கூறிய இடத்தில் அவருக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த  கரடி சித்தூரை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் கிராம நிர்வாக அலுவலர் சற்று தூரத்தில் நிற்பதை சுட்டி காட்டி அவர் லஞ்ச பணத்தை வாங்கி வருமாறு என்னிடம் கூறியுள்ளார் என்று பணத்தைக் கேட்க அதன்படி வெங்கடேசன் பொன்னுசாமி இடம் கிராம நிர்வாக அலுவலருக்கு சேர வேண்டிய பத்தாயிரம் லஞ்ச பணத்தை கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்யராஜ் தலைமையிலான போலீசார் பொன்னுசாமியை கையும் களவுமாக பிடித்தனர்.

 

போலீசார் பொன்னுசாமியை மடக்கிப் பிடித்த காட்சியை சற்று தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த கிராம நிர்வாக அலுவலர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட பொன்னுசாமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கிராம நிர்வாக அலுவலர் பெரியய்யாவுக்கு இடைத்தரகராக இருந்து பொதுமக்களிடம் லஞ்சப் பணம் வசூல் செய்து கொடுக்கும் இடைத்தரகராக செயல்பட்டு வந்துள்ளார் என்பது தெரிய வந்தது. இதை பொன்னுசாமி கிராம நிர்வாக அலுவலர் கூறி அவருக்காக பணத்தை பெற்றதாக கூறி வாக்குமூலம் அளித்துள்ளார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் தற்போது தலைமறைவாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பெரியய்யாவை கைது செய்ய தீவிரமாக தேடி வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலர் இடைத்தரகர் மூலம் லஞ்சம் பெற்ற சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இளைஞனால் பெரியம்மாவிற்கு நேர்ந்த கொடூரம்; திருவள்ளூரில் பரபரப்பு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 young man who stabbed Periyamma to passed away

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ளது கனகவல்லிபுரம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரின் மனைவி சரஸ்வதி. இவருக்கு 55 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக பொன்னேரியில் உள்ள வீட்டில் குமார் மற்றும் சரஸ்வதி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். அவ்வப்போது மகள்கள் பொன்னேரிக்கு சென்று பெற்றோர்களை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குமார் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்க, பொன்னேரி கடைத்தெருவிற்கு சென்றுள்ளார். அவரின் மனைவி சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடைக்கு சென்றவர், பொருள்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தபடி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான குமார், சற்று வேகமாக வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்துள்ளார். 

அப்போது அவரது மனைவி சரஸ்வதி, வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்ததும் குமார் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார். குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். அப்போது குமாரின் வீட்டுக்குள் சென்று பார்க்கும் போது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அவர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்த சிலர் சரஸ்வதியைத் தூக்கி முதலுதவி செய்ய முற்பட்டுள்ளனர். அப்போதுதான் தெரிந்துள்ளது சரஸ்வதி இறந்துவிட்டார் என்று. இதனைக் கேட்டதும் குமார் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த சிலர் இது குறித்து பொன்னேரி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சரஸ்வதியின் உடல் மற்றும் அவரின் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். அப்போது சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி மாயமாகி இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர், அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து இந்தக் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி மாயமாகி இருந்த காரணத்தால் இந்தக் கொலை, சங்கிலிக்காக நடந்திருக்கலாம்.... என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். இதற்காக, குமார் உட்பட அவரின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து குமாரிடம் விசாரணை செய்த போது, தனக்கு இந்தப் பகுதியில் சொத்து தொடர்பாகவோ அல்லது வேறு விஷயங்கள் தொடர்பாக எதிரிகள் யாருமே இல்லை எனக் கூறியிருக்கிறார். இதனையடுத்து, குமாரின் வீட்டிற்கு யாரேனும் வந்து சென்றார்களா?... என அந்தப் பகுதியில் உள்ள சிலரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சம்பவத்தன்று சரஸ்வதியின் சகோதரி மகனான அசோக்குமார் வந்து சென்றதாக சிலர் கூறியுள்ளனர். உடனே அசோக்குமாரை பிடித்து விசாரித்துள்ளனர். முதலில் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய அசோக்குமார், பின்னர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியிருக்கிறார். இதனால், மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையில், அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டதால் தனது பெரியம்மாவான சரஸ்வதிடம் சென்று கேட்டதாகவும், அவர் அப்போது பணம் கொடுக்க மறுத்த காரணத்தால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. வாக்கு வாதத்தின் போது திடீரென ஆத்திரமடைந்த அசோக்குமார், வீட்டில் இருந்த கத்தியைக் கொண்டு சரஸ்வதியை சரமாரியாக குத்தியதும், பின்னர் அவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் பொன்னேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.