Skip to main content

படித்துறை பாண்டியவே ஓவர் டேக் செய்யும் தியேட்டர்கள்!

Published on 03/03/2020 | Edited on 03/03/2020

சினிமா தியேட்டர்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு இவ்வளவு தான் கட்டணம் என தமிழ்நாடு அரசு கட்டணம் நிர்ணயித்துள்ளது. குறிப்பிட்டத் தொகையை விட பல மடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், "படித்துறை பாண்டியவே ஓவர் டேக் பண்றீங்களேப்பா.!" என வாகன கட்டணத்திற்கு எதிராக சமூக வலைத்தளத்தில் மீம்ஸை பரப்பி வருகின்றனர்.

PARKING TICKET COST HIGH CINIMAS THEATRE NOT FOLLOW GOVERNMENT ORDER

"அப்பு.! இங்கெல்லாம் வண்டிய நிப்பாட்டக்கூடாது. நிறுத்துனத்துக்கு பணத்தைக்கொடு.!' என இல்லாத குத்தகைக்கு கருப்பச்சாமி குத்தகைக்காரர் திரைப்படத்தில் நாயகன் கரணிடம் வசூல் வேட்டையை தொடங்குவார் படித்துறை பாண்டியான வடிவேலு. அவரோ, " தான் தான் குத்தைக்காரர்" எடுத்தியம்ப, "அப்பு.! நீ இங்க மட்டும் தான் எடுத்திருக்க.. நான் மதுரையையே ஏலம் எடுத்திருக்கேன்." என வடிவேலு சலம்பல் செய்தது இன்று வரை ரசிக்கும்படியான நகைச்சுவைக் காட்சிகளில் ஒன்று.

PARKING TICKET COST HIGH CINIMAS THEATRE NOT FOLLOW GOVERNMENT ORDER

இது இப்படியிருக்க, "தமிழ்நாடு சினிமா (ஒழுங்குமுறை) விதிகள் 195-ன் 91பி பிரிவின் கீழ், அரசாணை எண் 891/30-11-2017ன் படி, "தியேட்டர்களில் நிறுத்தும் வாகனத்திற்கு கட்டணம் ரூ.10 எனவும், மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கான கட்டணம் ரூ.20 என கட்டணத்தை நிர்ணயித்த தமிழ்நாடு அரசு, இது மாநகராட்சி, சிறப்பு நிலை நகராட்சிகளுக்குப் பொருந்தும் என்றது. எனினும், இக்கட்டணத்தை தமிழ்நாட்டில் எந்த தியேட்டரும் கடைப்பிடிக்கவில்லை என்பது தான் வேதனைக்குரிய விடயம். 

PARKING TICKET COST HIGH CINIMAS THEATRE NOT FOLLOW GOVERNMENT ORDER

அதைவிடக் கொடுமையானது வாகன நிறுத்துமிட கட்டணமாக பல மடங்கு அதிக ரூபாயைக் பெற்றுக்கொண்டு, "வாகனத்திற்கான பொறுப்பு வாகன உரிமையாளரையே சாரும்." என ரசீதில் அச்சிட்டுக் கொடுக்கிறார்கள். வாகனத்திற்கு கட்டணம் வாங்கிக்கொண்டு வாகனத்திற்கு பொறுப்பு தாங்களே.!" எனக் கூறுவது எவ்வகையில் நியாயம்.? படித்துறை பாண்டியவே ஓவர்டேக் பண்றீங்களேப்பா.!" என்கின்றனர் பொதுமக்கள். இது சமூக வலைத்தளத்தில் வைரலாக நிலையில் அரசு நடவடிக்கை எடுக்குமா.? என்பது தான் தற்பொழுதைய கேள்வி.?

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள்” - விஷால் பகிரங்க குற்றச்சாட்டு 

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
vishal allegation about theatre owners for not allocating theatres for rathnam movie

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ரத்னம் படத்தின் போஸ்டர் மற்றும் பெரிய திரை (எல்இடி) உடன் கூடிய வேன் கடந்த 4ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உலா வரும் என அறிமுகப்படுத்தப்பட்டது. 

பின்பு விஷால் மற்றும் ஹரி இருவரும் சென்னை, திருச்சி உள்ளிட்ட ஊர்களில் கல்லூரியில் புரொமோஷன் நிகழ்ச்சி நடத்தி படத்தை விளம்பரப்படுத்தி வந்தனர். மேலும் புதுச்சேரியில் ஹரி, கடை வீதிகளில் ஒவ்வொரு கடையாக சென்று படத்தை பார்க்கும்படி கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் திருச்சி, தஞ்சாவூர் பகுதி திரையரங்குகளில் ரத்னம் படம் வெளியிடுவதற்கு தடை விதித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விஷால் குற்றச்சாட்டு குறித்து பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில், “சங்கத்தின் தலைவர் மீனாட்சி மற்றும் செயலாளர் சிதம்பரம் என்னுடைய ஃபோனை எடுக்க மறுக்கிறார்கள். என் நண்பர் சீனு சார், ரத்னம் படத்தை வடக்கு மற்றும் தெற்கு பதிகளில் வாங்கியிருக்கிறார். ஒரு திரைப்படம் வெளியாவதே பெரிய விஷயம். இந்த காலகட்டத்தில் இப்படி நீங்க பண்ணும் போது இதற்கு பெயர் கட்டப்பஞ்சாயத்து.   

இதில் முதலமைச்சர் திருச்சி கலெக்டர், எஸ்.பி, காவல் துறையினர் என அனைவருக்கும் நான் சொல்ல விருப்பப்படுவது, அவர்கள் செய்வது கட்டப்பஞ்சாயத்தை தவிர்த்து வேற எதுவும் கிடையாது. விஷாலுக்கே இந்த கதி என்றால் நாளைக்கு ஒரு புதுமுக நடிகருக்கு என்ன நடக்கும். நீங்க ஃபோன் எடுக்காமல் இருப்பது, தியேட்டர் ஒதுக்கப்படாமல் இருப்பது, அது உங்களுடைய அலட்சியம். ஆனால் அந்த அலட்சியத்தைப் பார்த்து நான் சும்மா இருக்க மாட்டேன்” என கூறுகிறார். 

Next Story

தேர்தலை முன்னிட்டு திரையரங்குகளில் காட்சிகள் ரத்து!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
show cancelled details on april 19

18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுப்பட்டு தங்களது வேட்பாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க உள்ளிட்ட சில கட்சிகள் இந்தியா கூட்டணியிலும் பா.ஜ.க, பா.ம.க, த.மா.கா உள்ளிட்ட சில கட்சிகள் என்.டி.ஏ கூட்டணியிலும் அ.தி.மு.க, தே.மு.தி.க தனிக்கூட்டணியிலும் நாம் தமிழர் கட்சி தனித்தும், தேர்தலில் களம் காண்கின்றனர்.  இந்த நிலையில் தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி திரையரங்க உழியர்களுக்கு விடுமுறை அறிவித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தது. தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் ஏப்ரல் 19, வாக்குப் பதிவு நாளன்று திரையரங்குகளில் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதே சமயம் அதே நாளில் மாலை மற்றும் இரவு காட்சிகள் வழக்கம் போல் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர்கள் முழு அளவில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.