Skip to main content

கூடா நட்பு..! கொலையில் அர்ச்சகர் கைது..! கோயில் வளாகத்தில் பிணத்தை புதைத்த கொடூரம்..!

Published on 22/08/2020 | Edited on 22/08/2020

 

Panruti

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ளது வி.ஆண்டி குப்பம். இந்த ஊரைச் சேர்ந்தவர் மஞ்சுளா, வயது 29. இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மஞ்சுளா தனியாக வீடு எடுத்து வசித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் மஞ்சுளாவுக்கும் பண்ருட்டி மளிகை கடையில் வேலை பார்த்து வரும் பணிக்கன் குப்பம் கிராமத்தை சேர்ந்த 34 வயது கண்ணதாசன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது பின்னர் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே வி. ஆண்டி குப்பம் பகுதியில் கணவன் மனைவி போல குடும்பம் நடத்தி வந்தனர்.

 

இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி மளிகை கடைக்கு வேலைக்கு சென்ற கண்ணதாசன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து மஞ்சுளா பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மளிகை கடைக்கு வேலைக்கு சென்ற  அண்ணாதுரையை  பனிரண்டாம் தேதி முதல் காணவில்லை. அவரை கண்டுபிடித்து தருமாறு புகாரில் கூறியிருந்தார். இவரது புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த பண்ருட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

 

Panruti

 

அந்த விசாரணையைத் தொடர்ந்து கண்ணதாசன், மஞ்சுளா ஆகிய இருவரும் பயன்படுத்திவந்த செல்போன் எண்ணை போலீசார் கண்டறிந்து அதை வைத்து புலனாய்வு செய்தனர். அப்போது மஞ்சுளா தனது செல்போன் மூலம் பலரிடம் பேசி வந்தது தெரியவந்தது. மேலும் வேணுகோபால சாமி கோயில் அர்ச்சகர் கோபிநாத்திடம் மஞ்சுளா அடிக்கடி செல்போனில் பேசியதை கண்டுபிடித்த போலீசார் சந்தேகம் அடைந்தனர்.

 

போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள். இந்த விசாரணையின் மூலம் பல்வேறு தகவல்கள் வெளிவந்து போலீசாரையே திடுக்கிட வைத்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்ததில், மஞ்சுளா அதே ஊரில் உள்ள வேணுகோபால சுவாமி கோவில் அர்ச்சகராக பணி செய்து வரும் அர்ச்சகர் (58 வயது) கோபிநாத் என்பவர் வீட்டில் வீட்டு வேலை பார்த்து வந்துள்ளார். அர்ச்சகர் வீட்டில் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபிறகும் அர்ச்சகர் கோபிநாத்துடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதை மஞ்சுளாவின் கள்ளக்காதலர் கண்ணதாசன் கண்டித்துள்ளார்.

 

இருப்பினும் மஞ்சுளா. அர்ச்சகர் கோபிநாத்துடன் செல்போனில் பேசுவதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார். இதனால் மஞ்சுளாவுக்கு அர்ச்சகர் கோபிநாத்துக்கு இருவருக்கும் இடையில் தவறான தொடர்பு இருக்கலாம் என்று கண்ணதாசனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கண்ணதாசன் சமீபத்தில் ஒரு நாள் அர்ச்சகர் கோபிநாத் வீட்டுக்கேசென்று அவரையும் அவரது குடும்பத்தினரையும் திட்டியுள்ளார். என்னுடன் மனைவி போல இருக்கும் மஞ்சுளாவை தெய்வத்திற்கு பூஜை செய்யும் அர்ச்சகர் கள்ளக்காதலியாக வைத்துள்ளது முறையா? இது அந்த தெய்வத்தை அடுக்குமா? என்று சண்டை போட்டு வந்துள்ளார்.

Panruti

 

தனக்கும் மஞ்சுளாவுக்கும் உள்ள தொடர்பை பலர் பார்க்கும்படி பகிரங்கமாகப் பேசி அம்பலப்படுத்தி அவமானப்படுத்தி தனது இமேஜுக்கு  களங்கம் ஏற்படுத்தி விட்டதாக கண்ணதாசன் மீது கடும்கோபம் ஏற்பட்டுள்ளது அர்ச்சகர் கோபிநாத்துக்கு, இதேபோன்று மஞ்சுளாவும் கோபமடைந்துள்ளார். இதையடுத்து அர்ச்சகரும் மஞ்சுளாவும், கண்ணதாசனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். இதற்கு ஒரு முடிவு கட்ட முடிவெடுத்த அர்ச்சகர் கோபிநாத், கோபமாக இருந்த கண்ணதாசனை கடந்த 17ஆம் தேதி சமாதானப்படுத்துவதற்காக வேணுகோபாலசாமி கோவிலுக்கு பவ்வியமாக பேசி வர வழைத்துள்ளார்.

 

Panruti

 

அப்போது அங்கிருந்த மஞ்சுளா மற்றும் அவருடன் இருந்தவர்கள் சிலர் சேர்ந்து இரும்பு கம்பியால் கண்ணதாசனை திட்டமிட்டு ஆயுதங்களுடன் சரமாரியாக தாக்கியுள்ளனர். அடி பொறுக்க முடியாமல் கண்ணதாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரை கொலை செய்த பின்னர் கண்ணதாசன் உடலை வெளியில் எங்காவது கொண்டு மறைக்க முயன்றால் அது வெளியே தெரிந்துவிடும் என்று முடிவுசெய்த அர்ச்சகர் கோபிநாத் மற்றும் மஞ்சுளா, வேணுகோபால சுவாமி கோவிலில் உள்ள பூஜை பொருட்கள் வைக்கப்படும் அறையில் ஒரு பெரிய பள்ளம் தோண்ட முடிவு செய்தனர். கண்ணதாசனின் உடலை அதற்குள் போட்டு யாருக்கும் சந்தேகம் வராத அளவில் புதைத்து அதன்மீது டைல்ஸ் படித்து தரையை பளபளப்பாக்கி உள்ளனர்.

 

Panruti

 

இவையெல்லாம் நடந்து முடிந்த பிறகு மஞ்சுளா போலீசில் கண்ணதாசனை காணவில்லை என்று புகார் செய்து நாடகமாடி உள்ளார். மஞ்சுளா செல்போனை ஆய்வு செய்த பின்னர் நடந்த விசாரணையில்தான் இதனை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

 

Panruti

 

இதற்கிடையே நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணியளவில் வேணுகோபால சுவாமி கோவில் பூஜை பொருட்கள் வைக்கப்படும் அறையில் புதைக்கப்பட்டிருந்த கண்ணதாசன் உடலை தாசில்தார் உதயகுமார் முன்னிலையில் தோண்டி எடுத்துள்ளனர். பின்னர் கண்ணதாசன் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

கண்ணதாசன் கொலை செய்வதற்கு முன்னதாகவே கோவிலில் உள்ள உள்ள பூஜை பொருட்களை வைக்கும் அறையில் ஒரு ஆள் படுக்கக்கூடிய அளவிற்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது அந்த பள்ளம் தோண்டுவதற்கு வந்த தொழிலாளர்கள் சிலர், அர்ச்சகர் கோபிநாத்திடம் ஏன் கோவிலுக்குள் பள்ளம் வெட்டுகிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு அர்ச்சகர் கோபிநாத் இந்த பள்ளத்தில் விக்கிரகம் வைத்து மூடிவிட்டால் பண்ருட்டி பகுதியில் கரோனா தொற்று பரவாது படிப்படியாக கரோனா குறையும், அதற்காகத்தான் தொழிலாளர்களை வைத்து பள்ளம் தோண்டுவதாக பொதுமக்களிடம் கூறியுள்ளார்.

 

அர்ச்சகர் கோபிநாத் திட்டமிட்டபடி கோவிலுக்குள் தோண்டப்பட்ட பள்ளத்தில் யாருக்கும் தெரியாமல் இரவு நேரத்தில் கண்ணதாசன் உடலை அதற்குள் வைத்து அந்த பள்ளம் வெளியே தெரியாத அளவிற்கு டைல்ஸ் போட்டு மூடி பளபளப்பாக மாற்றியுள்ளனர். இவ்வளவு கனக் கச்சிதமாக கண்ணதாசனை கொலை செய்து அவரை தான் அர்ச்சனை செய்யும் கோயில் வளாகத்திலுள்ள அறையிலேயே பள்ளம் தோண்டி புதைத்துள்ள அர்ச்சகரின் கோபிநாத்தின் செயலைப் பார்த்து பொதுமக்கள் விக்கித்துப் போய் உள்ளனர். அர்ச்சகர் கள்ளக்காதலில் ஈடுபட்டு, கொலை செய்யும் அளவிற்கு துணிந்து செயல்பட்டுள்ள சம்பவம் கடலூர் மாவட்டம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் ஆவணங்கள் பறிமுதல்’ - லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Former ADMK MLA Seizure of documents at home  Anti Corruption Bureau 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று (28.02.2024) காலை 10 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2011 - 2016 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் நகராட்சி தலைவராக சத்யாவின் கணவர் பன்னீர் செல்வம் இருந்தபோது, பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்தை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக டெண்டர் விடுவதில் ரூ. 20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். 

பன்னீர்செல்வம் மற்றும் அப்போதைய நகராட்சி கமிஷனர் பெருமாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், தற்போது இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி பண்ருட்டி மற்றும் சென்னை உள்ளிட்ட 5 இடங்களில் அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது. லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யாவின் கணவரும் முன்னாள் நகர்மன்றத் தலைவர் பன்னீர்செல்வத்தின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் கடந்த 10 மணி நேரமாக நடந்து வரும் சோதனையில் குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய 47 ஆவணங்கள், விவசாய நிலம் மற்றும் வீட்டு மனை சொத்து ஆவணங்கள் என ரூ. 15 கோடி மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “கடலூர் மாவட்டம், பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் எண்ணத்தோடு லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவிவிட்டு சோதனை மேற்கொண்டிருக்கும் தி.மு.க. அரசின் இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரம்மாண்ட பேரணி-1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
Over 1000 people participate in a grand rally to condole the demise of Vijayakanth

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு இரங்கல் செலுத்தும் வகையில் அனைத்து கட்சி சார்பில் பேரணி மற்றும் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு தேமுதிக வடக்கு மாவட்ட கழக செயலாளரும், பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏவுமான சிவக்கொழுந்து தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் ராஜாராம், தெற்கு மாவட்டச் செயலாளர் உமாநாத், மாவட்ட அவைத் தலைவர் பாலு உள்ளிட்ட தேமுதிகவினர். அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், திமுக பண்ருட்டி நகர் மன்ற தலைவர் ராஜேந்திரன், திமுக மாவட்ட துணை செயலாளர் தணிகை தம்பி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் உத்திராபதி, மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுப்பிரமணியன், அதிமுக மாவட்டச் செயலாளர் சுந்தரமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகி சேகர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

NN

இதில் கலந்து கொண்டவர்கள் விஜயகாந்த்  வாழும்போது மக்கள் மத்தியில் எவ்வாறு நடந்து கொண்டார். பொதுமக்களின் பல்வேறு குறைபாடு குறித்து அவர் செய்த உதவிகள், திரைப்படத்துறை மற்றும் அரசியல் வாழ்க்கையில் அவர் எவ்வாறு நாணயமாக நடந்து கொண்டார் என்பது குறித்து பேசினார்கள். இதில் அவர் அன்னதானத்தை முழுமூச்சாக செய்தது அனைத்து மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர் இறந்தும் அவரது புகழ் மறையாமல் இருப்பதற்கு வாழும் காலத்தில் நடந்து கொண்டவிதம் என்று குறிப்பிட்டனர்.

முன்னதாக பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலையில் இருந்து 1000-த்திற்கும் மேற்பட்டோர் பேரணியாக இரங்கல் கூட்டம் நடைபெறும் திருமண மண்டபத்திற்கு சென்றனர். இது பண்ருட்டி பகுதியில் உள்ள வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.