Skip to main content

ஊராட்சி மன்ற துணை தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம்...

Published on 05/10/2020 | Edited on 05/10/2020

 

Panchayat Council Vice Presidents Federation Meeting in cuddalore

 

கடலூர் மாவட்டத்தில் உள்ளது மங்களூர் ஊராட்சி ஒன்றியம். இந்த ஒன்றியத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் துணை தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து ஊராட்சி துணை தலைவர்கள் கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தி உள்ளனர். இந்த கூட்டமைப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டம் மங்களூரில் நடைபெற்றது. 

 

இதில் கூட்டமைப்பின் தலைவர் ரேகா சந்திரசேகர், துணை தலைவர் ரியாஸ் பானு, உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஊராட்சிகளில் நடைபெறும் அரசு திட்டப்பணிகளை துணை தலைவர் வார்டு உறுப்பினர்கள் ஆகியோரிடம் கலந்து பேசி திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதேபோன்று ஊராட்சிகளில் நடைபெறும் செலவினங்கள் குறித்து வெளிப்படையான கணக்கு வழக்குகள் இருக்க வேண்டும். 

 

கிராமங்களில் வறுமையில் வாடும் ஏழை மக்களுக்கு தமிழக அரசின் மூலம் வழங்கப்படும் ஆடுகளை உரிய ஏழை  பயனாளிகளுக்கு வழங்க வேண்டும். அதேபோன்று அரசு அறிவிக்கும் கிராமசபை கூட்டத்தின்போது அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு கிராமங்களின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர். 

 

இந்த கூட்டத்தின் முடிவில் 100 ஏழை குடும்பத்தினருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களுக்கும் உட்பட்ட கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் ஒன்றிணைந்து ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு என்று உருவாக்கியுள்ளனர். பல ஒன்றியங்களில் இதில் போட்டி அமைப்புகள் கூட உருவாகி செயல்படுகின்றன. ஆனால், துணை தலைவர்கள் கூட்டமைப்பு என்பது மங்களூர் ஊராட்சி ஒன்றியத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வேறு பல ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படுகின்றதா என்பது தெரியவில்லை, இருந்தும் இதுபோன்ற கூட்டமைப்புகள் இருப்பது வரவேற்கத்தக்கது என்கிறார்கள் அவர்களை தேர்ந்தெடுத்த வாக்காளர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏறத்தாழ 5 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு; அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் திருப்பம்

Published on 28/04/2023 | Edited on 28/04/2023

 

Judgment after approximately 5 years; A twist in the case of AIADMK leader Panchanathan

 

கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர் மற்றும் அதிமுக நிர்வாகியான பஞ்சநாதன் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கடலூரில் தேவனாம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கும், சோனாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாம். சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக இந்த தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதி இருதரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சோனாங்குப்பத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பஞ்சநாதன் கொலை செய்யப்பட்டார்.

 

இது குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். 21 பேர் கைது செய்யப்பட்டு 20 பேர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. விடுபட்ட நபர் வழக்கு விசாரணையின் போதே இறந்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இவ்வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

இதன்படி, கந்தன், ஆறுமுகம், சரண்ராஜ், சுரேந்தர், ஓசைமணி உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் 10 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார்.

 

 

Next Story

யார் முதலில் முந்துவது என போட்டி - பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து

Published on 11/10/2022 | Edited on 11/10/2022

 

school vans incident students cuddalore district



பள்ளி வாகனங்கள் ஒன்றையொன்று முந்தும் முயற்சியில் ஒரு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். 

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள கோபாலபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்களை ஏற்றிக் கொண்டு அப்பள்ளியைச் சேர்ந்த இரு வேன்கள் போட்டிப்போட்டு வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு வேன் முந்த முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில், 25 மாணவ, மாணவிகள் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

 

இதற்கிடையே பள்ளி வாகன ஓட்டுநர்கள் பொறுப்பின்றி செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி கோ.ஆதனூர் கிராம மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். 

 

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.