Skip to main content

பழனி முருகன் கோவிலுக்கு புதிய ரயில் தேவை! பாராளுமன்றத்திற்கு குரல் கொடுத்த எம்.பி.! 

Published on 14/12/2021 | Edited on 14/12/2021

 

Palani Murugan Temple needs a new train! MP who gave voice to Parliament!

 

திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி தொடர்ந்து திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல், நத்தம், ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதி மக்களுக்காகத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகிறார். 

 

நேற்று (13/12/2021) நடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது தொகுதி மக்களுக்காக பாராளுமன்றத்தில் வேலுச்சாமி கூறியதாவது, "கொடைக்கானலில் இருந்து மூணாறு வரை சாலைத் திட்டத்தை அமல்படுத்தினால் மூணாறு வழியாக சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல்  சென்று வருவதற்கும், விவசாயிகள் சென்று வருவதற்கும், வசதியாக இருக்கும். அதுபோல் திண்டுக்கல்- திருச்சி போகும் சீலப்பாடி பைபாஸ் சாலையில் தொடர்ந்து விபத்துக்கள் நடந்து வருவதால் மேம்பாலம் அமைக்க வேண்டும். 

 

அதுபோல் திண்டுக்கல்லுக்கும், பழனிக்கும் இடையே 10 சப்வே உள்ளது. இதில் மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பி விடுவதால், போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது அரண்மனைபுதூர் என்ற ஒரு கிராமமே இந்த சப்வே மூலம் மூழ்கி கிடக்கிறது. அதுபோல் கொடைரோட்டில் அனைத்து ரயில்கள் நின்று செல்ல வேண்டும். இந்த கொடைரோட்டிலிருந்துதான் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் போய் வருவதால், அனைத்து ரயில்களும் நின்று சென்றால் சுற்றுலா பயணிகளுக்கும் வசதியாக இருக்கும். 

 

அதுபோல் திண்டுக்கல்லிலிருந்து பழனி செல்லும் வழியில் தாராபுரம், ஆயக்குடி, சத்திரப்பட்டி ஆகிய பகுதிகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும். அதுபோல் தமிழ்நாட்டிலேயே பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து போகிறார்கள். இப்படி வரும் பக்தர்களுக்கு போக்குவரத்து ஏற்பட்டு வருகிறது. அதனால் பழனியில் இருந்து சென்னை எழும்பூர் புதிய ரயில் விட வேண்டும். அதன்மூலம் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்" என்று கூறினார். 

Palani Murugan Temple needs a new train! MP who gave voice to Parliament!

அதன்பின் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சந்தித்து தனது கோரிக்கை மனுக்களையும் கொடுத்தார். அதேபோல் திண்டுக்கல்லில் இருந்து சபரிமலைக்கு புதிய  ரயில் விட வேண்டும் என்ற கோரிக்கையும் எம்.பி. வேலுச்சாமி முன்  வைத்திருக்கிறார். இந்த புதிய ரயில் கொடைரோட்டிலிருந்து நிலக்கோட்டை வத்தலக்குண்டு வழியாக தேனி, கம்பம், கூடலூர், குமுளி போய் கோட்டயம் செல்லும்.  இதன்மூலம் ஐய்யப்ப பக்தர்கள் பெரும்பாலானோர் பயனடையவும் வாய்ப்புள்ளது. 

 

ஏற்கனவே, மதுரையில் இருந்து சென்னை செல்லும் தேஜா எக்ஸ்பிரஸ் கொடைரோட்டில் மட்டும்தான் நின்று சென்றது. திண்டுக்கல்லில் நிற்க வேண்டும் என்று வர்த்தகர் சங்கத்தினரும், பொதுமக்களும் வலியுறுத்தி எம்.பி.வேலுச்சாமியிடம் மனு கொடுத்தனர். 

 

அதை தொடர்ந்து, எம்.பி.யும் ரயில்வே அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்ததின் பேரில் திண்டுக்கல் ஜங்சனிலும் தேஜா ரயில் நின்று சென்று வருகிறது. அதுபோல் திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ஒட்டன்சத்திரத்திலும் நின்று செல்ல வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்ததின் பேரில் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதால் கூடிய விரைவில் அமிர்தா எக்ஸ்பிரஸ் ஒட்டன்சத்திரத்திலும் நின்று செல்ல இருக்கிறது. இப்படி தொகுதி மக்களுக்காக தொடர்ந்து பாராளுமன்றத்திலும் அமைச்சரிடமும் கோரிக்கை வைத்து அந்த கோரிக்கைகளை தொகுதி மக்களுக்காக நிறைவேற்றி வருகிறார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சோனியா காந்தி எம்.பி.யாக பதவியேற்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Sonia Gandhi sworn in as MP

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 54 பேர் நேற்றுடன் (03.04.2024) ஓய்வு பெற்றனர். அவர்களில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒருவர் ஆவார். இதன் மூலம் மன்மோகன் சிங்கின் 33 ஆண்டுகால அரசியல் பயணம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இவருடன் 9 மத்திய அமைச்சர்களும் ஓய்வு பெற்றனர். அதே சமயம் இந்த காலியிடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி இன்று (04.04.2024) பதவியேற்றார். சோனியா காந்திக்கு மாநிலங்களவை தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜெகதீப் தங்கர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதே போன்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி குமார் வைஷ்ணவ் உள்ளிட்ட 14 பேர் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டனர். கடந்த 1999 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி, கர்நாடக மாநிலம் பெல்லாரி தொகுதியில் இருந்து முதன் முதலாக சோனியா காந்தி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 5 முறை மக்களவைத் தேர்தலில் வென்ற சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது பதவியேற்றுள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சோனியா காந்தியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இது குறித்து மல்லிகார்ஜுன் கார்கே தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “இன்று ராஜ்யசபாவில் பதவியேற்று, தனது புதிய இன்னிங்ஸைத் தொடங்கும் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எழுச்சி மிக்க எனது நல்வாழ்த்துகள். பாராளுமன்ற உத்தியை தொடர்ந்து வழிநடத்தும் அவர்,  மக்களவையில் 25 ஆண்டுகள் பணியாற்றி முடித்துள்ளார். இப்போது நானும் எனது சக உறுப்பினர்களும் ராஜ்யசபையில் அவரது வரவை எதிர்பார்க்கிறோம். அவரது பதவிக் காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“பச்சை துரோகம்” - விஜய் சேதுபதியின் விழிப்புணர்வு வீடியோ

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
vijay sethupathi election video

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் அன்றே நடைபெறும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. தி.மு.க, காங்கிரஸ், இடது சாரிகள், வி.சி.க, உள்ளிட்ட சில கட்சிகள் இந்தியா கூட்டணியிலும் அ.தி.மு.க, தே.மு.தி.க தனி கூட்டணியிலும் பா.ஜ.க, பா.ம.க தேசிய ஜனநாயக கூடணியிலும் தேர்தலை எதிர்கொள்கின்றனர். இதையொட்டி தங்கள் கட்சி வேட்பாளர்களுடன் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.  

இந்த நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என விஜய் சேதுபதி வலியுறுத்தும் தேர்தல் விழிப்புணர்வு வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் விஜய் சேதுபதி பேசியதாவது, “நாம எல்லாரும் ஆசையா எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த தேர்தல் வந்துவிட்டது. வழக்கமாக தேர்தல் வரும்போது எல்லாருக்கும் ஒரு மனப்பான்மை இருக்கும். யார் வந்தா நமக்கென்ன... இல்லை யார் காசு கொடுக்கிறாங்களோ அவங்களுக்கு ஓட்டு போடுவோம்... ஒட்டு போட்டு ஒன்னும் ஆகப் போறதில்லை... இது போன்ற மனநிலையை தூக்கி ஓரம் வைச்சிடுங்க. நாம, நமக்காக இல்லைன்னாலும் நம்ம குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நம்ம அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமா ஓட்டு போட வேண்டும்.   

காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது எவ்ளோ பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது. உங்களுக்கு புடிச்சவங்க புடிக்காதவங்க யாராக இருந்தாலும் சரி, அவுங்க யார் என்னன்னு தெரிந்து கொள்ளுங்கள். அவங்களால நமக்கு என்ன பயன் என்பதை விட இந்த நாட்டிற்கு என்ன பயன் என்பதை யோசித்து பாருங்க. அதில் நம்முடைய சுயநலமும் இருக்கு. நாமெல்லாம் சேர்ந்தது தானே நாடு. 

நாம் என்பது இன்றைக்கும் மட்டும் பார்ப்பதா, அல்லது நாளைக்கு நம்முடைய குழந்தைகள் வாழப்போகிற எதிர்காலைத் பற்றியும் சிந்திக்கிறதா. நம்முடைய குழந்தைகளுடைய எதிர்காலம் ரொம்ப முக்கியம். நம்மை ஆளப்போவது யார். ஆட்சியை யார்கிட்ட கொடுக்கப் போறோம். அவங்களுக்கு என்ன தகுதி இருக்கு. இதுக்கு முன்னாடி அவுங்க என்ன செஞ்சிருக்காங்க, என்ன சொல்றாங்க என்பதை அலசி ஆராஞ்சி ஓட்டு போடுங்க. இதுவரை அரசியல் செய்திகளை கேட்கவில்லை என்றாலும் பேசவில்லைன்றாலும் பார்க்கவில்லை என்றாலும் சரி, இன்றையிலிருந்து ஓட்டு போடுகிற நாள் வரை அரசியல் பற்றி பேசுங்க. தெளிவா, சிந்தித்து செயல்பட்டு வாக்களியுங்க” என்றார்.