Skip to main content

பள்ளிகளைத் தொடர்ந்து கல்லூரிகளிலும்! தொடரும் சாதிய வன்மம்!

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

Pachayapan college issue

 

பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியரின் சாதி ரீதியான ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

“சுதந்திரம் என்பதுதான் மனித வாழ்வின் குறிக்கோள் என்றால், ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் மேல் ஆதிக்கம் செலுத்துவதை ஒழிப்பதே சுதந்திரத்தின் பொருள்” என்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர்.

 

சங்க இலக்கியம் கற்று, சாதி அற்ற சமூகத்தை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய தமிழ்த்துறை தலைவராக பணியாற்றிவரும் பேராசிரியை, அதற்கு எதிர் மறையாக தனது துறை சார்ந்த மாணவர் ஒருவரிடம் சாதிய ரீதியாக பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பாக்கியுள்ளது. அந்த செல்போன் ஆடியோவில். “நீங்க ரொம்ப நல்ல பையனாம், அனைத்து பேராசிரியர்களும் நற்சான்றிழ் கொடுக்கிறார்கள், அதனால்தான் நான் உன்னிடம் பேசுகிறேன். நீ என்ன சாதி என்பது கூட எனக்கு தெரியாது. ஆனாலும் நீ என்ன சாதி” என அந்த ஆசிரியை கேட்கிறார். 

 

அதற்கு அந்த மாணவன், “நான் பி.சி மேடம்” என்கிறான். அதற்கு அந்த ஆசிரியை, “எனக்கு மாணவர்களின் முகத்தை பாரத்தாலே யார் என்ன என்பது தெரிந்துவிடும்” என்கிறார். அதனைத் தொடர்ந்து தனது துறை சார்ந்த சில மாணவர்கள் என்ன சமூகத்தை சேர்ந்தவர்கள் என கேட்கவே, அதற்கு மாணவர் அவர்கள் யாரும் அந்த சாதியை சேர்ந்தவர்கள் இல்லை என்கிறான். 

 

அதற்கு மீண்டும் வேறு பெயர்களை சொல்லி இவர்கள் என்.எஸ்.எஸ். கேம்புக்கு போயிருக்கிறார்களா என்று கேட்டுவிட்டு, ஒரு மாணவனை குறிப்பிட்டு அந்த மாணவர் என்றதும். ஆமா மேடம் அந்த மாணவர் அந்த சமூகத்தை சார்ந்தவர்தான். ஆனால் அவனெல்லாம் அப்படி இல்லை, அவன் வேலை உண்டு, அவன் உண்டு என இருப்பான். அதற்கு அந்த ஆசிரியை இன்னும் சில மாணவர்களின் பெயர்களை சொல்லி அந்த மாணவர்களிடம் கொஞ்சம் தள்ளியே இரு, உசாரா இரு, என சொல்லும் விஷயம் மாணவர்களின் மத்திலும் மக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்த ஆசிரியை ஏற்கனவே கடந்த வருடம் கொரோனா காலகட்டத்தில்  கல்லூரி வருகை பதிவேடை வைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த மாணவர்களை மட்டும் தேர்வு எழுத விடாமல் செய்துள்ளார். அந்த மாணவர்களை தற்போது தேர்வு எழுதினார்களா இல்லையா என்பதையும் தற்போது அந்த ஆடியோவில் கேட்டுள்ளார். 

 

 

இந்த பிரச்சனை மட்டும் இல்லாமல், தமிழ்த் துறையில் பணிபுரியும் பேராசிரியர்கள் சாதியினை தெரிந்துகொண்டு அந்த பேராசிரியர்களிடம் பேசவே மாட்டார் என்றும் சொல்லப்படுகிறது. அவர்களிடம் வெறும் எழுத்து வடிவிலான சர்குளர் மூலமே பேசுவார் என்றும் சொல்லப்படுகிறது. இதை எல்லாம் முன்வைத்து அந்த ஆசிரியயை கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து காஞ்சிபுரம் கல்லூரிக்கு அவரை மாற்றியுள்ளனர். அதன்பிறகு உயர் நீதிமன்றம் சென்று மீண்டும் பச்சையப்பன் கல்லூரிக்கே வந்துள்ளார். தற்போது மீண்டும் இதே சிக்கலில் சிக்கியுள்ளார். 

 

இது குறித்து கல்லூரி நிர்வாகம் வருகின்ற திங்கள் கிழமை அன்று கல்லூரி கமிட்டி கூட்டப்பட்டு அந்த கமிட்டியின் மூலமாக ஆசிரியை மீதான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் பிரபல கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
chennai mit college issue

சென்னை குரோம்பேட்டையில் எம்.ஐ.டி. (M.I.T.) என்ற பெயரில் பிரபல பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் கல்லூரிக்கு இன்று (06.03.2024) மாலை மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கல்லூரி நிர்வாகத்தினர் சார்பில் இது குறித்து சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் சென்னை காவல்துறையின் சார்பில் மோப்ப நாயை கொண்டும் சோதனை மேற்கொண்டுள்ளனர். பிரபல கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாகச் சென்னையில் உள்ள தமிழ்நாடு தலைமைச் செயலகம் மற்றும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதும், இன்று காலை சென்னையில் உள்ள கோயில்களில் வெடிகுண்டு வெடிக்கும் என பெங்களூரு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

மர்மமான முறையில் மாணவர் மரணம்; விசாரணை நடத்த போலீஸார் தயக்கம்?

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
Police reluctant to investigate student passed away in Vellore

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ளது கார்க்கூர் கிராமம். இங்கு  இயங்கி வரும் பாலாறு வேளாண்மை கல்லூரியில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கிரிஷின் நகரை சேர்ந்த ரவி எலக்ட்ரிஷியன் என்பவர் இளைய மகன் பிரதாப் (18) என்பவர் முதலாமாண்டு  படிக்கிறார். கல்லூரி ஹாஸ்டலில் தங்கி படித்து வந்துள்ளார். கடந்த 10-ந் தேதி அரக்கோணம் சென்று தனது வீட்டில்  பெற்றோரை பார்த்து விட்டு மீண்டும் பிப்-12ஆம் தேதி திங்கள் கிழமையன்று கல்லூரிக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிப்ரவரி 17 ஆம் தேதி காலை சுமார் 6.00 மணியளவில் கல்லூரி ஹாஸ்டல் வார்டனிடம் ஜெராக்ஸ் எடுக்க அருகிலுள்ள மேல்பட்டி கிராமத்திற்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் காலை 7.00 மணியளவில் மேல்பட்டி ரயில் நிலையத்திலிருந்து சிறிது தூரத்தில் காட்பாடி செல்லும் ரயில் மார்க்கம் பகுதியில் இருப்பு பாதையில் மாணவன் பிரதாப் தலை மற்றும் முகத்தில் படுகாயத்துடன் மயங்கி கிடந்ததை பார்த்த ரயில்வே பணியாளர்கள் மேல்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக  மேல் பட்டி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் குப்பன் மற்றும் போலீசார் விரைந்து சென்று படுகாயத்துடன் கிடந்த மாணவன் பிரதாப்பை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். 

அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று உயிரழந்தார். பாலாறு வேளாண்மைக் கல்லூரி, முன்னாள் அமைச்சர் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக மாவட்டச் செயலாளருமான கே.சி வீரமணிக்குச் சொந்தமானது. இந்த கல்லூரி மாணவர்தான் இறந்துள்ளார், இது கொலையா? தற்கொலையா என தீவிரமாக விசாரணை நடத்த வேண்டிய போலீசார் இதில் மெத்தனமாக விசாரணை நடத்துகின்றனர். இது முன்னாள் அமைச்சரின் கல்லூரி என்பதால் அதற்கு எந்த சிக்கலும் வந்துவிடக்கூடாது என்பதற்காக இப்படி நடப்பதாக இறந்த மாணவனின் பெற்றோரும், உறவினர்களும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.