Skip to main content

ஒயிலாட்ட கலைக்கு உயிரூட்டிய கலைமாமணி கைலாசமூர்த்தி இயற்கை எய்தினார்...

Published on 11/07/2020 | Edited on 11/07/2020

 

Oyilattam artist Kalaimamani Kailasa moorthy passes away

 

ஒயிலாட்டக்கலைக்கு உயிர் கொடுத்து, 50 ஆண்டுகாலம் அதற்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட கலைமாமணி பொ.கைலாசமூர்த்தி நேற்று (ஜூலை 10) மாலை மாரடைப்பால் உயிரிழந்தார்.

 

"கார்பரேஷன் குழாயிலே வாட்டரைக் காணாம், ஆபரேசன் தியேட்டருலே டாக்டரைக் காணாம்.." இப்படி சமூக அவலத்தை தனது நூற்றுக்கணக்கான பாடல்களின் மூலம் தமிழக வீதிகள் முழுக்க பயணம் செய்தவர் கலைமாமணி பொ.கைலாசமூர்த்தி. தூத்துக்குடியை சேர்ந்த கைலாசமூர்த்தி அரசு ஊழியராக பணியாற்றி ஒய்வு பெற்றவர். அரசு ஊழியராக இருந்தாலும் அவரது உயிர் மூச்சாக இருந்தது ஒயிலாட்ட கலைதான்.

 

காலத்தால் மறைந்து போகாத மண்ணின் கலை என்றால் அது ஒயிலாட்ட கலைதான். தமிழ் நிலப்பரப்பில் அதை வாழவைத்து அந்த கலையை அழியாமல் காப்பாற்றியதோடு, ஆயிரக்கணக்கான மாணவர்களை, இளைஞர்களை தமிழகம் முழுக்க ஒயிலாட்ட கலைஞர்களாக உருவாக்கியவர் கலைமாமணி கைலாச மூர்த்தி.

 

இடதுசாரி இயக்கமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மீது பற்றுள்ளவர். அரசு ஊழியராக இருந்த காரணத்தினால், கட்சி உறுப்பினராக அப்போது இல்லை. ஆனால் கட்சியின் துணை அமைப்புகளான இந்திய ரஷ்ய நட்புறவுக் கழகம், தொழிற்சங்கம் ஆகியவற்றில் இணைந்து செயல்பட்டார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தில் தொடர்ந்து பயணித்தவர்.

 

கம்யூனிஸ்ட் கட்சி மாநாடுகள், தொழிற்சங்க மாநாடுகள், கலை இலக்கிய பெருமன்ற நிகழ்ச்சிகள் மற்றும் அனைத்து மாநாடுகளிலும் மேடையில் இவரது ஒயிலாட்ட நடனமும், பாடலும் இல்லாமல் இருக்காது. தமிழகம் முழுக்க எங்கெல்லாம் கட்சி அல்லது துணை அமைப்புகளின் நிகழ்ச்சி நடக்கிறதோ, அங்கெல்லாம் ஒயிலாட்ட கலையை மேடை ஏற்றியவர்.

 

அப்படிப்பட்ட இவரை தமிழக அரசு, கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது. 70 வயதை கடந்தாலும் தொடர்ந்து கலைத்துறையில் பயணித்து வந்தார். கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில துணை தலைவராகவும் இருந்தார்.  

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தோழர் நல்லகண்ணு மேடையில், கைலாசமூர்த்தி கலை நிகழ்ச்சி நடந்தால் அதனை முழுமையாக அமர்ந்து பார்ப்பார். அதுமட்டுமல்லாமல் சில பாடல்களை கைலாசமூர்த்தியைப் பாடச் சொல்லி அதனை முழு ஈடுபாட்டுடன் கேட்பார்.

 

தமிழகத்திலுள்ள இடதுசாரி இயக்கங்கள், கலை இலக்கியவாதிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் என எல்லோராலும் அறியப்பட்ட கைலாசமூர்த்தி நேற்று (ஜூலை 10) மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு தூத்துக்குடி மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.

 

கைலாச மூர்த்தியின் இறப்பு ஒயிலாட்ட கலைக்கு பேரிழப்பு. அவர் மறைந்தாலும், அவரது பாடல்கள் அவரது குரலில், தமிழ் மண்ணில் ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரால் உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள், அந்த ஒயிலாட்ட கலையை வாழ்வித்து தமிழகத்தில் நிலை நிறுத்துவார்கள் என்று அவரது தோழர்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மோடியின் நாய்க்குட்டிபோல் அமலாக்கத்துறை செயல்படுகிறது” - முத்தரசன்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Mutharasan criticism of BJP

புவனகிரி பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் சிதம்பரம் நாடளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவு திரட்டி பானைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 

அப்போது பேசிய அவர், “அமலாக்கத்துறை மோடியின் நாய்க்குட்டி போல செயல்படுகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு அபராதம் விதித்துள்ளனர். சம்பந்தபட்ட துறை அதிகாரிகளை மோடி, அமித்ஷா ஆட்டி படைக்கிறார்கள். மோடி, தேர்தலுக்குப் பிறகு திராவிட முன்னேற்ற கழகம் இருக்காது என கூறுகிறார். உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை அழித்து விடுங்கள் என கூறுகிறார். இதற்கு அர்த்தம் என்னவென்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வந்து பாரதிய ஜனதா கட்சியை மட்டும் வைத்துக்கொண்டு சர்வாதிகாரி போல் செயல்படுவதற்காக அனைத்து கட்சிகளையும் ஒழிக்க திட்டமிட்டுள்ளார்.

மோடியின் தேர்தல் அறிக்கையில் சொன்னதை எதையுமே செய்யவில்லை. விவசாயிகளுக்கு ஆதார விலை, சாமிநாதன் கமிஷன் பரிந்துரை அமல்படுத்தவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. தற்போது கச்சத்தீவைப் பற்றி பேசுகிறார். கச்சத்தீவை கடந்த 10 ஆண்டுகளில் மீட்பதற்கான மோடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை அவர் யாருக்கு பேன் பார்த்துக் கொண்டு இருந்தார்.

மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்துகிறார். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இதனை திமுக, கம்யூனிஸ்ட் பிரச்சினையாக பார்க்காமல் பொது பிரச்சினையாக பார்க்க வேண்டும்.  மோடியிடம் சமூக நீதியை எதிர்பார்க்க முடியாது. அப்படி சமூக நீதி அவர்களுக்கு இருந்தால், இட ஒதுக்கீட்டை அமல்படுத்துகிறேன் என கூறியதால் வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்திருக்கமாட்டார்கள்.

பாஜக பத்தாண்டுகளில் செய்த தவறு கொஞ்ச நஞ்சமல்ல. சிறுபான்மை மக்களுக்கு எதிராக, சிறு குறு தொழில் நடத்துபவர்களுக்கு எதிராக, விவசாயிகளுக்கு எதிராக 3 சட்டங்கள் நிறைவேற்றினார்கள். தொழிலாளர்களுக்கு எதிராக சட்டங்களை கொண்டு வந்தார்கள்.

இதற்கு அதிமுக ஆதரவளித்தது. தற்போது ஜனநாயகத்தை காப்போம் என  ஏமாற்று வேலை செய்கிறது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு பானைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். இவருடன் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் மணிவாசகம்,  மாவட்டச் செயலாளர் துரை, மாவட்ட துணைச் செயலாளர் சேகர், வட்டச் செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

Next Story

“இந்திய அளவில் சமூக நீதி காப்பாற்றப்பட வேண்டும்” - பாஜகவை விளாசிய து.ராஜா

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cpi National Secretary D. Raja has severely criticized the BJP

தமிழகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கடி வருவதற்கு வெட்கப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தியா கூட்டணி சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த து.ராஜா, “அகில இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இது மாறி இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் பாஜக நாசகார செயலில் ஈடுபட்டு வருவதால் இந்தியா ஒரு ஜனநாயக குடியரசாக நீடிக்குமா என்ற கேள்வி எழுகிறது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசாக, மக்கள் நலன் காத்திட, மாநில உரிமைகளை மதித்து செயல்படுகிற ஒன்றிய அரசாக இந்தியா தொடர்ந்து நீடிக்குமா? என்ற கேள்வியும் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் தான் இந்தத் தேர்தலை எல்லோருமே முக்கியமான தேர்தலாக கருதுகிறோம்.

பாஜகவை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும். மதவெறி பாசிசத்தை இந்தியாவில் நிலை நிறுத்த வேண்டும் எனவும், மதச்சார்பற்ற நாடு என்ற நிலையை மாற்றி மதவாத நாடாக்க முயன்று வருகிறது.  சட்ட நெறிகளை எல்லாம் அழித்து ஒழித்து விட்டு ஏற்றத்தாழ்வுகளை அப்படியே கட்டி காப்பாற்ற வேண்டும். ஆர்எஸ்எஸ் அஜண்டாவை நிறைவேற்றுகிற ஒரு கட்சியாக தான் பாஜக செயல்படுகிறது. இதற்கு பிரதமராக மோடி செயல்படுகிறார்

மோடி தமிழ்நாட்டுக்கு தற்போது அடிக்கடி வருகிறார். அவர் பிரதமர் என்ற முறையில் தேர்தல் காலத்தில் மக்களின் வாக்குகளைப் பெற வருவதற்கு வெட்கப்பட வேண்டும்.  தமிழ்நாடு பல பேரிடர்களை சந்தித்தபோதெல்லாம் மோடி வரவில்லை. தமிழ்நாட்டின் மீது அக்கறை இல்லை, நிவாரண நிதி கூட கொடுக்கவில்லை.

இந்தியாவில் முன்பிருந்ததை  விட அந்நிய கடன் அதிகரித்துள்ளது. இது பற்றி மோடி பொது வெளியில் விவாதிக்க தயாரா?  மோடி ஆட்சியில் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் வளர்ச்சி பெற்று இருக்கிறார்கள். மக்களுக்கு  வளர்ச்சி இல்லை.  மோடியின் அரசு மக்கள் விரோத அரசாக நாட்டு நலனில் அக்கறை இல்லாத ஒரு அரசாக, பெரு முதலாளிகளின் எடுபிடி அரசாக மாறிவிட்டது.  மதச்சார்பின்மையை நிலை நாட்ட வேண்டும் என்பதற்காக இந்தியா கூட்டணியில் இருக்கிற கட்சிகள் தொடர்ந்து போராடுகிறோம். இந்தத் தேர்தல் களத்தில் மக்களிடம் வாக்கு கேட்கின்றோம்.

பாட்டாளி மக்கள் கட்சி பாஜகவோடு  அணி சேர்ந்து இருப்பது பெரிய துரோகம். பாட்டாளிகள் என்று சொல்லிக்கொண்டு பாஜகவோடு சேர்வது எவ்வளவு பெரிய கொள்கை மோசடி, துரோகம் என்பதை இன்றைக்கு மக்கள் கேட்கிறார்கள்.  அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இருக்கிற அதிமுக தமிழர்களின் உரிமைகளை மீட்போம் என்கிறார்கள். தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட போது இவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? மோடியை ஆட்சியில் இருந்து அகற்றவேண்டும் என்று எடப்பாடி பேசுவாரா?

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தியாவை காத்திட, பாசிசத்தை வீழ்த்திட  ஸ்டாலின் அழைக்கிறேன் என்று குரல் கொடுத்து இருக்கிறார். அது அவருடைய குரல் மட்டுமல்ல,  தமிழ்நாடும் இந்தியாவும் ஒன்று பட்டு முன்னேற வேண்டும் என்று விரும்புகிற எல்லோரும் எழுப்புகிற குரல்.  இந்தியாவைக் காத்திட பாசிசத்தை வீழ்த்திட நாம் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும்.  ஒன்றுபட்டு போராட வேண்டும். இந்தப் பின்னணியில் தான் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்திய அளவில் சமூக நீதி காப்பாற்றப்பட வேண்டும், ஜாதியை உடைத்து தகர்த்தெறிய வேண்டும், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று  போராடுகிற முன் களப்போராளியாக தொல்.திருமாவளவன் இருக்கிறார். எனவே அவருக்கு சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் வாக்களிக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்” என்றார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, சிபிஐ மாநில கட்டுப்பாட்டுக் குழு மணிவாசகம், மாநில நிர்வாகக் குழு மருத்துவர் ரவீந்திரநாத், மாநிலக்குழு மருத்துவர் சாந்தி, மாவட்ட செயலாளர் துரை, மாவட்ட துணைச் செயலாளர் வி.எம் சேகர், வட்டச் செயலாளர் தமீம் முன் அன்சாரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.